Wednesday 13 November 2013

மோடியை விட்டு 2002 ஏன் விலகாது? -என். ராம்

குஜராத்தில் 2002-ல் நடந்த சிறுபான்மையினர் படுகொலை பா.ஜ.க-வைப் பொருத்தவரை மிகவும் தர்மசங்கடமானது. மோடி பிரதமரானால் மதச்சார்பற்ற, ஜனநாயக நாடான இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும் என்பதை 2002-லிருந்து இன்றுவரை ஆறாமலிருக்கும் வடு தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.
மோடி இப்போது எங்கு சென்றாலும் ஒரே ஓசை மயம். இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற அவருடைய பிரச்சாரம் இப்போது வேகம் எடுத்திருக்கிறது. தன்னம்பிக்கை மிளிரும் அவருடைய பீடு நடையில் மிளிரும் உண்மை அதுதான்: பிரச்சாரத்தில் நன்றாகப் பேசுகிறார்; ஆனால், வாஜ்பாயின் பேச்சுக்கலைக்கு ஒப்பாகாது மோடியின் பேச்சு. அனாயாசமானதும், பல தசாப்தங்களின் பயிற்சியாலும் வந்த கலை வாஜ்பாயினுடையது. மோடிக்கென்று தனிப்பட்ட ஈர்ப்பும் இருக்கிறது, நகர்ப்புறங்களில் வாழும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் இளைஞர்களையும் அவர் கவர்ந்திருக்கிறார்.
நாட்டின் மிக உயர்ந்த ஒரு பதவிக்கு வேட்பாளராக மோடியை அறிவித்துவிட்டதால், அரசியல் சந்தையில் பாரதிய ஜனதாவின் சரக்குக்கு முறுக்கேறி இருக்கிறது. சுமார் பத்தாண்டுகளாகப் பதவியிலிருந்து காயலான்கடை கடைச்சரக்குபோல் ஆகிவிட்ட காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் களத்தில் நின்றால், எந்தக் கட்சிக்கு அதிக இடங்கள் - வாக்குகள் கிடைக்கும் என்று அறிய கருத்துக்கணிப்பே தேவை இல்லை. சமூக பொருளாதாரத் திட்டங்களைக் கொண்டுவருவதில் காட்டிய வறட்சி, ஈடு இணையில்லாமல் எல்லா மட்டங்களிலும் அது நிகழ்த்தியுள்ள ஊழல்கள் விளைவாக காங்கிரஸ் இப்போதே கடைநிலைக்கு வந்துவிட்டது.
எல்லா அரசியல் கருத்துக்கணிப்புகளுமே மோடியும் அவருடைய கட்சியும் முன்னிலை வகிப்பதாகக் கூறுகின்றன. ஒன்றிரண்டு அவர்களுடைய தேசிய ஜனநாயகக் கூட்டணியும் முன்னிலை வகிக்கும் என்று கூறுகின்றன. பாரதிய ஜனதா தவிர சிரோமணி அகாலிதளம், சிவசேனை ஆகியவை மட்டும்தான் இந்தக் கூட்டணியில் இப்போது எஞ்சியிருக்கின்றன. இந்தக் கூட்டணி 190-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற வேண்டும் என்றால், மக்களவையில் கூட்டணிக்கு 272 இடங்களுக்கு மேல் தேவை. கருத்துக் கணிப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோருவதில் அதிசயம் என்ன?
பரிவாரங்களின் ஆவேச எதிர்பார்ப்பு
இந்தி பேசும் மாநிலங்களிலும் சில மேற்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சிக்குப் பெருத்த தொண்டர் படையும் மக்களிடையே ஆதரவும் இருக்கிறது. அந்த மாநிலங்களில் வலதுசாரி இந்துத்துவச் சக்திகளான சங்கப் பரிவாரங்கள் மக்களவைப் பொதுத்தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே பிரச்சார இயந்திரங்களை முடுக்கிவிட்டுவிட்டன. பரிவாரங்கள் ஆவேச எதிர்பார்ப்புடன் இப்போதே முண்டாதட்ட ஆரம்பித்துவிட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இவர்கள்தான் அரசியல் சட்டத்துக்கு விரோதமான கொள்கைகளையும் இந்தியாவின் அடிப்படை பண்புக்கு முரணான இந்துத்துவக் கொள்கைகளையும் அமல்படுத்தும் சக்திகளாக இருப்பார்கள்.
கணக்கு எடுபடுமா?
இந்தியா என்பது பல்வேறு மதம், மொழி, கலாச்சாரங்களைக் கொண்ட பன்மைச் சமூகம்; இந்தோனேசியா, பாகிஸ்தானுக்குப் பிறகு உலகிலேயே முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் சுமார் 17 கோடி வாழ்கிற நாடு இது. கர்நாடகம் தவிர்த்த தென்னிந்திய மாநிலங்களிலும் கிழக்கு இந்திய மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவுக்கு அமைப்பு ரீதியான பலமோ ஆதரவோ இல்லை. அங்கிருப்பவர்கள், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக சங்கப் பரிவாரங்கள் முன்னிலைப்படுத்தும் ‘வளர்ச்சி நாயகன்’ எப்படிப்பட்டவர், குஜராத்தில் அவர் கொண்டுவந்த முன்னேற்றங்கள் என்ன என்பதை அறியும் ஆவலில் இருக்கின்றனர்.
சங்கப் பரிவாரங்கள் மட்டுமல்ல; இந்திய கார்பரேட் நிறுவனங்களும் படித்தவர்களில் ஒரு பகுதியினரும்கூட அவரை ‘வளர்ச்சியின் நாயகன்’ (விகாஸ் புருஷ்) என்றே அழைக்கின்றனர்; ஆதரிக்கின்றனர். ‘வளர்ச்சியின் நாயகன்’, வருங்கால இந்தியாவின் தவிர்க்க முடியாத முன்மாதிரியாக ‘துடிப்பு மிக்க குஜராத்’தை உருவாக்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
கணிப்புகள் நம்பகமானவையா?
2014 மக்களவைப் பொதுத் தேர்தல் தொடர்பாக வரும் கருத்துக் கணிப்புகளைப் பார்க்கும்போது, இந்தக் கணிப்புகள் உண்மையானவையா, நம்பத் தகுந்தவையா என்ற சந்தேகங்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்தக் கணிப்புகளுக்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை. அப்படியிருந்தும் வாக்காளர்கள் என்ன மனநிலையில் இருக்கின்றனர், எந்தக் கட்சி அல்லது கூட்டணிக்கு அவர்கள் வாக்களிப்பார்கள் என்று கேள்விப் பட்டியல் மூலம் ‘எப்படியோ’ கண்டுபிடித்துவிடுகிறார்கள் கணிப்பாளர்கள். கட்சிகளுக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்றுகூட கணக்குபோட்டுவிடுகிறார்கள்!
16-வது மக்களவைப் பொதுத்தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கோ, பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கோ போதுமான அளவு இடங்கள் கிடைக்காது என்று சொல்கிறது ஒரு கணிப்பு. மோடி முகாமுக்கு இந்தக் கணிப்பு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
மோடி முகாமுக்கு என்ன பயம்?
மக்களவைப் பொதுத்தேர்தலுக்குப் பிறகு, மாநிலக் கட்சிகள் இணைந்து வலுவான ஓரளவுக்கு நிலைத்தன்மையுள்ள கூட்டணியைத் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்டு ஆட்சிக்கு வரும்; இடதுசாரிக் கட்சிகளும் காங்கிரஸும் அதற்கு ஆதரவு தரும் என்ற அந்தக் கணிப்பின் விளைவுகள் குறித்துதான் மோடி முகாம் கவலை அடைந்திருக்கிறது. “இந்தத் தேர்தல் களத்தில் நாம் முன்கூட்டியே உச்சக்கட்டத்துக்குச் சென்று விட்டோமோ?” என்ற சந்தேகம்கூட சில பாரதிய ஜனதா தளகர்த்தர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
குஜராத் முதல்வரால் பிரதமராக முடியாது என்ற இந்த நிலைக்குக் காரணம் அரசியல் விழிப்புணர்வு பெற்ற இந்திய வாக்காளர்கள்தான். ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளாலும் சித்தாந்தங்க ளாலும் வழிநடத்தப்படும் மோடியைப் பற்றி ஜனநாயக சக்திகளும் மதச்சார்பற்ற சக்திகளும் இடைவிடாமல் மேற்கொண்ட பிரச்சாரங்கள், போராட்டங்களின் விளைவே இந்த விழிப்புணர்வு.
‘வளர்ச்சியின் நாயகர்’ பின்கதை என்ன?
2002 பிப்ரவரி மார்ச் மாதங்களில் குஜராத்தில் நடந்த படுகொலைகள் தொடர்பாக புதுப்புது தகவல்கள், சான்றுகள் முளைத்தவண்ணம் உள்ளன. மூத்த போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் சாட்சியம் அளிக்கத் தொடங்கியுள்ளனர்.
இலங்கையில் 1983-ல் நடைபெற்ற தமிழர் இனப் படுகொலைகளுக்கு இணையானது குஜராத் படுகொலைகள் என்று கருத இடம் உண்டு. கோத்ரா ரயில் எரிப்பில் இறந்தவர்களின் உடல்கள் திட்டமிட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன; போகிற வழியில் வகுப்புக் கலவரங்கள் தூண்டப்பட்டன; செயல்படாமலிருக்குமாறு காவல் துறைக்கு மாநிலத்தின் உயர் தலைமையிலிருந்தே வாய்மொழி ஆணைகள் சென்றன என்றெல்லாம் கூறுகின்றன வந்துகொண்டிருக்கும் சான்றுகள்.
முஸ்லிம்களுக்குப் ‘பாடம் கற்பிக்க’ கொலை, பாலியல் வன்முறை, சித்திரவதை, சூறையாடலில் ஈடுபட வன்முறைக் கும்பல்களுக்கு பாதுகாப்பும் உதவிகளும் அளிக்கப்பட்டதுடன் அவர்கள் பிடிபடாமல் தப்பிக்கவும் வழி செய்யப்பட்டன என்ற தகவல்களும் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. ‘வளர்ச்சியின் நாயகன்’ என்று புகழப்படுபவர் எப்படிப்பட்ட செயல்களுக்கு உடந்தையாக இருந்தார் என்று ஜனநாயகப் பாரம்பரியத்தில் வந்த நமது பத்திரிகைகள் உண்மைகளை வெளிப்படுத்தி அவருடைய உண்மை உருவை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன.
ஆதரவாளர்கள் ஆயிரம் சொன்னாலும் மோடியும் அவருடைய அரசும் 2002-ல் என்ன செய்தார்கள் என்பதுடன் அவர் பிரிவினையாளர் என்பதையும் கோடிக் கணக்கான மக்களுக்கு அவை தொடர்ந்து நினைவூட்டிவருகின்றன.
பத்திரிகைகளும் மக்கள் இயக்கங்களும் தொடர்ந்து மேற்கொண்டுவரும் முயற்சிகளால், பத்தாண்டுகளுக்கு முன்னால் இந்தியச் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆழமான காயம் இன்னமும் ஆறவில்லை என்பதை ஜனநாயக இந்தியாவும் உலகமும் மறக்கவில்லை.
குஜராத் மக்கள்தொகையில் 9% ஆக இருக்கும் முஸ்லிம்கள் இன்னமும் சேரிகள் போன்ற சுகாதாரக் கேடான பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்களும் வந்துகொண்டிருக்கின்றன.
2002 சம்பவங்களுக்கு யார் முழுப் பொறுப்பு என்பதை அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள் தெரிந்துவைத்துள்ளனர். கடந்த 25ஆண்டுகளில் நடந்த மிக மோசமான வகுப்புக் கலவரத்தில் முதல்வரும் அவருடைய அரசும் ஆற்றிய பங்கும் அதற்குப் பிறகு நீதி கிடைத்துவிடாமல் தடுக்க அவர்கள் எடுத்த நடவடிக்கைகளும், உச்ச நீதிமன்றம் தலையிட்டு அரசியல் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட உறுதியான நடவடிக்கை எடுத்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களையும் அவர்கள் அறிவார்கள்.
காரில் அடிபட்ட நாய்க்குட்டிகளா முஸ்லிம்கள்?
கலவரங்கள் குறித்து ‘வளர்ச்சியின் நாயகன்’ கவலைப்படவில்லை என்பதும் கலவரங்களைத் தடுக்கத் தவறியதற்காக ‘வளர்ச்சியின் நாயகன்’ இன்னமும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரவில்லை என்பதையும் அரசியல் விழிப்புணர்வுள்ளவர்கள் அறிவார்கள். “காரை ஒருவர் ஓட்டிச்செல்லும்போது பாதையில் ஒரு நாய்க்குட்டி காரில் சிக்கி அடிபட்டால், அந்த காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருப்பவருக்கு மனவருத்தம் இருக்காதா என்ன? - மன வருத்தம் இருக்கத்தான் இருக்கும்” என்று தன் நிலைகுறித்து விளக்கம் அளித்தார் ‘வளர்ச்சியின் நாயகன்’.
சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தார்மிகரீதியாகவும் 2002 வகுப்புக் கலவரங்கள் எதிர்காலத்திலும் எளிதில் மறைந்துவிடாது. மோடி பிரதமரானால் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இந்தப் பிரச்சினை முற்றி மேலும் சிக்கலாகவே மாறும். காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், சில மாநிலக் கட்சிகள் மட்டும் மோடியை எதிர்க்கவில்லை; பாரதிய ஜனதாவின் தோழமைக் கட்சியாகவே பிகார் ஆட்சியில் இருந்த நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் இந்த ஒரு காரணத்துக்காகவே கூட்டணியை விட்டு விலகியது. மோடி பிரதமராவதை ஏற்கவே முடியாது என்றது.
“மோடி என்ற தனிநபர் மீது வெறுப்போ கோபமோ இல்லை; அவர் அமல்படுத்த விரும்பும் கொள்கைகள், அவருடைய கண்ணோட்டம் ஆகியவற்றை ஏற்க முடியாமல்தான் எதிர்க்கிறோம்” என்றுதான் எதிர்ப்பவர்கள் எல்லோரும் சொல்கிறார்கள்.
இந்தியாவில் அவருக்கு எதிரான அரசியல் எதிர்ப்புக்கு மேலும் வலுசேர்க்கிறது சர்வதேச அரங்கில் அவருக்கிருக்கும் மற்றவர் பொறாமைப்பட முடியாத ‘வேண்டப்படாதவர்’ அந்தஸ்து.
பன்னாட்டு நிறுவனங்கள் தன்னுடைய மாநிலத்தில் முதலீடு செய்ய சிவப்புக்கம்பளம் விரிக்கும் முதலமைச்சர் என்ற சிறப்பு இருந்தபோதிலும் அவரைத் தங்கள் நாட்டுக்கு வர அனுமதிக்க விசா தர முடியாது என்று அமெரிக்கா 2005-ல் மறுத்துவிட்டது. மதச் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் அல்லது அதற்குக் காரணமானவர்கள் என்று கருதப்படுவோருக்கு விசா தருவதில்லை என்ற சட்டப்பிரிவின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1984-ம் 2002-ம்
1984-ல் தில்லியில் 8,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள்; 2002-ல் குஜராத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். இவ்விரு சம்பவங்களிலும் பத்திரிகைகளும் போலி மதச்சார்பின்மைவாத அரசியல்வாதிகளும் இரட்டை வேடம் போடுவதாக சங்கப் பரிவார பத்திரிகைத் தொடர்பாளர்கள் தொடர்ந்து பேசிவருகின்றனர். ஓர் இனப் படுகொலைக்கு இன்னோர் இனப் படுகொலை சமமாகிவிடும் என்று சொல்வதே குமட்டுகிறது. ஒரு வாதத்துக்காக இதை ஏற்றாலும்கூட சீக்கியர்கள் படுகொலைக்கு பிரதமர் மன்மோகன் சிங் அதற்கு அவர் பொறுப்பில்லை என்றாலும்- நாடாளுமன்றத்தில் 2005 ஆகஸ்ட் 12-ல் மன்னிப்பு கேட்டார் (மன்னிப்புதான் கேட்டார்; கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு முழுத் தண்டனை பெற்றுத்தரவில்லை, சமரச நடவடிக்கைகளும் போதாது என்பதெல்லாம் உண்மைதான். இருந்தாலும் அது தார்மிக ரீதியான ஒரு செயல், அரசியல் ரீதியான ஒரு சமிக்ஞை). ஆனால், மோடி என்ன செய்தார்? 2002 கலவரம் தொடர்பாக அவர் இதுவரை நேரடியாக நாட்டு மக்களிடம் வருத்தமும் தெரிவிக்கவில்லை, கலவரத்தைத் தடுக்கத் தவறியதற்காக மன்னிப்பும் கோரவில்லை.
இதில்தான் அவருடைய சித்தாந்தரீதியான அரசியல் உத்தி அடங்கி இருக்கிறது. சங்கப் பரிவாரங்களின் வகுப்புவாதச் சித்தாந்தத்துக்கு இரைபோடும் உத்தி. பத்தாண்டுகளாகப் பரிவாரங்களுக்குள் ஏற்பட்ட சித்தாந்தக் குழப்பம், அரசியல் குழப்பம் ஆகியவற்றுக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் தீர்க்கமான முடிவுக்கு வந்திருக்கிறது. நாட்டை ஆளவும் மக்களை ஒன்றுதிரட்டவும் இந்துத்துவக் கொள்கைகளே இனி மையமாக இருக்க வேண்டும் என்பதே அது.
கண்ணை நம்பாதீர்
இந்தியப் பெருநிறுவனங்களின் கண்ணை ‘வளர்ச்சி நாயகன்’ கோஷம் மறைத்துவிட்டது. காங்கிரஸின் கொள்கைகளால் வெறுத்துப்போன வாக்காளர்களுக்கும் இந்த கோஷம் கவர்ச்சிகரமாக இருக்கிறது. ஆனால், சங்கப் பரிவாரங்களின் கொள்கைகள் என்னவோ விட்டுத்தர முடியாத இந்துத்துவா, நாட்டு மக்களைப் பிளவாடும் செயல்திட்டங்கள், அடையாளங்கள், பிரச்சாரங்கள் ராம ஜன்மபூமியும் அதில் ஒன்று ஆகியவை இணைந்த அடிப்படைவாதம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
எங்கே, மக்கள் எவரும் எவரை விடவும் தாழ்ந்தவர் இல்லை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியமான அடிப்படையாக இருப்பதுடன், கொள்கை அளவில் மட்டும் அல்லாமல், நடைமுறையிலும் அது கடைப் பிடிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்படுகிறதோ, அந்த மதச்சார்பற்ற, ஜனநாயக நாடான இந்தியாவுக்கு, மோடி பிரதமராவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும் என்பதை 2002-லிருந்து இன்றுவரை ஆறாமலிருக்கும் வடு தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.

நன்றி:  

Sunday 10 November 2013

குஜராத் 'உண்மை' - சராசரி ஆயுள் காலம் !

'Truth' about Life Expectancy in Gujarat :





















Life Expectancy / சராசரி ஆயுள் காலம் :
UK  - 81
Canada  - 81
USA  - 79
UAE  - 77
Saudi  - 75
Singapore -82

1) Kerala 74.2
     ....
5) Tamil Nadu 68.9
   .
   ..
   ....
   .....
   ......
8) Gujarat 66.8



Evidence / ஆதாரம் :
http://data.worldbank.org/indicator/SP.DYN.LE00.IN
http://data.gov.in/dataset/selected-indicators-human-development-major-states
http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_life_expectancy
http://www.viduthalai.in/headline/68941-2013-10-16-10-42-23.html

குஜராத் 'உண்மை' - வறுமைக் கோடு !

'Truth' about Poverty Line in Gujarat:




















Poverty Ratio / வறுமை விகிதம் :
USA - N/A
UK - N/A
Canada - N/A
UAE - N/A

1) Andaman & Nicobar - 0.4 %
2) Puducherry - 1.2 %
3) Lakshwadeep - 6.8 %
    .....
    ........
6) Jammu & Kashmir - 9.4%
7) Himachal Pradesh - 9.5%
8) Kerala - 12%
11) Punjab - 15.9%
13) TamilNadu - 17.1%
      .
      ...
      .....
      .......
      .........
      ............
20) Gujarat - 23% - 136 Lakhs - 1.36 Crores


குஜராத் 'உண்மை' - கல்வி நிலை !

'Truth' about Education in Gujarat:

























Literacy Rate / எழுத்தறிவு விகிதம்:
United States - 99%
United Kingdom - 99%
Canada - 99%

1) Kerala - 93.91%
3) Mizoram - 91.58%
4) Tripura - 
    ....
    ........
    ............
    ...............
    ...................
18) Gujarat - 79.31%



Evidence / ஆதாரம் :
http://censusindia.gov.in/2011census/censusinfodashboard/index.html

http://populationcommission.nic.in/content/933_1_LiteracyRate.aspx

குஜராத் 'உண்மை' - குழந்தைகள் இறப்பு விகிதம் !

'Truth' about Gujarat - Infant Mortality Rate























Infant Mortality Rate / குழந்தைகள் இறப்பு விகிதம் :
Singapore - 2
UK - 4
USA - 6
Qatar - 6
UAE - 7
Kuwait - 10

Kerala - 12

Tamil Nadu - 22
Gujarat - 41


Evidence / ஆதாரம் : 
http://data.worldbank.org/indicator/SP.DYN.IMRT.IN

http://data.gov.in/dataset/state-wise-infant-mortality-rate


http://www.viduthalai.in/headline/68941-2013-10-16-10-42-23.html 


குஜராத் 'உண்மை' - சராசரி தனி நபர் வருமானம் :

'Truth' about Gujarat Per Capita Income :



Per Capita Income / சராசரி தனி நபர் வருமானம் :
Canada - 52,219 $ = 31.9 Lakhs Rs.
Singapore - 51,709 $ = 31.5 Lakhs Rs.
USA - 49,965 $ = 30.5 Lakhs Rs.
UK - 38,514 $ = 23.5 Lakhs Rs.
UAE - 39,058 $ = 23.8 Lakhs Rs.
Saudi - 25,136 $ = 15.2 Lakhs Rs.

1) Delhi - 1.73 Lakh ( Now : 2.01 Lakhs  Rupees)
2) Goa - 1.67 Lakh
3) Chandigarh - 1.42 Lakh
4) Sikkim - 1.24 Lakh
5) Haryana - 1.08 Lakh
6) Puducherry - 1.02 Lakh
7) Maharashtra - 95,339 Rs.
8) Gujarat - 89,668 Rs.
9) TamilNadu - 88,697 Rs. ( Now : 98,550 Rupees )


Evidence / ஆதாரம் :

குஜராத் 'உண்மை' - மொத்த உள்நாட்டு உற்பத்தி !

'Truth' about Gujarat Gross Domestic Product ( GDP ) : 

Gross Domestic Product ( GDP ) / மொத்த உள்நாட்டு உற்பத்தி :
Saudi Arabia -  5.1 %
UAE           -  4.4 %
India           -  3.2 %
USA             -  2.2 %
Canada         -  1.7 %
Singapore     -  1.3 %
UK             -  0.3 %

Gross State Domestic Product ( GDP ) / மொத்த மாநில உற்பத்தி :
1) Bihar - 13.26 %
2) Madhya Pradesh - 11.81 %
3) Delhi - 11.34%
4) Arunachal Pradesh - 10.84%
5) Mizoram - 10.09%
6) Goa - 9.39%
7) Jharkhand - 8.92%
8) Gujarat - 8.53%


Evidence / ஆதாரம் :
http://data.worldbank.org/indicator/NY.GDP.MKTP.KD.ZG/countries ( Year : 2012 )

http://planningcommission.nic.in/data/datatable/0205/databook_comp0205.pdf ( Year : 2011-2012 , Page No : 133 )

http://pbplanning.gov.in/pdf/Statewise%20GSDP%20PCI%20and%20G.R.pdf

Friday 8 November 2013

90 சதவீத இந்தியர்கள் மோடியை எதிர்க்கின்றனர்: பாலிவுட் பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர்

 
மும்பை: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியை 90 சதவீத இந்தியர்கள் எதிர்ப்பதாக பிரபல இந்தி பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர் தெரிவித்துள்ளார். 
 
பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடி குறித்து பிரபல இந்தி பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
 
 இது குறித்த அவரது ட்வீட், 
 
மோடியை எதிர்ப்பது தேச விரோத செயல் என்று சில முட்டாள்கள் தெரிவித்து வருகின்றனர். அப்படி என்றால் 90 சதவீத இந்தியர்கள் தேச விரோதிகள் என்று அவர்கள் கூற வருகிறார்களா? என்று கேட்டுள்ளார். முன்னதாக அவர் கடந்த மாதம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, டீசன்ட் இல்லாமல், தரக்குறைவான மெசேஜ்களை மோடி பிரியர்கள் எனக்கு அனுப்புகிறார்கள். அதில் இருந்தே அவரின் ஆதரவாளர்களின் தரம் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார். மோடி ஒரு நல்ல பிரதமராக இருக்க முடியாது என்று ஜாவித் அக்தர் கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday 7 November 2013

மோடி- ஒரு தமாஷ்!


நரேந்திர தாமோதர தாஸ் மோடி இந்திய நாட்டை ரட்சிக்க வந்த தேவதூதன், பாரத நாட் டைப் பாவிக்க வந்த மகா விஷ்ணுவின் அடுத்த கட்ட அவதாரம்போல இந்த நாட்டு ஊடகங்கள் காற்றடித்து வானில் பறக்க விடுகின்றனவே- அந்தச் சூட்சமத்தின் பின்ப(பு)லம் என்ன தெரி யுமா?

இந்தியாவில் ஊடகங் களில் பிரம்மாவின் நெற் றியிலே பிறந்த ஜாதியி னர் 71 சதவிகிதம். புதுடில்லியில் 300 இந்தி, ஆங்கில ஏடுகளில் மூத்த பத்திரிகையாளர்களில் தாழ்த்தப்பட்டவர் ஒருவ ரும் கிடையாது. எல்லாம் அவாள் மயமே!

மோடிபோல ஒரு தாழ்த்தப்பட்டவரோ பிற்படுத்தப்பட்டவரோ பேசி இருந்தால் எப்படி எப்படி யெல்லாம் கேலி பேசி, கிண்டல் அடித்து கூவத் தில் தூக்கி எறிந்திருப் பார்கள்.

வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் வ.உ.சி. தலைமையில் நடந்தது என்று சென்னையில் மோடி பேசவில்லையா? (ராஜாஜி தலைமையில் நடந்தது என்பதுதான் சரி!).

பாட்னாவில் என்ன பேசினார்? குப்தர் வம்ச பெருமையை நாம் நினைக் கும்போது சந்திரகுப் தரின் ராஜநீதி நினை விற்கு வருகிறது என் றாரே பார்க்கலாம். (சந் திரகுப்தர் மவுரிய வம்சம் என்பதே சரி!).

அடுத்த தமாஷ், அலக்சாண்டர் படை, உலகையே வென்றது. ஆனால், அந்தப் படை யைத் தோற்கடித்தவர்கள் பீகாரிகள் என்று பீகாரின் தலைநகரான பாட்னா வில் நீட்டி முழங்கினார்.

(உண்மை என்ன தெரி யுமா? அலக்சாண்டர் கங்கையைக் கடந்து இக்கரைக்கு வரவில்லை. தட்சசீலா என்று மோடி குறிப்பிடுவது பீகாரில் இல்லை, பாகிஸ்தானில் உள்ளது.

அலக்சாண்டர் சட்லஜ் நதிவரை மட்டுமே வந்தார் என்பது வரலாறு).

எப்படிப்பட்ட கோமா ளிக் கூத்துகள் இவை! மற்றவர்கள் இப்படியெல் லாம் உளறியிருந்தால், நம் ஊர் சோ ராமசாமி அய் யர்கள் எப்படியெல்லாம் நக்கல் அடித்திருப்பார் கள்!

- மயிலாடன்

Wednesday 6 November 2013

முரட்டு இந்துத்துவாவாதியான மோடி செய்வாரா?

காதலியிடம் காதலன்:  உன்னைப் போன்ற அழ கான பெண்ணை முத்தமிட நான் 5000 ரூபாய் கூட கொடுப்பேன்.

காதலி: அய்யோ, நேற்று இரவு மகேஷ் எனக்கு முத்தம் கொடுத்தான். ஆனால் பணம் ஏதும் தரவில்லையே!

கணவனிடம் மனைவி: நேற்றிரவு ஷீலாவுடன் சந் தோஷமாக இருக்க எவ் வளவு பணம் கொடுத்தாய்?

கணவன்: நூறு ரூபாய் கொடுத்தேன்.

மனைவி: அவமானம்! அவளது காதலன் என்னி டம் வரும்போது, அய்ம்பது ரூபாய் மட்டுமே கொடுத் தான்.

சென்சஸ்அதிகாரி ஒருவர் ஓர் வீட்டின் பெண் மணியிடம்  கேட்கிறார்: உங்கள் கணவர் 9 ஆண்டுகளுக்கு முன் இறந்து போய்விட்ட போது, உங்களுக்கு எப்படி  5 வயதி லும் 3 வயதிலும் மகன்கள் உள்ளனர்?

நகைச்சுவைத் துணுக்குகள் என்ற கண்ணோட் டத்தில் பார்த்தாலும்கூட மேற்கண்டவை ரசிக்கத் தக்கவையல்ல - வெறுக்கத்தக்கவை. நகைச்சுவை என்ற மிக உயர்ந்த அம்சத்தைக் கொச்சைப்படுத் துவதாகும்.

எந்தப் பெண்ணும் இந்தத் தரங்கெட்ட வகையில் பேசவும் மாட்டார்; நடந்து கொள்ளவும் மாட்டார்.

இந்தநிலையில் பள்ளிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க எப்படித் தான் மனம் வந்ததோ?

சோ கூட்டம் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றதே - கொஞ்சுகின்றதே - அடுத்த பிரதமர் இவரை விட்டால் வேறு ஆள் யார்? என்று காற்றடித்து ஊதிப் பெருக்க வைக்கிறதே பார்ப்பன ஊடகங்கள் - அந்த மகத்தான குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரதாஸ் தாமோதரதாஸ் மோடியின் ஆட்சியில் தான் பள்ளிப் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.

இந்துத்துவாவாதிகளுக்கு இவைபற்றியெல்லாம் கவலை ஏது? இந்துத்துவா என்கிற போது அதன் மூலம் இந்து என்பதிலிருந்து தானே கிளைக்கிறது. அந்த இந்துவின் யோக்கியதைபற்றி அறிந்தவர் களுக்கு ஒரு பிஜேபி ஆட்சியில் இவ்வளவு ஆபாச மான  பாடத் திட்டங்கள் அமைவதில் ஆச்சரியம் இருக்கவே முடியாது.

அறிஞர் அண்ணா அவர்கள் முதல்  அமைச்சராக இருந்த நிலையில் சட்டப் பேரவையிலேயே சொன்னதைக் கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம். நினைத்தபின் கொஞ்சம் அசைப் போட்டும் பார்க்க வேண்டும். அப்படி சிந்திக்கும் பொழுது ஆசா பாசத்துக்கு   ஆட்படக் கூடாது; பக்தி என்னும் போதைக் கண்ணாடியையும் அணியக் கூடாது. அப்பொழுதுதான் எது ஒழுக்கம், எது ஒழுக்கக் கேடு என்பதும் புத்திக்கும் படும். இதோ அண்ணா பேசுகிறார். கண்ணன் தின்னும் பண்டம் எது? கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய் என்பதைக் கற்றுத் தர இப்படிப் போட்டிருக்கும். கைக்கெட்டாத பொருளை எவருக்கும் தெரியாமல் எப்படி எடுப்பது என்பதைச் சொல்லிக் கொடுக்கும் வகையில் இப்படம் இருக்கிறது. இப்படி நான் சொல்வதால் புராணம் கூடாது என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்தக் கருத்தை இங்கு சொல்லவில்லை. மாலை 6 மணிக்கு மேல் பொதுக் கூட்டத்தில் வைத்துக் கொள்கிறேன்.

பள்ளிக்கூடத்துக் கட்டடத்துக்குப் பக்கத்தில் உள்ள பிறர் வீட்டுத் தோட்டத்தில் காய்த்துத் தொங்குகிற மாங்கனியைப்பறிக்க சோனிப் பையன் ஒருவனைக் குனிய வைத்து மாங்காய் பறிக்கலாம் என்ற வழியை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதாக ஆகிறது. இந்தக் கருத்தை பகுத்தறிவு என்று எடுத்துக் கொண்டாலும் சரி, சுயமரியாதைக் கருத்து என்று எடுத்துக் கொண்டாலும் சரி, பயப்படாமல் உலக அறிவு என்று திருத்தி அமைத்தால் கல்வி அறிவும், தரமும் பெருகும்.

முதலமைச்சர் அண்ணா கல்வி மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளிக்கையில் 23.3.1967இல் பேசிய பேச்சின் ஒருபகுதி இது.

பகுத்தறிவுக் கண்ணோட்டம் முக்கியம் - பகுத்தறிவு என்பது வெறும் தகவலைச் சேகரிப்பது அல்ல - மனித நேயத்தையும், ஒழுக்கத்தையும் அளிப்பதாகும். அதனைத்தான் தந்தை பெரியார் போதித்தார்.

குஜராத்தில் பிஞ்சு உள்ளத்தில் ஆபாச நச்சு விதைகளைத் தூவுவதற்குக் காரணமானவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முரட்டு இந்துத்துவாவாதியான மோடி செய்வாரா? எங்கே பார்ப்போம்!

Tuesday 5 November 2013

மோடியின் முகவரி

குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடி பார்ப்பனர்கள் கூட்டிய மாநாட்டில் பங்கு கொண்டு பின் வருமாறு பேசியுள்ளார்.

இந்தியக் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க பார்ப்பன சமூகம் உதவியது. நமது கலாச்சாரம் இன்னமும் அழியாமல் இருக்கிறதென்றால், அதற்குக் காரணம் பார்ப்பனர்கள்தான். பல நூற்றாண்டு காலமாக அவர்கள் ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அறிவைத் தொடர்ந்து அளித்து வந்துள்ளனர். இது சமூகத்துக்கு அவர்கள் செய்த மாபெரும் சேவையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியில் உள்ள பார்ப்பனர் அல்லாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான் இந்த மோடி. இவர் படித்தவராம்; விவரங்கள் அறிந்தவராம்; சிறந்த நிருவாகியாம் - ஊடகங்கள் அப்படித்தான் ஊதிப் பெருகச் செய்து தகவல்களைக் உலவ விடுகின்றன.

இவர் படிப்பின் தகுதி - சிந்தனை வளம் எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்குப் பார்ப்பனர் சங்க நிகழ்ச்சிக்குச் சென்று அவர் தெரிவித்துள்ள இந்தக் கருத்துக்களே போதுமானவை.

பார்ப்பனர்களிடத்தில் பக்தியோடு யார் கொழுத்த அடிமையாக இருப்பாரோ, அவரைத்தான் அவர்கள் தூக்கிப் பிடிப்பார்கள் என்பதை நாடு அறியும்.

(1) செல்வி உமா பாரதியும், உத்திரப் பிரதேச கல்யாண் சிங்கும் பார்ப்பனர் அல்லாதவர்களாக  பி.ஜே.பி.யில் இருந்ததால் என்ன பாடுபடுத்தப் பட்டார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பங்காரு லட்சமணரின் கதி என்ன?

உமா பாரதி மிக வெளிப்படையாகச் சொன்னாரே பி.ஜே.பி. என்பது பிராமின் பார்ட்டி (பார்ப்பனர் கட்சி) என்று அடித்துக் கூறவில்லையா?
மத்தியப் பிரதேசத்தில் முதல் அமைச்சராக அவர் ஏன் தொடர முடியவில்லை?

ஒரு வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டார் என்பதற் காக அறிவு நாணயமான முறையில் அரசியல் பண் பாட்டோடு முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

அந்த வழக்கில் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் இறுதியாகத் தீர்ப்பு அளித்துவிட்ட பிறகு, மரியாதை யாக அறிவு நாணயமாக முதல் அமைச்சர் பதவியை அவருக்கு அளித்திருக்க வேண்டுமா, வேண்டாமா?

பாபர் மசூதி இடிப்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எல்லாம் மத்திய அமைச்சர்களாக இருந்தார்களே!

ஏனிந்த இரட்டை அளவுகோல் என்பதை நரேந்திர மோடி சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

(2) இந்தியக் கலாச்சாரத்தைப் பார்ப்பனர்கள் கட்டிக் காத்தார்களாமே! எந்தக் கலாச்சாரத்தைக் காப்பாற்றிக் கொடுத்தார்கள்?

பிறப்பின் அடிப்படையிலேயே பேதம் - உயர் ஜாதி - கீழ் ஜாதி பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன் - பிரம்மாவின் காலில் பிறந்தவன் - என்கிற மனித உரிமைக்கும் நேயத்துக்கும், பண்பாட்டுக்கும், அறிவுக்கும் பொருத்தமில்லாத அந்தக் கயிறு திரிப்புகள்தானே இந்தப் பார்ப்பனப் பண்பாடு.

இது ஓர் அநாகரிக அமைப்பு முறையல்லவா? சூத்திரர்களும், பெண்களும் பாவயோனியில் பிறந்த வர்கள் என்று கூறும் கீதைதானே பார்ப்பனர்கள் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் பொக்கிஷம்?

இவற்றை ஏற்றுக் கொண்டால் இந்த நரேந்திர மோடியார்? பிரம்மாவின் காலில் பிறந்த நாலாவது ஜாதிதானே. சூத்திரர்தானே - வேசி மகன்தானே!
பதவி கிடைத்தால் போதுமா? மான உணர்ச்சி வேண்டாமா? பார்ப்பனர்கள் அறிவாளிகளா? அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மிக அழகாகச் சொன்னாரே - பார்ப்பனர்கள் படித்தவர்கள்தானே தவிர அறிவாளிகள் அல்லர் என்று ஆய்வு பூர்வமாகச் சொன்னாரே!

குழந்தைப் பேற்றுக்காக; உடல் பூராவும் நெய்யைத் தடவிக் கொண்டு யாருடனும் புணரலாம் என்பது தானே பார்ப்பனர்கள் கற்பித்த இந்துத்துவப் பண்பாட்டு முறை! சுத்த காட்டு விலங்காண்டிகள் ஆயிற்றே!

பதவித் துண்டு கிடைத்துவிட்டால் எவ்வளவு அடிமைத் தனத்துக்கும் அனுமார்கள் ஆட்படுவார்கள் என்பதற்கு மோடி ஒருவர் போதுமே! வெட்கம்! மகாமகாவெட்கம்!!

குஜராத் முதல் மாநிலமா?

தமிழ்நாட்டில் பி.ஜே.பி.க்கு, சங்பரிவார்களுக்கு அடிப்படை இல்லை என்பது தெரிந்து விட்டது. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பி.ஜே.பி. பெரும்பான்மையான இடங்களில் கட்டிய பணத்தைக் கூட (Deposit) திருப்பப் பெற முடியாத நிலை.

ஒவ்வொரு தேர்தலிலும்  திராவிட இயக்கக் கட்சிகளின் தோள்களில் ஓசியில் ஏறிக் கொண்டு பதவிப் பழம் ருசித்துக் கொண்டிருந்த இந்தக் கட்சியின் வண்டவாளம் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெட்கக் கேடான முறையில் அம்பலமாகி விட்டது.

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மக்கள் கொடுத்த மரண அடியின் காரணமாகத்தான் மத்திய ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை; இதனை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் எல்.கே. அத்வானி.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பி.ஜே.பி.க்கு எப்படியும் ஓர் அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற வெறியோடு பூணூலை முறுக்கிக் கொண்டு படாத பாடுபடுகிறார் திருவாளர் சோ. ராமசாமி.

நரேந்திர மோடியை தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதும், செல்வி ஜெயலலிதாவைச் சந்திக்க வைப்பதுமான அரசியல் புரோக்கர் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டு திரிகிறார்.

நரேந்திரமோடியை இந்திரன் சந்திரன் என்று புகழ் மாலைசூட்டி அர்ச்சனை செய்கிறார். இவ்வளவுக்கும் மோடி ஒன்றும் பார்ப்பனர் அல்லர்.

இருந்தும் ஏன் இந்த மோடிக்காக, மோடி மஸ்தான் வேலையில் இறங்குகிறது இந்தப் பூணூல்.

மோடி அளவுக்கு சிறுபான்மை மக்களை வேட்டையாடுபவர்கள் இந்துத்துவ வெறியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில்  எங்குத் தேடினாலும் கிடைக்க மாட்டார்களே! கோவில்களில் ஆட்டுக் கிடாவைப் பலியிடுவது போல, கோழிகளின் கழுத்தைத் திருகிப் போடுவதைப்போல அல்லவா இஸ்லாமிய மக்களை ஆயிரக்கணக்கில் குரூரமான முறையில் கொன்று குவித்து அவர்களின் ரத்த ஆற்றில் நீந்தித் திளைத்தார்.

இப்படி ஓர் ஆள் கிடைத்தால்  பார்ப்பனர்களுக்கு மிகப் பெரும் வாய்ப்புதானே! அதனால்தான் மோடிக்கு லாலி பாடிக் கொண்டிருக்கிறார். துக்ளக் இதழில் குஜராத் மாநிலத்தில் பாலாறும், தேனாறும் பாய்கிறது என்று தொடர் கட்டுரைகளை எழுதிடச் செய்துள்ளார்.

குஜராத் போல நல்லாட்சி இந்தியாவுக்குக் கிடைக்க வேண்டுமா? அப்படியானால் நரேந்திரமோடியை இந்தியாவின் பிரதமராக்குங்கள் என்ற முழக்கத்தைக் கொடுத்து வருகிறார்.

அப்படிப் பார்த்தாலும் அவர் கூறுவதாவது உண்மையா என்றால் அதுதான் இல்லை; எல்லாம் வெத்து  வேட்டு இட்டுக் கட்டிச் சொல்லப்படும் தகவல்கள்.

மனிதவள அடிப்படையில் இந்தியாவில் குஜராத்துக்கு உரிய இடம் - 20. வருமான அடிப்படையில் ஆறாவது இடம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4ஆவது இடம், தனிநபர் வருமான அடிப்படையில் 9ஆவது இடத்திலும், பாலின விகித அடிப்படையில் 22 ஆவது இடத்திலும், கல்வியில் 14ஆவது இடத்திலும், மின் உபயோகத்தில் 10ஆம் இடத்திலும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுச் செய்திகளை அறிவோர் விகித அடிப்படையில் ஆண்கள் 12ஆம் இடத்திலும்,  பெண்கள் 15ஆம் இடத்திலும், சரியான உடல் எடை விகிதத்தில் ஆண்கள் 11ஆம் இடத்திலும், பெண்கள் 12ஆம் இடத்திலும் உள்ளனர்.

தொலைக்காட்சியுடையோர் கணக்கிட்டால் 11ஆம் இடத்திலும், மொத்த சாலைகளின் நீளத்தில் 10ஆம் இடத்திலும், சாலைகளில் அடர்த்தி  விசயத்தில் 21ஆவது இடத்திலும், மின் நிலைய நிர்மாண இடத்தில் 2ஆவது இடத்திலும், மருத்துவமனையில் பிரசவம் நடக்கும் இடத்தில், 8ஆவது இடத்திலும் சராசரி வாழ்நாளில் ஆயுள் அளவில் 10ஆம் இடத்திலும் இருக்கிறது.

ஏராளமான சலுகைகளை அளித்து அந்நிய முதலீட்டைக் கவருவதில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் இந்த மாநிலம் உற்பத்தியில் நான்காம்  இடத்தில் இருப்பது ஏன்?

இந்த யோக்கியதையில் உள்ள ஒரு மாநிலம்தான், இந்தியாவில் நல்லாட்சி நடக்கும் மாநிலமாம், மக்கள் வளமாக வாழும் மாநிலமாம்.

சோ கூட்டம் புளுகுகிறது -  மயக்க மிட்டாய்க் கொடுக்கிறது - பொது மக்களே ஏமாறதீர்! கவனம்! கவனம்!!

குல்லா

குல்லா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு என்ற பாடல்தான் நரேந்திர மோடியை நினைத்தால் நினைவுக்கு வருகிறது.

தன்னைப்பற்றிப் புதிது புதிதாக அவிழ்த்து விட்டு, நாட்டு மக்கள் மத்தியில் தன்னை நிலை நிறுத்தும், ஜிகினா வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

காந்தியார் பிறந்த நாளில் (அக்டோபர் 2இல்) காந்தி குல்லா 25 சதவீதத் தள்ளுபடியில் விற்பனை  என்று விளம் பரம் செய்யப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஷாகாவின் போது அணி யும் குல்லாவைத்தான் காந்திக் குல்லாய் என்ற சொல்லி தள்ளுபடி விலை யில் விற்பனை செய்துள் ளனர். மோடி குல்லா என்று பெயர் சூட்டியுள் ளனர் - எத்தகு பித்த லாட்டம் இது!

காந்தியாருக்கும், இந்த மோடிக் கும்பலுக் கும் என்ன ஒட்டு உறவு?  காந்தியைக் கொன்ற கோட்சேயின் உறவுக்கா ரர்கள் என்கிற முறையில் ஓர் உறவு உண்டு என்று வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம்.

மோடி குர்தா என்று ஓர் சட்டையை விளம்பரப் படுத்தி வருகின்றனர். எப்படி உடை உடுத்துவது, எந்த வண்ணத்தில் உடுத் துவது என்பது வரை திட்டமிட்டு இளைஞர்கள் மத்தியில் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்துவதே உள் நோக்கம். பிபி சவுகான், ஜிதுபாய் சவுகான் சகோ தரர்கள் இவருக்கு உடை தைத்துக் கொடுப்பவர் களாம்.

மோடி அணியும் உடையை விளம்பரப் படுத்த ஆரம்பித்து விட்டனர். மோடி குர்தா என்று அதற்குப் பெயர். பருத்தி குர்தா ரூ.1895 (பேட்டா விலை மாதிரி) லினன் குர்தா ரூ.1900/-
முஸ்லீம்கள் அணி வது போன்ற தோற்றம் - அந்த வகையிலும் அம் மக்களைக் கவரலாம் அல்லவா! (மோடி கலந்து கொண்ட ஒரு கூட்டத் தில் போரா பிரிவைச் சேர்ந்த ஒருவர் அன்பால் கொடுத்த குல்லாவை அணிய மறுத்தவரும் இவர் தான் என்பதை மறக்க வேண்டாம்!) நமோ தேநீர் கடைகள் (நரேந்திர மோடிக்குத்தான் நமோ என்று குறுக்கம்) நமோ இனிப்புக் கடைகளாம்.

இப்படி எல்லாம் விளம்பரம் செய்வதற் கென்றே  ஒரு பன்னாட்டு விளம்பர நிறுவனத்தோடு (Apcoworld in India) ஒப் பந்தம செய்துள்ளனர். அதற்காகப் பல்லாயிரம் கோடி ரூபாய் வாரி இறைக்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் தேடுதல் வரிசையில், ஒபாமாவைத் தாண்டி விட்டார் என்று அவிழ்த்து விடுவதெல் லாம் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

கெட்டிக்காரன் புளுகே எட்டு நாளைக் குத்தான்; மோடிப் புளுகு எத்தனை நாளைக்கு?       

 - மயிலாடன்

மோடி பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா?


 
ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக அய்.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர். குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன் காவல்துறையும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை விலகல் செய்துவிட்டார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.


பயங்கரமும் படுகொலையும் தாண் டவமாடிய குஜராத்திலிருந்து வருகி றேன். வெறுப்பாலும் அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன். என் இதயம் நோயுற்று ஆன்மா நைந்து விட் டது. குற்றவுணர்வையும் அவமானத் தையும் சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள் வலிக்கின்றன.

அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக் கூரைகளின் கீழே ஒண்டிக் கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள். அவர்களது முகத்தில் ததும்பும் துயரம் இப்படியொரு துக் கத்தை நான் இதுவரை கண்டதில்லை. வறண்டு போன கண்கள்; நிவாரணப் பொருட்களை இறுகப் பற்றிய அவர் களது கைகள்; இனி இந்த உலகத்தில் இது மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும் உடைமை.

அச்சம் படர்ந்த தணிந்த குரலில் சிலர் பேசிக் கொள்கிறார்கள்; சமையல் வேலை, பிள்ளைகளுக்குப்பால், காயம் பட்டவர்களுக்கு மருந்து என்று ஆக வேண்டிய வேலைகளைக் கவனிக் கிறார்கள் மற்றவர்கள்.

ஆனால் ஏதாவது ஒரு முகாமில் நீங்கள் உட்கார்ந்தால் உடனே அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள். புரையோடிய புண்ணிலிருந்து பீய்ச்சி யடிக்கும் சீழ் போல, சொற்கள் நம் முகத்தில் பட்டுத் தெறிக்கின்றன. அந்தக் கோரங்களை எழுதவே என் பேனா தடுமாறுகிறது..

இருப்பினும், கண்டவை கேட்டவை களில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.

ஓர் எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக் கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெ டுத்து, அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றி ருக்கிறார்கள். இதற்கென்ன சொல் கிறீர்கள்?

உயர் அழுத்த மின்கம்பியால்...

19 பேர் கொண்ட ஒரு குடும்பம். அந்த வீட்டிற்குள் தண்ணீரைப் பீய்ச்சி யடித்து, பிறகு உயர் அழுத்த மின் கம்பியை உள்ளே தூக்கிப் போட்டு அத்தனை பேரையும் கொன்றிருக் கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்?

தன்னுடைய அம்மாவும், அக் காள்கள், அண்ணன்கள் ஆறு பேரும் தன் கண் முன்னால் அடித்தே கொல்லப்பட்டதை விவரிக்கிறான் ஜுகாபரா முகாமில் இருக்கும் ஒரு ஆறு வயதுச் சிறுவன். அடித்த அடியில் அந்தப் பையன் செத்துவிட்டதாக நினைத்து விட்டிருக்கிறார்கள்.

மிக மோசமாகத் தாக்கப்பட்ட நரோடா பாட்டியா பகுதியிலிருந்து ஒரு குடும்பம் தப்பி ஓடியிருக்கிறது. 3 மாதக் கைக்குழந்தையுடனிருந்த மகளால் ஓட முடியவில்லை. எந்தப் பக்கம் போனால் தப்பிக்கலாம் என்று அங்கிருந்த காவல்துறையினிடம் அவள் வழி கேட்டாள். அவன் காட்டிய திசையில் நம்பிக்கையோடு சென்றாள். அங்கே தயாராகக் காத்திருந்த கும்பல் அவளையும் குழந்தையையும் மண் ணெண்ணெய் ஊற்றிக் கொளுத் தியது. பெண்களின் மீதான பாலியல் வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும் இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை. குடும்ப உறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின் கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக் பாலியல் வன்முறை செய்திருக்கிறார்கள். பாலியல் வன்முறை முடிந்தவுடன் அந்தப் பெண்களை எரித்துக் கொன்றிருக் கிறார்கள்; சுத்தியலால் மண்டையில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்; ஒரு இடத்தில் ஸ்குரூ டிரைவரால் குத்தியே கொன்றிருக்கிறார்கள்.

அமன் சவுக் முகாமிலிருந்த பெண்கள் கூறியவற்றைக் கேட்கவே குலை நடுங்குகிறது. திடீரென வீடு புகுந்த கும்பல், பெண்களின் முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைந்து விட்டு கையில் பயங்கரமான ஆயுதங் களுடன் அம்மணமாக நின்று பெண்களை நடுங்கச் செய்து பணிய வைத்திருக்கிறது.

அகமதாபாத்தில் நான் சந்தித்த பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர் பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும் கூறுவது இதுதான். குஜராத்தில் நடந்தது கலவரமல்ல; ஒரு பயங்கரவாதத் தாக் குதல், திட்டமிட்ட இனப் படுகொலை. ஒரு இராணுவத் தாக்குதலைப் போல எல் லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.

வெறியூட்டும்படியான முழக்கங்களை ஒலிபரப்பியபடியே முதலில் ஒரு லாரி வரும். பின்னாலேயே வரிசை வரிசையாக வரும் லாரிகள் காக்கி டவுசரும், நெற் றியில் காவித்துணியும் கட்டிய ஆட் களைக் கும்பல் கும்பலாக இறக்கிவிடும். வெடி பொருட்கள், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களுடன் களைப்பைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில் களையும் அவர்கள் கையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் செல்போன். உத்திரவுகள் போனில் வந்து கொண்டிருந்தன. கைகளில் முசுலீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள் இந்து  முசுலீம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார், அவர்களில் யாரைத் தாக்க வேண்டும் என்பது வரை துல்லியமான விவரங்கள் அவர்கள் கையில் இருந்தன. இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை.

வசதியான முசுலீம்களின் வீடுகள் கடைகள் முதலில் சூறையாடப்பட்டன. பிறகு லாரிகளில் கொண்டு வந்த எரிவாயு சிலிண்டர்களை கட்டடத்திற்குள் வைத் துத் திறந்து விடுவார்கள். பிறகு பயிற்சி பெற்ற ஒரு நபர் நெருப்பைக் கொளுத்திப் போடுவான். கட்டடம் தீப்பிடித்து எரியும்.

மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட் டுள்ளன. அகமதாபாத் நகரின் சாலை சந்திப்புகளில் இருந்த சில பிரபலமான தர்காக்கள் ஒரே இரவில் இடிக்கப்பட்டு அதன்மீது சாலையும் போடப்பட்டு விட்டது. இதற்கு முன் அந்த இடத்தில் ஒரு தர்கா இருந்ததே இல்லை என்பது போல அந்தப் புதிய சாலை மீது இப்போது வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

காவல்துறை மற்றும் அரசு எந்திரத் தின் பழிக்கு அஞ்சாத அலட்சியத்தையும், நேரடியான கூட்டுக் களவாணித்தனத் தையும் எல்லோரும் குற்றம் சாட்டு கிறார்கள். பெண்கள் குழந்தைகளின் கதறலுக்குக் கூட அவர்கள் மனமிரங்க வில்லை.கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைக்குத்தான் அவர்கள் பாது காப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

யார் கலவரக் கும்பலின் தாக்குதலுக் குப் பலியானார்களோ அந்த முசுலீம் மக்கள் மீதுதான் காவல்துறையும் துப்பாக் கிச் சூடு நடத்தியிருக்கிறது. பல செய்தி கள் இதைத்தான் கூறுகின்றன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையின ரும் முசுலீம்கள்தான்.

இருபது ஆண்டுகளாக அய்.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டி ருப்பவன் என்ற முறையில் என்னுடைய சகாக்களான அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் கடமைக்கு இழைத்த துரோகத்தை எண்ணி நான் வெட்கப் படுகிறேன். அரசியல்வாதிகளின் உத்தர வுக்குக் காத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் அவர்களைக் கட்டுப் படுத்தவில்லை. சுயேச்சையாகவும், நடு நிலையாகவும், அச்சமின்றியும் செயல் பட வேண்டுமென்றுதான் சட்டம் அவர் களைக் கோருகிறது.

அகமதாபாத்தில் ஒரே ஒரு அதிகாரி யாவது நேர்மையாக நடத்து கொண்டி ருந்தால் இராணுவத்தை அழைத்து வன்முறையை நிறுத்தியிருக்க முடியும். உள்ளூர் காவல்துறை மற்றும் அதிகாரி களின் உதவியில்லாமல் எந்த ஒரு கலவரமும் சில மணி நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது.

கொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தம் குஜராத் அதிகாரிகளின் கையில் படிந்திருக்கிறது. அவர்கள் மட்டுமல்ல, இதைக் கண்டும் காணாதது போல சதிகாரத்தனமாக மவுனம் சாதிக்கும் இந்த நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவருமே இந்தப் படுகொலையின் குற்றவாளிகள்தான்.

இனப்படுகொலை உச்சத்தில் இருந்த போது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சபர்மதி ஆசிரமத்தின் வாயிற்கதவுகள் மூடப்பட்டிருந்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. அந்த ஆசிரமமல்லவா மக்களுக்கு முதல் புகலிடமாக இருந்திருக்க வேண்டும்! கொலைக் கும்பல்களைத் தடுத்து நிறுத்த எந்தக் காந்தியவாதி தன் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் நின்றார்?

இதோ இன்னொரு பெருத்த அவமானம்!

இந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் ஏற்கெனவே நாம் பல அவமானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறோம். இதோ இன்னொரு பெருத்த அவமானம்! பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்காக அகமதாபாத் நகரில் நடத்தப்படும் அகதி முகாம்களெல்லாம் இசுலாமிய அமைப்புகளால்தான் நடத்தப்படு கின்றன. முசுலீம் மக்கள் அனுபவித்த துன்பம், இழப்புகள், துரோகம், அநீதி ஆகியவை பற்றியெல்லாம் சக முசுலீம் கள் தான் கவலைப்பட வேண்டும்; அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் அவர்களுடைய வாழ்க்கையை புனர மைத்துத் தரவும் நமக்கு எவ்விதப் பொறுப்புமில்லைஎன்று சொல்வது போல இருக்கிறது இந்த அணுகுமுறை.
குஜராத்தின் கொலைகாரக்கும்பல் எதையெல்லாமோ என்னிடமிருந்து திருடிச்சென்றுவிட்டது. அவற்றில் ஒன்று இந்தப் பாடல். நான் பெரு மிதத்துடனும் நம்பிக்கையுடனும் பாடி வந்த பாடல். அந்தப் பாடலின் சொற்கள் இவை:

சாரே ஜஹா ஸே அச்சா
இந்துஸ்தான் ஹமாரா

இந்தப் பாடலை இனி ஒரு போதும் என்னால் பாட முடியாது.

குஜாரத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து 11 ஆண்டுகள் முடிந்துவிட்டன.கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, பாலியல் வன்முறை செய்த இந்து மதவெறி யர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப் படவில்லை. இந்தியா ஒரு மதச்சார் பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்துவ நாடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப் படவேண்டும், வேதனைப் படவேண்டும்.

இந்த இனப்படுகொலையின் நாயக னான நரேந்திர மோடி வரும் பாராளு மன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமராக நிற்பதற்கு கடும் பிரய த்தனம் செய்து வருகிறார். குஜராத் மாநிலத்தை ஆஹா .ஓஹோ ..என்று வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளார் என்ற வெறும் மாயக் கருத்தை மட்டும் வைத்துக்கொண்டு இவர் தகுதியானவர் என்று சிலர் கூவிக்கொண்டு திரிகிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் நாட்டிலேயே அதிகமாக வறுமையில் வாடுபவர்கள் குஜராத் மாநிலத்தில் வசிக்கிறார்கள் என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று தெளிவுபடுத்தியது. குஜராத்தில் நர்மதா பள்ளத்தாக்கில் இருந்த 2 இலட்சம் நபர்கள் அரசால் வெளியேற்றப்பட்டதால் இன்று மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் பிச்சை எடுத்து கொண்டு பிளாட்பாரங்களில் தூங்கி கொண்டுள்ளனர். இவரை போன்றவர்கள் நாட்டை ஆண்டால் என்னவாகும்! நாட்டின் பிரதமர் பதவிக்கு இவர் தகுதியானவரா என் பதை மக்களே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஆகவே வருங் கால பிரதமர் போட்டிக்குரியவரின் கடந்த கால தகுதிகளை சீர்தூக்கி பார்ப்பது அவசியம்.

சீனாவில் உள்ள பேருந்து நிலையத்தை அகமதாபாத்தில் மோடி உருவாக்கியதாகக் காட்டும்

மோடியின் பித்தலாட்டத்தைத் தோலுரித்துக் காட்டினார் பேராசிரியர் சுப.வீ.

சென்னை, அக். 24- சீனாவில் ஷாங்காங்கில் நவீன முறையில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை மோடி, குஜராத் மாநிலம், அகமதா பாத்தில் கட்டியிருப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்வதை தோலுரித்துக் காட்டினார் பேராசிரியர் சுப.வீர பாண்டியன்.

சென்னை பெரியார் திடலில் 22.10.2013 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:-

ஊரில் எல்லோரும் சட்டசபைத் தேர்தலைப் பற்றிப் பேசிக் கொண் டிருக்கும் இந்த நேரத்தில் சென்னை - பெரியார் திடலில் திராவிடர் கழகத் தின் சார்பில் ஜாதிய சக்திகள், மதவாத சக்திகளைப் பற்றிப் பேசிக் கொண் டிருக்கிறோம்.
தாழ்த்தப்பட்டவர்களை எதிர்ப் பது, காதல் திருமணத்தை எதிர்ப்பது என்பது ஜாதிய கட்சிக் கூட்டணி யின் கருத்து.

மதவாத கட்சியின் நோக்கம்

மதவாதக் கூட்டணிகளுக்கு இரு கொள்கைகள். ஒன்று சிறுபான்மை யினர் எதிர்ப்பு - இன்னொன்று மதச் சார்பின்மை எதிர்ப்பு!

நாடகக் காதல் என்ற புதுவார்த் தைகளை அறிமுகப்படுத்தியுள்ளார் கள். இளைஞர்கள் இருக்கும் வரை காதலும் இருக்கும். காதலை எதிர்க்க முடியாது. காதலை எதிர்க்கும் சினிமா கூட தமிழ்நாட்டில் ஓடுவதில்லை - திரைக்கு வந்த வேகத்தில் காணாமல் போய்விடுகிறது.

ஜப்பான் நாட்டில் காதலுக்காகவே 17 இதழ்கள் வெளிவருகின்றன.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்

அடுத்து வன்கொடுமை தடுப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற ஒன்றை ஜாதி கூட்டணிக்காரர்கள் முன் வைத்துள்ளனர்.

இந்தச் சட்டத்தை மேலும் வலு உள்ளதாக ஆக்க வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை. இந்தச் சட்டத் தின்மூலம் வெறும் 2 சதவிகிதம் பேர் தான் தண்டிக்கப்படுகின்றனர். அந்த ஓட்டை சரி செய்யப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்.

இந்தச் சட்டத்தைத் திருத்துவதோ, மாற்றுவதோ மாநில அரசின் கையில் இல்லை. மத்திய அரசுதான் அதனைச் செய்யவேண்டும். திராவிட இயக்க எதிர்ப்பை முன் வைக்கிறார்கள். திராவிடர் என்றால் - தமிழ் நாட்டில் பார்ப்பனர் எதிர்ப்பு என்பதன் குறியீடு!

யாரை ஆதரிப்பது - யாரை எதிர்ப்பது!

யார் ஆதிக்கம் செலுத்துகிறார் களோ அவர்களை எதிர்ப்பது - யார் ஒடுக்கப்பட்டு இருக்கிறார்களோ, அவர்களை ஆதரிப்பது என்பது நமது கொள்கை. முதலில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மோடி திருச்சி வந்தார். எந்தக் கொள்கையைப் பிரகடனம் செய்தார்? தி.மு.க. - அஇஅதிமுக மீது ஏன் எந்த வித விமர்சனத்தையும் அவர் வைக்க வில்லை?

மொழிவாரி மாநிலமே கூடாதாம்!

அங்கு என்னதான் பேசினார்? மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்தது தவறு என்கிறார். இந்தியா ஒரே நாடு, ஒரே பண்பாடு என்கிறார். கேரளாவிலும் வங்காளத்திலும் ஒரே பண்பாடு தான் நிலவுகிறதா?

நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், தான் எழுதிய நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. அந்தத் தன்மை, சிறப்பு அழிக்கப் பட்டால், இந்தியா முழுமையும் கல வரங்கள் நடக்கும் என்று குறிப் பிட்டுள்ளாரே!

1926இல் வங்காளத்தில் முஸ்லீம் கள் வாங்கு சத்தம் கூடாது என்று தடை போட்டதால் பெரும் கலவரம் ஏற்படவில்லையா?

மோடியை பற்றி மிகப் பெரிய அளவில் விளம்பரம் செய்யகிறார்கள். கோயபெல்ஸ் பிரச்சாரம்.

மோடி பெரிய சாதனையாளர் என்று ஒரு படத்தை வெளியிடுகிறார்கள்.

பார்ப்பதற்கு ஆச்சரியப்படும் அள வுக்கு உருவாக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் - அகமதாபாத்தில் மோடி உருவாக்கியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

முகநூலில் நமது தம்பிகள் தேடி - அது சீனாவில். ஷாங்காங் நகரில் உள்ள பேருந்து நிலையம் என்று கண்டுபிடித்து வெளியிட்டு விட்டனர். மோடி என்றாலே மோசடி - மோடி மஸ்தான் பேர்வழி என்பதை உணர வேண்டும். இணைய தளங்களில் நம் இளை ஞர்கள் இப்பொழுதுதான் நுழைய ஆரம்பித்துள்ளன.ர் பெரியார் வலை தளம் ஒரு துவக்கத்தைக் கொடுத்தது 40 ஆயிரம் இளைஞர்கள் இப்பொழுது திமுக இணைய தளத்தில் இணைந்து உள்ளனர் என்பது நல்ல செய்தி.

பொய்யைப் பரப்பியே ஆட்சி யைப் பிடித்து விடலாம் என்று மனப் பால் குடிக்கிறார்கள்.

காவிகளின் ஜம்பம் கருஞ்சட்டைகளிடம் பலிக்காது

காவிகளின் ஜம்பம் தமிழ்நாட்டில் எடுபடாது. அவர்களைச் சந்திக்கும் சக்தி கருஞ்சட்டைப் பட்டாளத்துக் குத்தான் உண்டு.

தேநீர்க் கடையில் வேலை பார்த்து, அதற்குப் பின் சைக்கிள் கடையில் வேலை பார்த்த ஆசாமி ஒருவர். குறுக்கு வழியில் பணம் சேர்க்க பெரிய மனுசனாக ஒரு வழி சாமியார் ஆவது தான், ஆசிரமம் அமைப்பதுதான் என்று முடிவு செய்து மத்தியப் பிரதே சத்தில் ஆசிரமம் ஒன்றை ஆரம் பித்தார் ஆசாராம்.

இன்றைக்கு அவருக்கு இருக்கும் சொத்து 5000 கோடி ரூபாய்; இந்தியா முழுமையும் 426 ஆசிரமங்கள் 1400 யோகா நிலையங்கள்.

புலால் உண்டால், காமக் கிளர்ச்சி ஏற்படும் என்று கீதோபதேசம் செய் கிறார். அப்படி சொன்னவர்தான், ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறை செய்த வழக்கில் சிறைக்குள் இருக் கிறார்.

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தேவை!

மும்பையிலே நரேந்திர தபோல்கர் சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட் டுக் கொண்டிருந்தார். இரு இந்துத் துவாவாதிகள் அவரைச் சுட்டுக் கொன்று இருக்கின்றனர். அதற்குப் பின் அங்கு ஒரு சட்டம், மூடநம் பிக்கை ஒழிப்புச் சட்டம் இயற்றப் பட்டுள்ளது. 2005இல் முன்மொழியப்பட்டது.

2013இல்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுவும் ஒரு சமூக சீர்திருத்தவாதியின் உயிரை இந்துத்துவாவாதிகள் குடித்த பிறகு தான் இது நிறைவேற்றப்படு வது. இதுபோன்ற ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். எது எதற்கெல் லாமோ அவசரச் சட்டம் கொண்டு வருபவர்கள், இந்த அவசிய மான அவசரமான தேவைக்கு ஓர் அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறினார்.