Wednesday 9 November 2011

சட்டத்தின் பிடியில் மோடி

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து, வளைந்து வளைந்து ஓடி தப்பித்துக் கொண்டு வருகிறார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜாப்ரி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி ஒரு முக்கியமான முட்டுச் சந்தில் திணறிக் கொண்டு நிற்கிறார்.

உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு மோடிக்குச் சாதகமான அறிக்கையை கொடுத்த நிலையிலும், வழக்கினை உள்ளூர் மாஜிஸ்ட்ரேட்டே  விசாரித்துக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்ட நிலை யிலும், மோடி குற்றமற்றவர் என்பது நிரூபணமாகி விட்டது என்று நிர்வாணக் கூத்தாடினர்.

இதில் ஓர் ஆச்சரியம். தெகல்கா புலனாய்வு செய்து நேரிடையாக சாட்சியங்களைப் பதிவு செய்த தகவல்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது வெகு ஆச்சரியமான ஒன்றே!

இப்பொழுது ஒரு நம்பிக்கை ஒளி பளிச்சென்று பரவியுள்ளது.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை சுதந்திரமான முறையில் சாட்சிகளுடன் விசாரணை நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு இராமச்சந்திரன் என்பவர் நடுநிலை விசாரணை நபராக (ஹஅஉரளபரசயைந) அறிவிக்கப்பட்டார். அவர் விசா ரணை செய்து அறிக்கை ஒன்றை அளித்துள்ளார்.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முடிவுகளுக்கு மாறாக மோடியின் மீதான குற்றச்சாற்றுகளுக்குப் போதுமான முகாந்திரங்கள் உள்ளன; குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்று பரிந்துரைக் கப்பட்டுள்ளது.

குஜராத் கலவரத்தன்று (2002 பிப்ரவரி 27) முதலமைச்சர் நரேந்திர மோடி கூட்டிய உயர்மட்டக் குழுவில் கலந்துகொண்ட சஞ்சய் பட் என்னும் உயர்நிலைக் காவல்துறை அதிகாரி உச்சநீதிமன் றத்தில் தாக்கல் செய்த அறிக்கை மோடிக்கு நெரிகட்டச் செய்துவிட்டது! அந்தக் காவல்துறை அதிகாரி அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவே இல்லை என்று ஒரு போடு போட்டால் தீர்ந்தது பிரச்சினை என்கிற வடிவத்தில் குஜராத் பா.ஜ.க. ஆட்சி வழக்கைத் திசை மாற்றிவிட்டது.

நீதிமன்ற உதவிக்காக நியமிக்கப்பட்ட அமிக் கஸ்கூரி ராமச்சந்திரன் அறிக்கையோ வேறு விதமாகக் கருத்துத் தெரிவித்துள்ளது. சஞ்சய்பட் என்ற காவல்துறை அதிகாரி உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொண்டாரா- இல்லையா என்பதை நீதி மன்றத்தில் குறுக்கு விசாரணை செய்யப்படும்பொழுது தான் உண்மை தெரியும் என்று கூறியுள்ளார்.

பந்து இப்பொழுது நீதிமன்றத்தின் மைதானத்தில் உள்ளது. இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்தியத் தண்டனைச் சட்டம் 153-ஏ (சமூகங்களுக்கிடையே விரோதத்தை வளர்க்கும் வகையில் தூண்டுதல்) 153பி (தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக நடந்துகொள் வது) 505 (பொதுமக்கள் மத்தியில் துவேஷங்களை உண்டு பண்ணுவது) 166 (சட்டத்துக்கு முரணாக காயம் ஏற்படுத்திட அரசு அலுவலர்கள் நடந்து கொள்வது) போன்ற பிரிவுகளில் மோடி தண்டிக்கப்பட வாய்ப்பு உண்டு.

அமிக்கஸ்கூரி ராமச்சந்திரன் கொடுத்த அறிக்கையை ஒருக்கால் சிறப்புப் புலனாய்வுக் குழு ஏற்றுக்கொள்ளாது மறுக்குமேயானால், ஜாப்ரியின் மனைவி ஜாஹியா அமிக்கஸ்கூரி ராமச்சந்திரன் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் கோரி வழக்கு தொடரவும் வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே 2004 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த 19 வயதே நிறைந்த இஸ்ரத் ஜஹான் மற்றும் மூவர் என்கவுண்டர் பெயரில் சுட்டுக் கொன்ற உண்மை இப்பொழுது உறுதி செய்யப்பட்டு விட்டது.

மேலும் மேலும் சட்டத்தின் பிடியில் இறுகும் நிலைதான் மோடிக்கு! நீதிமன்ற தீர்ப்பைப் பொறுத்து தான் மோடியின் எதிர்காலக் கனவுகள் பலிக்குமா- பலிக்காதா? என்ற நிலை எட்டப்படும்.

எப்படி இருந்தாலும் மோடி என்ற நபர் கொடூர மானவர், மதவெறியர் - சிறுபான்மை மக்களைக் கூண்டோடு ஒழித்துக் கட்ட எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர் என்ற பொதுவான கருத்து இந்திய மக்கள் மத்தியில் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை - உண்மையிலும் உண்மையாகும்!