Monday 24 March 2014

குஜராத்தில் உண்மை நிலை என்ன புள்ளி விவரங்கள் பேசுகின்றன தி வீக் இதழ் அம்பலப்படுத்துகிறது




குஜராத் மாடல் என்ற பெயரில் பொய்களும், புனை சுருட்டும் எவ்வாறு விலை போகின்றன என்பதை மல்லிகா சாராபாய் என்ற எழுத்தாளர் தமது கட்டுரையில் விளக்கமாகவும், புள்ளி விவரங்களுடனும் எவ்வாறு விவரித் துள்ளார் என்பதைப் பார்ப்போம்.

எல்லா புள்ளி விவரங்களும் அரசு தரப்பிலிருந்து பெறப்பட்டவை என்பதும், அவற்றை முழுவதுமாக அச்சேற்றினால் இடம் போதாது என்பதால் சுருக்கமாகவே விளக்கியுள்ளார். இதன் மூலம் தொலைக் காட்சிகளும், பத்திரிக்கைகளும் எவ்வாறு பெரிதாக்கி பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுகின்றன என்பதையும் சில சமயம் தமது வாசகர்களே இதை நம்பி விடுகின்றனர் என்பதையும் தோலுரித்துக் காட்டுகின்றார்.

கடந்த பத்தாண்டுகளில் 60,000 சிறு தொழிற் கூடங்கள் குஜராத்தில் மூடப் பட்டிருக்கின்றன. சுமார் ஆறு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பன்னாட்டு (அந்நிய முதலீடு) நிறுவனங் களை முதலீடு என்று எடுத்துக் கொண் டால் குஜராத் அய்ந்தாவது இடத்திலும், விவசாய உற்பத்தியில் நாட்டில் எட்டாது இடத்திலும் உள்ளது. 2005 - 2006 இலி ருந்து 2010 - 2011 வரை நாட்டின் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் (GSDP) 3.44 விழுக்காடு மட்டுமே என்பதும் அதை இரண்டு மடங்காக உயர்த்திக் காட்டி இருப்பது முழுப்பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைக்க முயலுவது மாகும். நாட்டிலேயே விவசாயப் பொருட்களும், இரசாயன உரங்களும் மிக உயர்ந்த மதிப்புக் கூட்டு வரி 5 விழுக்காடு என்பதும் உண்மையான ஒன்று.

குஜராத்தில் 28 மாவட்டங்கள் உள்ளன அவற்றில் 225 வட்டங்கள் உள்ளன. அதில் 57 வட்டங்கள் மின்சாரமின்றி இருண்டு கிடக்கின்றன.

2011 புள்ளி விவரங்களின்படி 4,55,885 மின்சார விண்ணப்பங்கள் நிலுவையி லுள்ளன. 1995-இல் பாரதீய ஜனதா ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்கு முன் 10,000 கோடி ரூபாய் கடன் இருந்தது. அது மோடி 2001-இல் பதவி ஏற்ற போது ரூ. 45,301 கோடியாக இருந்தது. 2012 டிசம்பரில் அது ரூ. 1,38,978 கோடியாக உயர்ந்தது. அது மேலும் 2015 - 2016 இல் 2,07,695/- கோடி ரூபாயாக உயரும் என்று எதிர்ப்பாக்கப் படுகின்றது.

1990-1995 ஆண்டுகளில் சுகாதாரத் துறைக்கு செலவிடப்பட்ட தொகை 4.25 விழுக்காடு என்றும் அது 2005-2010 இல் 0.77 விழுக்காடாகக் குறைந்துவிட்டது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின் றன. அதாவது கீழிருந்து மேலாக இரண்டாவது இடத்திலுள்ளது குஜராத். அனிமியா என்ற நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் 20 பெரிய மாநிலங்களில் குஜராத்தில் தான் அதிகமுள்ளனர். அனி மியா நோயால் பாதிக்கப்பட்ட குழந் தைகள் 16-ஆவது இடத்திலும், ஊட்டச் சத்துக் குறைவாக வாடும் குழந்தைகள் வாழும் பெரிய மாநிலங்களில் 15-ஆவது இடத்திலுள்ளது. குழந்தைகள் ஊட்டச் சத்தின்றி இறப்பு விகிதம் அதிகம் நிகழ்வது குஜராத்தில் தான் என்பதும் அது கிராமங் களில் 14-ஆவது இடத்திலும், நகரங்களில் 10-ஆவது இடத்திலும் உள்ளது.

The Global Hunger Report  - பசியால் வாடுபவர்கள் 17 மாநிலங்களில் குஜராத் 13-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய பிரதேசம், ஜார்கண்ட், பீகார் போன்ற மாநி லங்கள் வரிசையில் குஜராத்தும் மிகவும் அஞ்சத்தக்க மாநிலமாக உள்ளது.

2001 ஆம் ஆண்டு 32 விழுக்காடு மக்கள்தான் ஏழைகள். அது பா.ஜ.க  ஆட்சியில் 2011-இல் 39.5 விழுக்காடு என்பதும் ஒரு சாதனை தானே! NSSO நாட்டில் மிகக்குறைந்த அளவில் அதா வது 8.6 விழுக்காடே கழிப்பறைகளைப் பயன்படுத்துவதில் நமோ மாநிலம் 10-ஆவது இடத்திலுள்ளது. 29 விழுக்காடு பேர் சுத்திகரிக்கப்படாத நீரை குடிக் கின்றனர். அவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 1.75 கோடிப் பேர் அசுத்த நீரை அருந்துகின்றனர்.

குஜராத்தில் 3716 வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற்றன. இருந்தாலும் படித்த இளைஞர்கள் வேலையின்றி இருப்போரின் எண்ணிக்கை 10 லட்சம். பதிவு செய்துள்ள மொத்த வேலையற் றோரின் எண்ணிக்கை 30 லட்சம். 12 ஆண்டுகளில் பூஜ்ஜியம் விழுக்காடுதான் வேலை வாய்ப்புகளில் வளர்ச்சி!

அண்மையில் CAG வெளியிட்ட அறிக்கையில் ரூ. 16,70,699/- கோடி நிதி மற்றும் நில மோசடியும் நடைபெற்றுள்ள தாகவும் அது பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

முஸ்லிம் மாணவர்கள் மற்றும் வணி கர்கள் மாநிலத்திலும், அரசு நடத்தும் கல்விக்கூடங்களிலும் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஆதிவாசி களின் நிலம் பெறுவதில் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை இடம் போதாமை கருதி விட்டுவிடுகின் றேன். என்னுடைய நோக்கமெல்லாம் எங்களைப் போன்றவர்கள் எவ்வாறெல் லாம் இந்தச் செயலற்ற அரசால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை படம் பிடித்துக் காட்டுவதுதான். ஏனெனில் எங்களைப் போன்றவர்கள் ஏமாற்றப்படு கிறோம் என்பதுதான் உண்மை.

ஆம் மோடி பெரிய வணிகர்களை, பண முதலைகளை மேலும் பணக்காரர் களாக ஆக்கி இருக்கின்றார். ஆம் அவர் சிறந்த பேச்சாளர், வெற்றிடத்தில் வீடு கட்டுபவர். குஜராத் மாடல் - மாதிரி அரசு முன்னேற்றம், டார்வின், ரகத்தைச் சார்ந்ததாகும். அதாவது மனிதன் குரங்கி லிருந்து பிறந்தான் என் சொல்லப்படும் காலத்தைச் சார்ந்ததாகும். இது எப்படி யென்றால் திறமையான மாணவர்களுக் குப் பாடம் சொல்லிக் கொடுத்து முதல் இடத்தைப் பிடிப்பதைப் போன்றதாகும். மற்றவர்கள் எக்கேடு கெட்டுப் போனா லும் போகட்டும் என்ற கொள்கை. ஆகவே இதைப் படிக்கும் வாசகர்கள் இப்படிப்பட்ட புளுகு மூட்டை குஜராத் மாடல் அரசு 95 கோடி ஏழை எளிய மக்களை வாழ வைக்கும் என்று நம்பு கின்றார்களா? இந்த குஜராத் மாடல், நம் இந்திய நாட்டிற்குத் தேவையா என் பதைச் சிந்திப்பீர்!

- தமிழ் மொழியாக்கம்: எம்.எஸ். முகம்மது ஈசா, சென்னை-1

No comments:

Post a Comment