Thursday 26 December 2013

ஒரு ஃபாசிஸ்டின் உண்மையான தோற்றம் (2)

- அமித் சென்குப்தா


 
(நரேந்திர மோடியை உற்று நோக்குபவர்கள் பலரும்  அவரைப் பற்றி திடுக்கிடச் செய்யும், மனதை உறைய வைக்கும் சில செய்தி களைக் கூறுவார்கள்)

காட்டாண்டித்தனமான இந்தக் கதைகளையெல்லாம் கேட்ட பிறகும்,  நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முன்னேற்றத்தை உருவாக்கியவர், புதிய வரலாறு படைத்தவர் என்று எப்படி கூறமுடிகிறது? வெற்றி பெற்ற ஒரு மாநிலத் தலைவர் என்றும், வருங்காலத்தில் மிகச் சிறந்த தேசத் தலைவராக விளங்கத் தகுதி படைத் தவர் என்றும் எப்படி கூற முடிகிறது? இந்தியர்களாகிய நாம் அந்த அள வுக்கு  நினைவாற்றல் அற்றவர்களாக இருக்கிறோமா? அல்லது இந்த மோடி ஒளிர்கிறார் என்று நாடகத்தனமாகக் கூறுவது, கார்ப்பரேட் நிறுவனங்கள் - ஊடகங்கள் கூட்டுறவின் மூலம் சில சுயநல சக்திகளால் கட்டிவிடப்பட்ட அரசியல் கழைக்கூத்துதான் என்பது வெளிப்படையாகத் தெரிவதாகும். இந்த உறவு எதிர்காலத்தில் அவர்கள் மீதே திரும்பி வந்து தாக்க இயன்றதாகவும் இருக்கலாம்.

இமயமலையில் ஒரே நாளில் நிலச் சரிவுகளில் இருந்து 15,000 குஜராத் மக்களை (வேறு மாநில மக்களே இல்லையா?)  மோடி காப்பாற்றினார் என்பது போன்ற கட்டுக் கதைதான் இதுவும். இப்போது அவர் எல்லா பெயர்களாலும் - மோசடி, மோசடி மோடி, நம்போ பம்போ ரம்போ என்ற அழைக்கப்படுகிறார். ஒத்திகை பார்க்காத சூழ்நிலைகளில் அவரது புகழ், பெருமை என்பது நீர்க்குமிழி போல உடைந்து போகிறது.  அரிய நேர்காணல் ஒன்றில் குஜராத் கலவரப் பேய் பற்றி மோடிக்கு தொலைக்காட்சி செய்தியாளர் கரன் தாபர் நினைவு படுத்தியதை இதற்கு எடுத்துக் காட் டாகக் கூறலாம்.  அவருடைய நேர் காணல்கள், செய்தி நிகழ்ச்சிகள் அனைத்துமே பணம் கொடுத்து ஏற்பாடு செய்யப்படுபவையே.  கரன் தாபரின் நேர்காணல் மட்டும் தவறி விட்டது. மக்கள் தீயில் எரிந்து மடியும்போது வயலின் வாசித்த நீரோ மன்னனைப் போன்ற  என்று மோடியை உச்சநீதிமன்றம் குறிப்பிட்டதைப் பற்றி தாபர்-மோடிக்கு நினைவுபடுத்தினார். திடீரென்று அவரது அகம்பாவம் மிகுந்த தோற்றம் மாறி அவர் கூனிக் குறுகிப் போய், தவறான ஆங்கிலத்தில் உளறிக் கொட்டி, ஏராளமாக வியர்த் துப் போய், குடிக்கத் தண் ணீர் கேட்டு உடனடியாக நேர்காணலை முடித்துக் கொண்டார்.

இது போன்ற நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலத்தினுள் நடப்பது அரிதிலும் அரிதா கும். தன்னை எதிர்ப்பவர் களை அவர் இரும்புக் கரம் கொண்டு அடக்கிவைத்தார். மாநிலத்தில் ஒரு மனிதரின் சர்வாதிகார ஆட்சி நிலவியது. தனது கோட்பாட்டு சகாக்களான ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. ஆட்களையும் கூட மோடி அழித்துள்ளார். வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாத, பேராசை கொண்ட சில கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு மான்ய உதவிகளைச் செய்து அவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொண்டார். இடையூறு இல்லாத நிகழ்ச்சிகளாக மோடியின் நிகழ்ச்சிகளை நேரடியாக ஊடகங்கள் ஒளிபரப்புவதற்கு இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊடகங் களுக்கு பணம் கொடுப்பதாக நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் பணம் கொடுத்து ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளே; செய்தி போல காட்டப்படும் விளம்பரங்களே இவை. உத்தரகண்ட் மாநில ஆங்கில நாளிதழ் வெளியிட்ட மோடி ஒரே நாளில் 15000 குஜராத்திகளை இமயமலையில் காப்பாற்றினார் என்ற போலியான செய்தியை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

ஷொராபுடீன் போலி என்கவுண்டர் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற மோடியின் நண்பரான அமித் ஷாவும் கூட மறுபடியும் சிறைக்குச் செல்லக் கூடும் என்ற நிலையிலும், சில நேரடி தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் மோடியுடன் கலந்து கொள்கிறார். பொதுமக்களின் பெரும் ஆதரவும் அன்பும் பெற்ற மாபெரும் தலைவர்கள் போலவும், மெத்தப்படித்த மேதாவிகள் போலவும்,  துறவு மனப் பான்மை கொண்டவர்கள் போலவும், தொலைநோக்குப் பார்வை கொண்ட வர்கள் போலவும்  மோடியும் ஷாவும் இந்நிகழ்ச்சிகளில் காட்டப்படுகின்றனர். இவர்களை நேரடி ஒலிபரப்பில் கண்ட வுடன் ஒட்டு மொத்த தேச மக்களும் மகிழ்ச்சியின் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டுவிடுவார்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள் போலும்

இந்த உறுதியற்ற நிலையிலும் நகர்ப் புறங்களில் உள்ள உயர்வருவாய்ப் பிரிவு மக்களிடையே கண்ணுக்குத் தெரியாத மோடி ஆதரவு உணர்வு ஒரு வேளை இருக்கக்கூடும். ஆனால் நாடு முழுவ திலும் தனக்கு பெருத்த ஆதரவு இருப்ப தாக மோடி நினைப்பது வெறும் கற் பனையே; இக்கற்பனைக்கு ஊடகத்தின் ஒப்புதலும் தந்திரமாக பெறப்பட்டுள்ளது. சிக்கல் நிறைந்த, பிளவுபட்ட சமூகம் கொண்ட, வறுமை தாண்டவமாடும், முன்னேற்றம் பெறாத இந்தியா போன்ற ஒரு நாட்டில்  ஊடகங்களாலும், ஒரு சில பணக்காரர்களாலும் தேர்தலில் வெற்றி பெற்றுவிடமுடியாது. 2004 இல் காட் டப்பட்ட இந்தியா ஒளிர்கிறது என்ன ஆயிற்று என்பது நினைவில் இருக் கிறதா?

கொலைகாரன் என்றும் கொலைகாரன் தான் என்ற பழமொழி ஒன்று இருக்கிறது. அந்த உண்மையை மக்கள் மறந்து விடுவதாகத் தோன்றவில்லை.  பாபர் மசூதியை இடித்துவிட்டு, பின்னர் நாடு முழுவதிலும் ரத்த ஆறு ஓடும் அள வுக்கு மதக் கலவரங்களை ஏற்படுத்தியவர்களும்,  ரத்தம் சிந்தும், பகை உணர்வு அரசியலை அறிந்தவர்கள்தான்.  தேவைகளும், புறக்கணிப்புகளும் மிகுந்த இந்த நாட்டின் மக்களை மத அடிப்படையில் பிரித்து வைத்து பயன் பெற நினைப்பது இயலக் கூடியது அல்ல. அப்படி செய்ய முடியுமானால், பா.ஜ.க.வும் ஆர்.எஸ். எஸ்.சும்தான் இன்று உத்திரப் பிரதேசத் திலும், இந்தியாவிலும் ஆட்சி செய்து கொண்டிருக்க வேண்டும். குறைந்தது ராமர் கோயிலாவது கட்டப் பட்டிருக்க வேண்டும்.

மோடியின் ஊடக நடிப்பைப் பற்றி பத்திரிகையாளர் சிமா முஸ்தபா அண் மையில் தெரிவித்துள்ள ஒரு சிறு கருத்து:

மோடி தனது சவக்குழியை தானே மெதுவாகவும், முறைப்படியும்  வெட்டிக் கொண்டிருக்கிறார்.  போடக்ஸ் மற்றும் சிலிகான் கொண்டு செய்யப்பட்ட இயந்திரமனிதனைப் போன்றவர்தான் மோடி.  ஒத்திகை பார்க்க முடிந்தாலும், அவரது செயலாற்றல் ஓர் அளவுக்கு உட்பட்டதுதான்.  குஜராத் மாநிலத் துக்கு வெளியே அவர் சவுகரியமாக இல்லாதது போல தோன்றுகிறது. டில்லி பல்கலைக் கழகத்தில் ஒரு நிகழ்ச்சியை ஒத்திகை பார்த்தபோது மட்டும் அவர் நன்றாக இருந்தார். நேர்காணல்களிலோ அல்லது ஒத் திகை பார்க்காத சூழ்நிலைகளிலோ, அவர் உடைந்து போகிறார். மற்றவர் களின் கருத்து சரியானதல்ல என்று கருதுபவர் மோடி. சாதாரணமாகக் கேட்கப்படும் கேள்விகள் கூட அவருக் குள் இருக்கும் இந்த உணர்வை, தன்னைப் போல் இல்லாதவர்கள் மீதான வெறுப்பை வெளிக்கொண்டு வந்துவிடும். தேர்தல் நடக்கும் காலம் நெருங்கும்போது, மோடி கட்சிக்கு பெரும் பலம் என்ற நிலை மாறி கட்சிக்கு பெரும் சுமை என்று பா.ஜ.க. காணவும் கூடும்.  நிச்சயமாக இந்திய நாடாவது அதைக் காணும்.

(நன்றி: கின்டில் ஆகஸ்ட் 15, 2013)
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

(தொடரும்)

Read more: http://www.viduthalai.in/page-2/72622.html#ixzz2oeXHG7hj

ஒரு ஃபாசிஸ்டின் உண்மையான தோற்றம் (1)

- அமித் சென்குப்தா


 
(நரேந்திர மோடியை உற்று நோக்குபவர்கள் பலரும்  அவரைப் பற்றி திடுக்கிடச் செய்யும், மனதை உறைய வைக்கும் சில செய்தி களைக் கூறுவார்கள்)

ஆஷிஷ் நந்தி என்ற சமூக அறிவிய லாளர், 1990களின் தொடக்கத்தில் நரேந்திரமோடியைப்  பேட்டி கண்டவர். பேட்டியை முடித்துக் கொண்டு வெளியே வந்த அவர் அதிர்ச்சியுடன் கூறிய சொற்கள்:

பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிரபலம் அடையாமல் ஒரு சாதாரண ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்த நரேந்திர மோடி, பா.ஜ.கட்சியின் ஒரு சிறு பொறுப்புக்கு வருவதற்கு முயற்சிகள் செய்து கொண்டிருந்தவர். அவரைப் பேட்டி காணும் பெருமை எனக்குக் கிடைத்தது. மோடியைப் பற்றி இவ்வாறு கூறுவதற்காக நான் மகிழ்ச்சி அடையவில்லை. என்றாலும்,  எதேச்சாய திகார மனப்பான்மை கொண்ட மனிதர் களுக்கு உண்டான அளவுகோல்கள், கூறுகள், குணநலன்கள் எவை என மனநோய் மருத்துவர்களும், உளவியல் மருத்துவர்களும், மனஇயல் வல்லுநர் களும் பல ஆண்டு ஆய்வுகளுக்குப் பிறகு நிர்ணயித்துள்ள அம்சங்கள் அனைத்தையும் நிறைவு செய்பவராக நரேந்திர மோடி இருக்கிறார் என்று தான் என்னால் கூறமுடியும். தூய் மையான உயர்ஒழுக்கக் கொள்கை என்று தான் கருதியிருப்பதில் கொண்டிருக்கும் பிடிவாதம், உணர்ச்சி வயப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய ஒரு குறுகிய கண்ணோட்டம்,  தனது கருத்தை நிலைநாட்டுவதில்  அள வுக்கு அதிகமாகக் காட்டும் தன் முனைப்பு, தனது உணர்வுகள் பற்றிய அச்சம் மற்றும் அத்தகைய உணர்வுகள் இருப்பதை ஏற்காமல் மறுப்பது,  அவற்றுடன் இணைந்த வன்முறை பற்றிய கற்பனைகள் - ஆகியவற்றின் ஒட்டு மொத்த கலவையாக, தன்னைப் பற்றி பிறர் இழிவாகவும், தவறாகவும் பேசுகின்றனர் என்ற எண்ணத்தையும், ஒன்றைப் பற்றியே மிகத் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் தனித் தன்மைப் பண்புகளையும் கொண்டு, அத்தகைய சமூக சூழ்நிலையில் வளர்ந்தவர் அவர் என்பது தெளிவாகத் தெரிகிறது..  நாட்டுத் துரோகி என்றும்,  தீவிரவாதியாக மாறக் கூடியவர் என்றும் ஒவ்வொரு முசுலீமுக்கும் வண்ணம் தீட்டி,  இந்தியாவுக்கு எதிராக ஒட்டு மொத்த உலகமும் சதி செய்கிறது என்ற கோட்பாட்டை அவர் தீர்மானமான குரலில் விவரித்தது இன்னும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. பேரதிர்ச்சி அடைந்த நிலையில் பேட்டியை முடித்துக் கொண்டு வெளியே வந்த நான், ஒரு ஃபாசிஸ்டுக்கான இலக்கணங்களை முழுமையாகப் பெற்றுள்ள ஒருவரை -  எதிர்காலத்தில் ஒரு பெரும் கூட்ட மான மக்கள் இனத்தையே அழிக்க வல்ல - தனது கொள்கைகளுக்காக எவரையும் கொல்லத் தயங்காத -  ஒருவரை இப்போதுதான் நான் சந்தித்திருக்கிறேன் என்று யாக்னிக் கிடம் கூறினேன். அண்மையில் பிரைம் டைம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்,  நாகரிகமற்ற ஒரு விலங்கு என்று நரேந்திர மோடியைப் பற்றி மற்றொரு சமூக அறிவியலாளர் சிவ. விஸ்வநாதன் கூறியிருந்தார்.

குஜராத்தைப் பற்றி பத்தாண்டு காலம் நான் ஆய்வு நடத்தி யிருப்பதால், அவரை மிருகம் என்று நான் கூறியதைப் பற்றி நான் நிச்சயமாக அறிந்துள் ளேன் என்பதை உறுதிப்படுத்து கிறேன்.  மோடியின் உடல் அசை வுகள் அவரது அகம்பாவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளன என்று அய்க்கிய ஜனதா கட்சித் தலைவர் சிவானந்த் திவாரி முன்பு கூறியிருக்கிறார். அண் மையில் (ராய்ட்டார் பேட்டி ஒன்றில் மோடி வக்கிரமாக கொலைவெறி எண்ணத்து டன் கூறிய குட்டே கா பச்சா என்று மோடி கூறிய பிறகு) மோடி மனநோய் மருத்துவர் ஒருவரைச் சென்று பார்த்து சிகிச்சை பெற வேண்டும் என்று திவாரி கூறினார். மோடியின் குணநலன்களைப் பற்றி அறிந்து கொள்ள அவரது உடல் அசை வுகள்,  அவரது மனநிலை ஆகியவை பற்றிய இவர்களின் கருத்துகளை நாம் நம்பத்தேவையில்லை; கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவரைப் பற்றி அறிந்து கொள்ள அவரது கடந்த கால நடத்தை பற்றிய பதிவுகளைப் பார்த்தாலே போதுமானதாகும்.

குஜராத் கலவரம் மாநில அரசினால் தூண்டிவிடப்பட்டது, மிகுந்த மதி நுட்பத் துடன் உயர்ந்த ஒரு நிலையில் திட்டமிடப் பட்டதாகும் என்று தெரிவிக்கும்,  மிகவும் நுணுக்கமாக  ஆவணப்படுத்தப்பட்டுள்ள  அறிக்கைகள் 45க்கு மேல் உள்ளன. பெரிய அளவிலான இந்த கலவரம் காவல்துறை மற்றும் உயர் அதிகார வர்க்கத்தினரால் கருத்துருவாக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டு, ரத்ததாகம் கொண்ட கலவரக் கும்பலாலும், பெண் களை வன்புணர்ச்சி செய்யும்  சங் பரிவார கும்பலாலும், மோடியின் அமைச்சர்களா லும், இந்துத்துவ தலைவர்களாலும் கள அளவில் செயல்படுத்தப் பட்டது.  இந்த ஆவணங்களில் தேசிய மனித உரிமைக் கழகத்தின் அறிக்கையும்,  புகழ் பெற்ற முன்னாள் நீதிபதிகள் அடங்கிய மக்கள் தீர்ப்பாயத்தின் பல தொகுப்புகள் கொண்ட அறிக்கைகளும் அடங்கும். மாநில அரசினால் திட்டமிட்டு தூண்டி விடப்பட்ட கலவரங்களில் பாதிக்கப்பட்ட  பில்குஸ் பானு, ஜாகிய ஜாஃப்ரி போன்ற பெண்கள் உள்ளிட்ட, எண்ணற்ற கலவர நிகழ்ச்சிகளை நேரில் கண்ட சாட்சியங் களும் உள்ளன.

ஜாகிய ஜஃப்ரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும், அவர் அளித்த சாட்சியங்களும், முன் வைத்த வாதங்களும் குஜராத் அரசுக்கும், கலவரக்காரர்களுக்கும் இடையே இருந்த நெருங்கிய தொடர்பினையும், வன்முறைச் சம்பவங்கள் துல்லியமாக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை என்பதை யும்  சுட்டிக் காட்டுகின்றன. மோடியையே கலவரத்துக்குக் காரண கர்த்தாவாகச் சுட்டிக் காட்டும் ஆதாரங்கள் பல உள் ளன. மாநில அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் நடைபெறுவ தற்கு முந்தைய நாள் அரசு உயர் அதி காரிகளின் கூட்டம் முதல்வர் மோடி வீட்டிலேயே நடத்தப்பட்டது ஒரு முக்கிய மான சான்றாகும். திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலை பற்றியும் அதன் பிறகு பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகள் முகாம்களில் மனித நேயமற்ற சூழலில் பட்ட துன்பங்கள் பற்றியும் இதர ஆவணங்கள் விரிவாகக் கூறுகின்றன. கத்திகள் கொண்டு பெண்கள் வயிறுகள் கிழிக்கப்பட்டுள்ளன. பெரும் அளவிலான பெண்கள் கும்பல் கும்பலாக வன்முறையாளர்களால் வன் புணர்ச்சி செய்யப்பட்டனர்.  மண்ணெண் ணெய் நிரப்பப்பட்ட தீப்பெட்டிகள் குழந் தைகளின் வாய்களில் திணிக்கப்பட்டன.  பெண்களும், குழந்தைகளும் உயிருடன் எரிக்கப்பட்டனர். இவை அனைத்தும் பத்திரிகையாளர்கள், சமூகத் தொண் டர்கள், வழக்கறிஞர்கள், கண்ணால் கண்ட சாட்சிகள், அதிகாரிகள், திரைப் படத் தயாரிப்பாளர்கள் மற்றும் பலராலும்  முறையாகயும், விரிவாகவும் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன.

முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரியான ஹர்ஷ் மந்தர் 2002 மார்ச் 19 அன்று அவுட்லுக் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட் டுள்ளார்:

அவர்களிடமிருந்து  கேட்ட செய் திகள் மற்றும்  நேரில் கண்ட நிகழ்ச்சி களில் ஒரு சிலவற்றையாவது கட்டாயமாக எழுதவேண்டும் என்று எனக்கு நானே தீர்மானித்துக் கொண்டேன்.  இவற்றைப் பற்றியெல்லாம் நாமெல்லோரும் அறிந்து கொள்வது முக்கியம் என்பதே இதன் கார ணம்.  அத்துடன், எனது மனச் சுமையை இதன் மூலம் நான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இயலக்கூடும்.

தன்னைக் கொல்லாமல் விட்டு விடும் படி 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருத்தி  மன்றாடியதைப் பற்றியும், ஆனால் அவளைத் தாக்கியவர்கள், அவளது வயிற்றினைக் கிழித்து சிசுவை வெளியில் எடுத்து, அவளது கண் முன்னாலேயே அதனை வெட்டிக் கொன்றதைப் பற்றியும் உங்களால் என்ன கூற இயலும்? 19 பேர் வாழ்ந்து வந்த ஒரு வீட்டிற்குள் தண்ணீரை நிரப்பி,  அதில் மின்சாரம் பாய்ச்சி அவர் களைக் கொன்றதைப் பற்றி உங்களால் என்ன கூற இயலும்?

தனது தாயையும், தனது 6 சகோதர சகோதரிகளையும் தன் கண் முன்னாலேயே வெட்டிக் கொலை செய்ததைப் பற்றி ஜூஹாபுரா முகாமில் இருந்த ஆறு வயது சிறுவன் ஒருவன் கூறியதைப் பற்றி உங் களால் என்ன கூற இயலும்? அவன் தாக்கப்பட்டபோது மயங்கி விழுந்துவிட்டதால், அவன் இறந்து விட்டான் என்று நம்பி கலவரக் காரர்கள் விட்டு விட்டுச் சென்றதால் அச்சிறுவன் உயிர் தப்பினான். கலவரத்தால் மிகமிக மோசமாக பாதிக்கப்பட்ட அஹமதாபாதின் நரோடா-பாடியா குடியிருப்பில் இருந்து தப்பி ஓடிய ஒரு குடும்பத்தினர், எவ்வாறு ஒரு இளம்பெண்ணும் அவளது மூன்று மாதக் குழந்தையும் உயிரிழந்தனர் என்று கூறியுள்ளனர். அவளை ஒரு காவலர் பாதுகாப்பான இடம் என்று கூறி அனுப்பி வைத்த இடத்தில் ஒரு கலவரக் கும்பலால் அவளும் அவளது குழந்தையும் மண்ணெண்ணெய் ஊற்றி எவ்வாறு எரிக்கப்பட்டனர் என்பதை அவர்கள் கூறியுள்ளனர்.

குஜராத்தில் ஒட்டு மொத்தமாக நடந்தேறிய காட்டாண்டி செயல்களில், பெண்களின் மீதான பாலியல் வன் கொடுமையை  ஒரு வன்முறைக் கருவி யாகவே  பரவலாக பயன்படுத்தியதைப் போன்று, இதற்கு முன் நடந்தேறிய எந்த  ஒரு கலவரத்திலும் நடந்ததாக  இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை.

இளம்பெண்களும், முதிர்பெண் களும் கூட்டங் கூட்டமாக பாலியல் வன்முறை செய்யப்பட்டது பற்றிய அறிக்கைகள் எல்லா இடங்களில் இருந்தும் வந்து கொண் டேயிருந்தன. இப்பெண்கள் எல்லாம் அவர்களது குடும்பத்து ஆண்களின் கண் முன் னாலேயே பாலியல் வன்முறை செய்து பின்னர்  மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தோ அல்லது சம்மட்டியால் அடித்தோ கொல்லப்பட்டுள்ளனர்; ஓரிடத்தில் ஒரு ஸ்க்ரூ டிரைவராலேயே ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளார்.

அச்சத்தினால் பீதியடைந்திருந்த பெண்களை மேலும்  அச்சுறுத்துவதற் காகவே,   அவர்களின் கண் முன்னா லேயே, ஆயுதம் ஏந்திய கலவரக்கார ஆண்கள் தங்களை நிர்வாணப்படுத் திக் கொண்டனர் என்ற செய்தியை ஆமன் சவுக் முகாமில் இருந்த பெண் கள் கூறினர்.

அஹமதாபாத்தில் நான் சந்தித்த - சமூகப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், கலவரத்தில் இருந்து உயிர் தப்பியவர்கள் - ஆகிய மக்களில் பெரும்பாலோர், குஜராத்தில் நடந்தது கலவரமே அல்ல என்பதையும், நன்கு திட்டமிடப்பட்ட ஒரு தீவிரவாத இனப் படுகொலையே அது என்பதையும் ஒப்புக் கொண்டனர்.  ஒரு வெளிநாட்டு எதிரியின் படை மீது நடத்தப்படும் ராணுவத் தாக்குதல் போன்று நன்கு திட்டமிடப்பட்டு நடத் தப்பட்ட படுகொலை, கொள்ளையைப் பற்றியே ஒவ்வொருவரும் பேசிக் கொண்டனர்.



- (நன்றி: கின்டில் ஆகஸ்ட் 15, 2013)

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

(தொடரும்)

Read more: http://www.viduthalai.in/page-2/72516-modi.html#ixzz2oeWiyeAs

மோடிக்குப் புதுப் பதவி: எச்சரிக்கை! (2)

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து, அதனை சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிட்ட மாபாதகத்தைச் செய்தவர் குஜராத் முதல் அமைச்சராக இருந்த நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடி;  அவசர அவசரமாக அதிகாரிகளை அழைத்து - சிறுபான்மை யினருக்கு எதிரான வன்முறைகளைத் தூண்ட உத்தரவு பிறப்பித்தார் என்று காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்ல, மோடியின் அமைச்சர வையில் முக்கிய அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியாவும் கூறினார். அவர் சாட்சியாக மாறி விடுவார் என்று அஞ்சி அந்த அமைச்சரே படுகொலை செய்யப்பட்டார் மோடி ஆட்சியில். என் மகன் படுகொலைக்குக் காரணம் மோடிதான் என்று ஹரேன் பாண்டியாவின் தந்தை பகிங்கரமாகவே நானாவதி ஆணையத்தின்முன் சொல்லவில்லையா?

குஜராத் கலவர வழக்குகள் 4252; அவற்றில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், உச்சநீதிமன் றத்தின் ஆணையின்படி அல்லவா  அவை மீண்டும் உயிர் பெற்றன.

மோடியின் காவல்துறையினர் முதல் குற்றப் பத்திரிகையில் எப்படி வழக்கைப் பதிவு செய்தனர்? நரோடா பாட்டியாவில் நடைபெற்ற படுகொலை தொடர்பான வழக்கில் கீழ்க்கண்ட வாசகங்கள் இடம் பெறுகின்றன.

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்கிற வன் முறைக்குப் பதில் தரும் வகையில் இந்த வன்முறை நடந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் இதன் பொருள் என்ன? குற்றப் பத்திரிகையிலேயே தீர்ப்பை எழுதி விட்டனர் என்பதுதானே!

நரோடா பாட்டியா என்னும் ஒரே இடத்தில் மட்டும் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்களின் குடலைக் கிழித்துக் கருவைத் தீயில் தூக்கி எறிந்து - அந்தக் காட்சியைக் கண்டு குதூகலித்தனர். இந்தக் காட்டுமிராண்டித்தன படுகொலைகளுக் குத் தலைமை வகித்தவர் மோடி அரசின் முக்கிய அமைச்சராக இருந்த 55 வயது நிறைந்த ஒரு பெண்மணி - மாயாகோட்னானி - இவ்வளவுக்கும் இவர் ஒரு மகப்பேறு மருத்துவர் என்பது வெட்கக் கேடு!

இந்த வழக்கு ஒன்றும் இல்லாமல் குப்பைத் தொட்டிக்குப் போயிருக்கும். உச்சநீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழு (Special Investigation) வை அமைத்ததால் தான் குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டனர்.

மோடி அரசின் பெண் அமைச்சர் மாயாகோட் னானிக்கு 28 ஆண்டுகள் தண்டனை; பஜ்ரங்தள் என்ற அமைப்பின் குஜராத் மாநிலத் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வாழ்நாள் முழுவதும்; 8 பேருக்கு 31 ஆண்டுகள் தண்டனை. மேலும் 22 பேர்களுக்கு 24 ஆண்டுத் தண்டனை; இந்தத் தண்டனையை வழங்கிய நீதிபதி ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் பெயர் ஜோத் சனாயாக்னிக்.

தீர்ப்பில் அந்த நீதிபதி சொன்ன வாசகங்கள் மிக மிக முக்கியமானவை; குஜராத் வன்முறை இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். நரோடாபாட்டியா படுகொலைகளுக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு நியாயமாக தூக்குத் தண்டனை யைத்தான் வழங்கிட வேண்டும். உலகெங்கும் தூக்குத் தண்டனைக்கு எதிரான குரல் கிளம்பு வதால் ஆயுள் தண்டனையைக் கொடுக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாரே.

இன்னொரு அதிர்ச்சியான தகவல், நீதிபதி நானாவதி ஆணையத்தின்முன்  குஜராத் - மோடி அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது என்ன தெரியுமா? 2007ஆம் ஆண்டிலேயே ஆதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டன என்பதுதான்.

இவையெல்லாம் ஜனநாயக நாடு என்னும் இந்தியாவின் ஒரு மாநிலத்தில் நடந்ததுதான். மற்றொரு மானம் கப்பலேறும் தகவல், நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய் - குஜராத் கலவரம் தொடர்பாக பொது நல வழக்கினைத் தொடர்ந்த வழக்குரைஞரான அவர் கூறுகிறார்.

நான் ஏற்பாடு செய்திருந்த வழக்குரைஞர் களுக்கு மோடி காவல்துறையினர் மூலம்  பணம் கொடுத்துச் சரி கட்ட முயற்சித்தார் என்று கூறியுள்ளார்  - மோடியின் சீழ் பிடித்த புத்திக்கு இது ஓர்  எடுத்துக்காட்டாகும்.

குஜராத் மாநிலத்தில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் 287; அதில் 286 பேர் முஸ்லிம்கள், மற்றொருவர் சீக்கியர்.

எப்படி இருக்கிறது நியாயம்? படுகொலைக்கு ஆளான மக்களைச் சேர்ந்தவர்களைக் கைது செய்வதும், படுகொலைக்குக் காரணமானவர் களுக்கு மாப்பிள்ளை ஊர்வலம் நடத்துவதும்தான் மோடியின் தனிப் பாணி; இவர்தான் இந்தியாவின் பிரதமருக்கான வேட்பாளராம்; சொல்லுகிறது பிஜேபி - இந்துத்துவா கும்பல். வெகு மக்களே, எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://www.viduthalai.in/page1/62059.html#ixzz2oeUtJwft