Friday 21 March 2014

குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் சில அம்சங்கள்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் முன்னிறுத் தப்பட்டுள்ள பிரதம மந்திரி வேட்பாளர் நரேந்திர மோடி முகமூடி அணிந்துகொண்டு நாடு முழுவதும் வலம் வருகிறார். ஒரே நாளில் இரண்டு மூன்று மாநிலங்களுக்குக்கூட தனி விமானத்தில் பறந்து செல்கிறார். இவர் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் பயிற்சி பெற்று இளம் வயதி லிருந்து ஆர்எஸ்எஸ் இட்ட பணிகளை மிக விசுவாசமாக செய்து வருபவர். இப்பொழுது கூட ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை குஜராத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றி வந்த காரணத்தால் அதையே இந்தியா முழுமையாக செயல்படுத்திட ஆர்.எஸ்.எஸ். பணித்துள்ளது. இவர்களுடைய சித்தாந்தம் என்ன? கொள்கை கோட்பாடுகள் என்ன, குஜராத்தில் எப்படிசெயல்படுத்தி வருகிறது என்ற உண் மைகளை முழுமையாக திரைபோட்டு மறைத்து சுய உருவம் தெரியாமல் முக மூடி அணிந்து பிரச்சாரம் செய்து மக்களைஏமாற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவரின் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் சில அம்சங்களை முதலில் பார்ப்போம். இவை எப்படி குஜராத்தில் செயல் படுத்தப்பட்டுள்ளன என்பதை பின்னால் பார்க்கலாம்.

நேருவின் எச்சரிக்கை

ஜவஹர்லால் அவர் காலத்திலேயே இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய அபாயத்தை சுட்டிக்காட்டினார். தனது சுய சரிதையில் ‘பிரிட்டிஷ் ஆட்சி முழுமையாக அகற்றப்பட்ட பிறகு மேல்தட்டு மத்திய வர்க்கத்தினர் மற் றும் பணக்கார வர்க்கத்தினர் ஆதரவுடன் பாசிசம் வேகமாக வளர்ந்தாலும் வளரலாம்’ என்றார் நேரு. “சிறுபான்மையினரின் வகுப்பு வாதத்தைவிட மிக மிக அபாயகரமானது பெரும்பான்மையினரின் வகுப்புவாதம்” (1948, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் நேரு உரை). “சிறுபான்மையினர் வகுப்புவாதத்தை நாம் சுலபமாக கண்டுகொள்ள இயலும், புரிந்துகொள்ளவும் முடியும். ஆனால் பெரும் பான்மையினரின் வகுப்புவாதம் தேசியவாதம் எனக்கொள்ள வைக்க முடியும்” (1961ல் நேரு சுட்டிக்காட்டியது). “நான் இந்து தேசியவாதி” என்கிறார் மோடி. “இந்தியாவிற்கு வாக்களியுங்கள்” என்கிறது மோடியின் விளம்பரம். இந்து தேசிய வாதம், இந்திய தேசியவாதமல்ல இதுதான் இன்று இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து. முழு வெற்றி பெற்றால் இந்தியா, பாகிஸ்தான் போன்று ஆக்கப்பட்டுவிடும். அங்கு இஸ் லாமிய தேசியவாதம் என்றால் இங்கு இந்து தேசியவாதம்.

பாசிசத்தின் இந்திய வடிவம்

ஆர்எஸ்எஸ் 1925ல் துவக்கப்பட்டது. இதை துவக்கிய முதல் சர்சங்சாலக் ஹெட் கேவாரின் குருநாதர் டாக்டர் பி.எஸ்.மூஞ்சே 1931ல் இத்தாலிக்கு சென்று பாசிச ஆட்சித் தலைவர் முசோலினியை சந்தித்து பாசிச அமைப்பு முறைகளைப் பற்றி 13 பக்க குறிப்புவெளியிட்டார். (நேரு மியூசியம் நூலகத்தி லுள்ளது). பாசிஸ்ட் கட்சி பாணியில் சிறு வர்கள் பயிற்சி (6-18 வயது) இளைஞர்கள் உடற்பயிற்சி, ராணுவப் பயிற்சி (இதற்காக நாக்பூரிலும் நாசிக்கிலும் இரண்டு ராணுவப் பயிற்சி பள்ளிகள் துவங்கி இன்றும் செயல்பட்டுக்கொண்டு வருகின்றன) அணி வகுப்புகள், டிரில்கள் ஆகியவை விலக்கப் பட்டுள்ளன. “எதிரி மக்கள் கூட்டத்தைத் தாக்கிஅதிகபட்சம் கொலை செய்து காயமடைய வைத்து வெற்றிகாணும் திறன் கொள்ள இந்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது” மூஞ்சே தனது திட்டக் குறிப்பில் முன்வைக்கிறார்.

“இந்து, இந்தியாவின் ஒற்றுமைக்கும் இந்துக்களின் ராணுவ மறுமலர்ச்சிக்கும் பாசிசம் தெளிவான வழிகாட்டுகின்றது ஹெட் கேவார் தலைமையிலுள்ள ஆர்எஸ்எஸ் இதுபோன்ற நிறுவனமாகும். ஹெட்கேவாரின் அமைப்பை விரிவுபடுத்தவும் இதர மாநிலங் களுக்கு பரப்பவும் எனது எஞ்சியுள்ள வாழ் நாளை கழிப்பேன்” என்றும் எழுதினார் மூஞ்சே.இவர் ஜெர்மனிக்கும் சென்று ஹிட்லரின் நாஜிக் கட்சி அமைப்பை பற்றியும் தெரிந்து கொண்டார். (இறுதியில் 1943ல் இந்த முசோலினி மக்களால் தெருக்களில் அடித்துக்கொல்லப்பட்டதும் ஹிட்லர் விஷம் குடித்தும் செத்ததும் வேறு கதை).

1934 ஜனவரி 31ம் தேதி “பாசிசமும் முசோலினியும்” என்ற தலைப்பில் பம்பாயில் நடந்தகூட்டத்திற்கு ஆர்எஸ்எஸ் முதல் சர்சங் சாலக் (1925-1940) ஹெட்கேவார் தலைமை வகித்தார். இதில் உரையாற்றிய மூஞ்சே, “இந்து தர்ம சாஸ்திரத்தின் அடிப்படையில் இந்து மதத்தை இந்தியா முழுவதும் கட்டுவதற்கு நான் திட்டத்தை தயாரித்துள்ளேன். இத் தாலியின் முசோலினி ஜெர்மனியின் ஹிட்லர் போன்று ஒரு சர்வாதிகாரி இல்லாமல் இந்த லட்சியத்தை செயல்படுத்த இய லாது” என்றார். இத்தகைய பயிற்சி பெற்ற ஒருவரை தற்காலத்திற்கேற்றவாறு உருவாக்கு வதற்கான முதல் முயற்சியில் இன்று ஆர்எஸ்எஸ் ஈடு பட்டிருக்கின்றது.

இந்து தேசியமா, இந்திய தேசியமா?

இந்திய தேசியத்தை ஒரு “விசித்திரமான மிருகம்”, ஒரு “பூதாகரமான பிரமை” என்று ஆர்எஸ்எஸ்சின் இரண்டாம் சர்சங்காலக் கோல் வார்க்கர் விளக்கினார். இது ஒரு ஹம்பக் தேசியம் என்றார்.“இப்படிப்பட்டஒரு மோசடி தேசியத்திற்கு உயிருண்டாக்க முயற்சிக்கின்றனர். ஒரு காளையின் கால்களையும், ஒரு கழுதையின் தலையையும், ஒரு யானையின் துதிக்கையும் இணைத்து ஒரு விசித்திரமான மிருகத்தை உருவாக்கும் முயற்சிக்கு ஒப்பாகும். இதன் விளைவு ஒரு பூதாகரமான பிணம்தான். இது ஒரு உயிருள்ள உயிரினமாக இருக்க முடியாது. இதில் சில அசைவுகள் தென்பட்டால் அதை அழுகிவரும் சடலத்தில் உற்பத்தியாகும் கிருமிகளின் செயல்பாடுதான்” .

(குரு கோல்வார்க்கர் - ஞானகங்கை பக்.239)மேலும் நமக்கு முன்னால் உள்ள கேள்வி யாதெனில் “இஸ்லாத்திற்கோ, கிறிஸ்து வத்திற்கோ மதம் மாற்றப்பட்டவர்களின் போக்கு என்ன என்பதை அவர்கள் இந்தநாட்டில்தான் பிறந்திருக்கிறார்கள் சந்தேக மில்லை. ஆனால் இதனிடம் பக்தி விசுவாசத்துடன் வாழ்கின்றார்களா? இந்தநாட்டிடம் நன்றி விசுவாசம் பாராட்டு கின்றார்களா?... மதம் மாறுவதுடன் கூட இந்து ராஷ்ட்ரியத்திடம் உள்ள அன்பு நெகிழ்ச்சியும் பக்தி பாவனையும் அழிந்துவிட்டது” (ஞான கங்கை பக்கம் 193)“ஆகவே நாம் கூறுவதெல்லாம் இதுதான்.

இவர்கள் தமது மன அமைப்பு நிலையை கைவிட்டுவிட்டு இந்து தேசிய வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிடவேண்டும். தங்களு டைய மூதாதையருக்கு சொந்தமான பக்திமுறைகளையும் பின்பற்றட்டும்.... மீண்டும் திரும்பி வந்து உடையிலும், பழக்க வழக்கங்களிலும் திருமண சடங்குகளையும் இறுதிச்சடங்குகளையும் நடத்துவதிலும் அதுபோன்ற மற்றெல்லா நிகழ்ச்சிகளிலும் தங்கள் முன்னோர்களான ஹிந்துக்களின் வாழ்க்கை முறையுடன் இரண்டறக் கலக்கவேண்டும். வழிதவறிய சகோதரர்களைப் போல் மீண்டும் நமது தர்மத்திடம் இரண்டற கலந்துவிட வேண்டும்” (ஞா.க.பக்.197, 200).

அரசியல் சாசனம் மாற்றப்படவேண்டுமாம்!

“நமது நாட்டின் கூட்டாட்சித்தன்மை பேச்செல்லாம் நிரந்தரமாக குழிதோண்டிப் புதைக்க வேண்டும். பாரதம் என்ற ஒரே ராஜ்யம் தானிருக்க வேண்டும். பூரண சுயாட் சியோ அரைகுறை சுயாட்சியோ உள்ள எல்லாமாநிலங்களையும் துடைத்தெறிய வேண்டும்”“ஒரே தேசம், ஒரே ராஜ்யம், ஒரே சட்டமன்றம், ஒரே நிர்வாகம் என்று பிரகடனப்படுத்த வேண்டும்... மாநிலவாதம், மொழிவாதம், குறுகிய கட்சிவாதம் அல்லது வேறு எவ்விதமான தற்பெருமை உணர்ச்சிகளுக்கு இடம்தரக்கூடாது”“அரசியல் சாசனத்தை மீண்டும் பரி சீலனை செய்து ஒற்றை அரசு முறையை (Unitary form of govt)நிறுவி திருத்தி எழுத வேண்டும். அதன் மூலம் நாம் அனைவரும் தனித்தனி இனங்களைச் சார்ந்தவர்கள்.. என்பதை பொய்யாக்கவேண்டும்.” (Ph.f. g¡. 686, 687)

“நமது தேசிய மொழிப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் சமஸ்கிருதம் அந்த இடத்தைப் பிடிக்கும் வரை இந்தி மொழிக்கு அந்த இடத்தை நாம் தரவேண்டியிருக்கும்” (ஞா.க. பக். 171)வாஜ்பேயின் ஆட்சியிலிருந்த காலத்தில் அரசியல் சட்டத்தை மாற்றியமைக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி (ஒய்.வெங்கடாச் சலையா தலைமையில்) ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. நால்வர் கொண்ட கமிட்டி (சுவாமிவாம தேவ், சுவாமி முக்தானந்த் சரஸ்வதி, சுவாமி நிரஞ்சன் தேவ்தீர்த், சின்மையானந்தா) அமைக்கப்பட்டு 63 பக்க அறிக் கையும் சமர்ப்பிக்கப்பட்டது. “இன்றைய அர சியல் சட்டம் தூக்கி எறியப்பட வேண்டும்” “இந்துத்துவா அரசியல் சட்டம் இடம்பெற வேண்டும்” என்றனர். இவர்கள் முயற்சி அன்று வெற்றிபெறவில்லை.பிரதமர் வாஜ்பாய் அமெரிக்கா சென்றி ருந்தபொழுது விஷ்வ இந்து பரிஷத்தினர் எப்பொழுது அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்படும்? எப்பொழுது அரசியல் சட்டம் மாற்றம் செய்யப்படும்? என்று கேட்கப் பட்டபொழுது “நாடாளுமன்றத்தில் நமக்குத் தனி பெரும்பான்மை கிடைத்தபின் இவைகள் நிறைவேற்றப்படும்” என்றார்.இன்று தீவிர ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் நரேந்திர மோடி இவைகளையெல்லாம் ஒளித்து வைத்துக்கொண்டு மோடி வித்தை காட்டுகிறார்.உலகிலேயே சிறந்த மதம் இந்து மதம், ஏனெனில் அது மதமே அல்ல என்றார் ஜார்ஜ் பெர்னாட்ஷா. ஏனெனில் இது அனைவரையும் அணைத்துக்கொள்ளும், நாத்தீகர்கள் உட்பட விவேகானந்தர் கூட நாத்தீகம் பேசினார்.

அவ்வளவு தாராளமானது, சகிப்புத்தன்மை கொண்டது.கேள்வி என்னவென்றால் மூஞ்சே, சாவர்க்கர், ஆர்எஸ்எஸ் சர்சங்சாலக்குகள் ஹெட்கேவார் (1925-40) குருகோல்வார்க்கர் தேவ்ராஸ், இன்றைய சர்சங்காலக் மோகன்பகத் ஆகியோரின் கொள்கைகள் மாற்றப்பட் டுள்ளனவா? (இவர்கள் அனைவரும் மகாராஷ்டிரா சித்பவன் பிராமணர்கள்!) இந்தமன அமைப்பு நிலை ( (mind set) ) கைவிடப் பட்டுள்ளதா? இதற்கு ஆர்எஸ்எஸ்ஸின் பதில் என்ன? மோடியின் தன்னிலை விளக்கம் என்ன?

நன்றி: தீக்கதிர்,21-03-2014

No comments:

Post a Comment