Tuesday 4 March 2014

மோடி புளுகு - 6



தினமும், மோடி தனது சுய விளம் பரத்திற்காக, குஜராத் அரசின் பணத் தில், இந்தியாவிலுள்ள அனைத்து பிரபல பத்திரிகைகளிலும் முழு பக்க விளம்பரங்களாக தந்து கொண்டிருக் கிறார்.

பெண்கள் முன் னேற்றம், மேம்பாடு இவற்றில் குஜராத் சிறந்து விளங்குகிறதாம்? 

 இன்றைய பத்திரிகையில், குஜராத் தில் சிறந்த நிர்வாகம் தரும் மோடி, நாடு முழுவதும் அதனை தர இருக்கிறாராம்.

அரசின் மதம், முதலில் இந்தியாவாம், அரசின் புனித நூல், அரசியல் சட்டமாம்;
அரசின் ஒரே ஈடுபாடு, தேச பக்தி தானாம், அரசின் ஒரே அதிகாரம், மக்கள் தானாம்;

 அரசின் ஒரே வழிபாடு, 125 கோடி இந்திய மக்களின் நல்வாழ்வு தானாம்; அரசின் ஒரே கடமை, கூட்டு முயற்சியாம், அனைவரையும் உள்ள டக்கிய வளர்ச்சியாம்.  சொல்கிறார், மோடி, யார்?

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் மோடி தன்னை, இந்து தேசியவாதி என வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட மோடி தான் இந்தியா முதலில் என்கிறார்.

குஜராத் கலவரத்தில் ஈடுபட வைத்து, அப்பாவி பெண்களை சூறையாடுவதற்கு வழி வகை செய்த மாயா கோட்னானியை தனது அரசில் அமைச்சராக அமர்த்தி, பாதுகாத்தவர் சொல்கிறார், பெண்கள் மேம்பாட்டைப் பற்றி.

நடு ரோட்டில், கர்ப்பிணிப் பெண் ணின் வயிற்றைக் கிழித்து, உள்ளே கருவாக இருந்த உயிரைக் கொன்று, அந்த பெண்ணையும் கொன்ற, பாபு பஜ்ரங் கியை பாதுகாத்த மோடி சொல் கிறார், பெண்கள் மேம்பாட்டைப் பற்றி.

 இந்து மதம் தான் இந்தியாவின் மதமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஆர்.எஸ்,எஸ்-இன் சேவகன் என வெளிப்படையாக கூறிக்கொள்ளும் மோடி சொல்கிறார், அரசின் மதம், இந்தியா தான் என்று.

மனு சாஸ்திரம் தான் புனித நூல் எனச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ். பரி வாரின் ஆத்மார்த்த ஊழியன் மோடி சொல்கிறார், அரசின் புனித நூல் அரசியலமைப்பு சட்டம் தான் என்று.

தனது மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்க்ளுக்கு எந்த வித நல திட்டங்களும் செய்யாமல், அவர்களது நிலத்தை குறைந்த விலைக்கு தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் மோடி சொல்கிறார், அரசின் கடமை, அனைத்து மக்களை யும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் என்று. ஒரு முடிவோடு, மோடி களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார்.

எத்தகைய பொய் சொன்னாலும், ஊடகங்கள் அதனைக் கண்டு கொள்ளாது; ஆனால், மக்களும் அப்படி இருக்க வேண்டும் என மோடி நினைக்கிறார்.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment