Thursday 26 December 2013

ஒரு ஃபாசிஸ்டின் உண்மையான தோற்றம் (2)

- அமித் சென்குப்தா


 
(நரேந்திர மோடியை உற்று நோக்குபவர்கள் பலரும்  அவரைப் பற்றி திடுக்கிடச் செய்யும், மனதை உறைய வைக்கும் சில செய்தி களைக் கூறுவார்கள்)

காட்டாண்டித்தனமான இந்தக் கதைகளையெல்லாம் கேட்ட பிறகும்,  நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முன்னேற்றத்தை உருவாக்கியவர், புதிய வரலாறு படைத்தவர் என்று எப்படி கூறமுடிகிறது? வெற்றி பெற்ற ஒரு மாநிலத் தலைவர் என்றும், வருங்காலத்தில் மிகச் சிறந்த தேசத் தலைவராக விளங்கத் தகுதி படைத் தவர் என்றும் எப்படி கூற முடிகிறது? இந்தியர்களாகிய நாம் அந்த அள வுக்கு  நினைவாற்றல் அற்றவர்களாக இருக்கிறோமா? அல்லது இந்த மோடி ஒளிர்கிறார் என்று நாடகத்தனமாகக் கூறுவது, கார்ப்பரேட் நிறுவனங்கள் - ஊடகங்கள் கூட்டுறவின் மூலம் சில சுயநல சக்திகளால் கட்டிவிடப்பட்ட அரசியல் கழைக்கூத்துதான் என்பது வெளிப்படையாகத் தெரிவதாகும். இந்த உறவு எதிர்காலத்தில் அவர்கள் மீதே திரும்பி வந்து தாக்க இயன்றதாகவும் இருக்கலாம்.

இமயமலையில் ஒரே நாளில் நிலச் சரிவுகளில் இருந்து 15,000 குஜராத் மக்களை (வேறு மாநில மக்களே இல்லையா?)  மோடி காப்பாற்றினார் என்பது போன்ற கட்டுக் கதைதான் இதுவும். இப்போது அவர் எல்லா பெயர்களாலும் - மோசடி, மோசடி மோடி, நம்போ பம்போ ரம்போ என்ற அழைக்கப்படுகிறார். ஒத்திகை பார்க்காத சூழ்நிலைகளில் அவரது புகழ், பெருமை என்பது நீர்க்குமிழி போல உடைந்து போகிறது.  அரிய நேர்காணல் ஒன்றில் குஜராத் கலவரப் பேய் பற்றி மோடிக்கு தொலைக்காட்சி செய்தியாளர் கரன் தாபர் நினைவு படுத்தியதை இதற்கு எடுத்துக் காட் டாகக் கூறலாம்.  அவருடைய நேர் காணல்கள், செய்தி நிகழ்ச்சிகள் அனைத்துமே பணம் கொடுத்து ஏற்பாடு செய்யப்படுபவையே.  கரன் தாபரின் நேர்காணல் மட்டும் தவறி விட்டது. மக்கள் தீயில் எரிந்து மடியும்போது வயலின் வாசித்த நீரோ மன்னனைப் போன்ற  என்று மோடியை உச்சநீதிமன்றம் குறிப்பிட்டதைப் பற்றி தாபர்-மோடிக்கு நினைவுபடுத்தினார். திடீரென்று அவரது அகம்பாவம் மிகுந்த தோற்றம் மாறி அவர் கூனிக் குறுகிப் போய், தவறான ஆங்கிலத்தில் உளறிக் கொட்டி, ஏராளமாக வியர்த் துப் போய், குடிக்கத் தண் ணீர் கேட்டு உடனடியாக நேர்காணலை முடித்துக் கொண்டார்.

இது போன்ற நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலத்தினுள் நடப்பது அரிதிலும் அரிதா கும். தன்னை எதிர்ப்பவர் களை அவர் இரும்புக் கரம் கொண்டு அடக்கிவைத்தார். மாநிலத்தில் ஒரு மனிதரின் சர்வாதிகார ஆட்சி நிலவியது. தனது கோட்பாட்டு சகாக்களான ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. ஆட்களையும் கூட மோடி அழித்துள்ளார். வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாத, பேராசை கொண்ட சில கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு மான்ய உதவிகளைச் செய்து அவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொண்டார். இடையூறு இல்லாத நிகழ்ச்சிகளாக மோடியின் நிகழ்ச்சிகளை நேரடியாக ஊடகங்கள் ஒளிபரப்புவதற்கு இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊடகங் களுக்கு பணம் கொடுப்பதாக நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் பணம் கொடுத்து ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளே; செய்தி போல காட்டப்படும் விளம்பரங்களே இவை. உத்தரகண்ட் மாநில ஆங்கில நாளிதழ் வெளியிட்ட மோடி ஒரே நாளில் 15000 குஜராத்திகளை இமயமலையில் காப்பாற்றினார் என்ற போலியான செய்தியை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

ஷொராபுடீன் போலி என்கவுண்டர் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற மோடியின் நண்பரான அமித் ஷாவும் கூட மறுபடியும் சிறைக்குச் செல்லக் கூடும் என்ற நிலையிலும், சில நேரடி தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் மோடியுடன் கலந்து கொள்கிறார். பொதுமக்களின் பெரும் ஆதரவும் அன்பும் பெற்ற மாபெரும் தலைவர்கள் போலவும், மெத்தப்படித்த மேதாவிகள் போலவும்,  துறவு மனப் பான்மை கொண்டவர்கள் போலவும், தொலைநோக்குப் பார்வை கொண்ட வர்கள் போலவும்  மோடியும் ஷாவும் இந்நிகழ்ச்சிகளில் காட்டப்படுகின்றனர். இவர்களை நேரடி ஒலிபரப்பில் கண்ட வுடன் ஒட்டு மொத்த தேச மக்களும் மகிழ்ச்சியின் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டுவிடுவார்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள் போலும்

இந்த உறுதியற்ற நிலையிலும் நகர்ப் புறங்களில் உள்ள உயர்வருவாய்ப் பிரிவு மக்களிடையே கண்ணுக்குத் தெரியாத மோடி ஆதரவு உணர்வு ஒரு வேளை இருக்கக்கூடும். ஆனால் நாடு முழுவ திலும் தனக்கு பெருத்த ஆதரவு இருப்ப தாக மோடி நினைப்பது வெறும் கற் பனையே; இக்கற்பனைக்கு ஊடகத்தின் ஒப்புதலும் தந்திரமாக பெறப்பட்டுள்ளது. சிக்கல் நிறைந்த, பிளவுபட்ட சமூகம் கொண்ட, வறுமை தாண்டவமாடும், முன்னேற்றம் பெறாத இந்தியா போன்ற ஒரு நாட்டில்  ஊடகங்களாலும், ஒரு சில பணக்காரர்களாலும் தேர்தலில் வெற்றி பெற்றுவிடமுடியாது. 2004 இல் காட் டப்பட்ட இந்தியா ஒளிர்கிறது என்ன ஆயிற்று என்பது நினைவில் இருக் கிறதா?

கொலைகாரன் என்றும் கொலைகாரன் தான் என்ற பழமொழி ஒன்று இருக்கிறது. அந்த உண்மையை மக்கள் மறந்து விடுவதாகத் தோன்றவில்லை.  பாபர் மசூதியை இடித்துவிட்டு, பின்னர் நாடு முழுவதிலும் ரத்த ஆறு ஓடும் அள வுக்கு மதக் கலவரங்களை ஏற்படுத்தியவர்களும்,  ரத்தம் சிந்தும், பகை உணர்வு அரசியலை அறிந்தவர்கள்தான்.  தேவைகளும், புறக்கணிப்புகளும் மிகுந்த இந்த நாட்டின் மக்களை மத அடிப்படையில் பிரித்து வைத்து பயன் பெற நினைப்பது இயலக் கூடியது அல்ல. அப்படி செய்ய முடியுமானால், பா.ஜ.க.வும் ஆர்.எஸ். எஸ்.சும்தான் இன்று உத்திரப் பிரதேசத் திலும், இந்தியாவிலும் ஆட்சி செய்து கொண்டிருக்க வேண்டும். குறைந்தது ராமர் கோயிலாவது கட்டப் பட்டிருக்க வேண்டும்.

மோடியின் ஊடக நடிப்பைப் பற்றி பத்திரிகையாளர் சிமா முஸ்தபா அண் மையில் தெரிவித்துள்ள ஒரு சிறு கருத்து:

மோடி தனது சவக்குழியை தானே மெதுவாகவும், முறைப்படியும்  வெட்டிக் கொண்டிருக்கிறார்.  போடக்ஸ் மற்றும் சிலிகான் கொண்டு செய்யப்பட்ட இயந்திரமனிதனைப் போன்றவர்தான் மோடி.  ஒத்திகை பார்க்க முடிந்தாலும், அவரது செயலாற்றல் ஓர் அளவுக்கு உட்பட்டதுதான்.  குஜராத் மாநிலத் துக்கு வெளியே அவர் சவுகரியமாக இல்லாதது போல தோன்றுகிறது. டில்லி பல்கலைக் கழகத்தில் ஒரு நிகழ்ச்சியை ஒத்திகை பார்த்தபோது மட்டும் அவர் நன்றாக இருந்தார். நேர்காணல்களிலோ அல்லது ஒத் திகை பார்க்காத சூழ்நிலைகளிலோ, அவர் உடைந்து போகிறார். மற்றவர் களின் கருத்து சரியானதல்ல என்று கருதுபவர் மோடி. சாதாரணமாகக் கேட்கப்படும் கேள்விகள் கூட அவருக் குள் இருக்கும் இந்த உணர்வை, தன்னைப் போல் இல்லாதவர்கள் மீதான வெறுப்பை வெளிக்கொண்டு வந்துவிடும். தேர்தல் நடக்கும் காலம் நெருங்கும்போது, மோடி கட்சிக்கு பெரும் பலம் என்ற நிலை மாறி கட்சிக்கு பெரும் சுமை என்று பா.ஜ.க. காணவும் கூடும்.  நிச்சயமாக இந்திய நாடாவது அதைக் காணும்.

(நன்றி: கின்டில் ஆகஸ்ட் 15, 2013)
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

(தொடரும்)

Read more: http://www.viduthalai.in/page-2/72622.html#ixzz2oeXHG7hj

ஒரு ஃபாசிஸ்டின் உண்மையான தோற்றம் (1)

- அமித் சென்குப்தா


 
(நரேந்திர மோடியை உற்று நோக்குபவர்கள் பலரும்  அவரைப் பற்றி திடுக்கிடச் செய்யும், மனதை உறைய வைக்கும் சில செய்தி களைக் கூறுவார்கள்)

ஆஷிஷ் நந்தி என்ற சமூக அறிவிய லாளர், 1990களின் தொடக்கத்தில் நரேந்திரமோடியைப்  பேட்டி கண்டவர். பேட்டியை முடித்துக் கொண்டு வெளியே வந்த அவர் அதிர்ச்சியுடன் கூறிய சொற்கள்:

பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிரபலம் அடையாமல் ஒரு சாதாரண ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்த நரேந்திர மோடி, பா.ஜ.கட்சியின் ஒரு சிறு பொறுப்புக்கு வருவதற்கு முயற்சிகள் செய்து கொண்டிருந்தவர். அவரைப் பேட்டி காணும் பெருமை எனக்குக் கிடைத்தது. மோடியைப் பற்றி இவ்வாறு கூறுவதற்காக நான் மகிழ்ச்சி அடையவில்லை. என்றாலும்,  எதேச்சாய திகார மனப்பான்மை கொண்ட மனிதர் களுக்கு உண்டான அளவுகோல்கள், கூறுகள், குணநலன்கள் எவை என மனநோய் மருத்துவர்களும், உளவியல் மருத்துவர்களும், மனஇயல் வல்லுநர் களும் பல ஆண்டு ஆய்வுகளுக்குப் பிறகு நிர்ணயித்துள்ள அம்சங்கள் அனைத்தையும் நிறைவு செய்பவராக நரேந்திர மோடி இருக்கிறார் என்று தான் என்னால் கூறமுடியும். தூய் மையான உயர்ஒழுக்கக் கொள்கை என்று தான் கருதியிருப்பதில் கொண்டிருக்கும் பிடிவாதம், உணர்ச்சி வயப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய ஒரு குறுகிய கண்ணோட்டம்,  தனது கருத்தை நிலைநாட்டுவதில்  அள வுக்கு அதிகமாகக் காட்டும் தன் முனைப்பு, தனது உணர்வுகள் பற்றிய அச்சம் மற்றும் அத்தகைய உணர்வுகள் இருப்பதை ஏற்காமல் மறுப்பது,  அவற்றுடன் இணைந்த வன்முறை பற்றிய கற்பனைகள் - ஆகியவற்றின் ஒட்டு மொத்த கலவையாக, தன்னைப் பற்றி பிறர் இழிவாகவும், தவறாகவும் பேசுகின்றனர் என்ற எண்ணத்தையும், ஒன்றைப் பற்றியே மிகத் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் தனித் தன்மைப் பண்புகளையும் கொண்டு, அத்தகைய சமூக சூழ்நிலையில் வளர்ந்தவர் அவர் என்பது தெளிவாகத் தெரிகிறது..  நாட்டுத் துரோகி என்றும்,  தீவிரவாதியாக மாறக் கூடியவர் என்றும் ஒவ்வொரு முசுலீமுக்கும் வண்ணம் தீட்டி,  இந்தியாவுக்கு எதிராக ஒட்டு மொத்த உலகமும் சதி செய்கிறது என்ற கோட்பாட்டை அவர் தீர்மானமான குரலில் விவரித்தது இன்னும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. பேரதிர்ச்சி அடைந்த நிலையில் பேட்டியை முடித்துக் கொண்டு வெளியே வந்த நான், ஒரு ஃபாசிஸ்டுக்கான இலக்கணங்களை முழுமையாகப் பெற்றுள்ள ஒருவரை -  எதிர்காலத்தில் ஒரு பெரும் கூட்ட மான மக்கள் இனத்தையே அழிக்க வல்ல - தனது கொள்கைகளுக்காக எவரையும் கொல்லத் தயங்காத -  ஒருவரை இப்போதுதான் நான் சந்தித்திருக்கிறேன் என்று யாக்னிக் கிடம் கூறினேன். அண்மையில் பிரைம் டைம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்,  நாகரிகமற்ற ஒரு விலங்கு என்று நரேந்திர மோடியைப் பற்றி மற்றொரு சமூக அறிவியலாளர் சிவ. விஸ்வநாதன் கூறியிருந்தார்.

குஜராத்தைப் பற்றி பத்தாண்டு காலம் நான் ஆய்வு நடத்தி யிருப்பதால், அவரை மிருகம் என்று நான் கூறியதைப் பற்றி நான் நிச்சயமாக அறிந்துள் ளேன் என்பதை உறுதிப்படுத்து கிறேன்.  மோடியின் உடல் அசை வுகள் அவரது அகம்பாவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளன என்று அய்க்கிய ஜனதா கட்சித் தலைவர் சிவானந்த் திவாரி முன்பு கூறியிருக்கிறார். அண் மையில் (ராய்ட்டார் பேட்டி ஒன்றில் மோடி வக்கிரமாக கொலைவெறி எண்ணத்து டன் கூறிய குட்டே கா பச்சா என்று மோடி கூறிய பிறகு) மோடி மனநோய் மருத்துவர் ஒருவரைச் சென்று பார்த்து சிகிச்சை பெற வேண்டும் என்று திவாரி கூறினார். மோடியின் குணநலன்களைப் பற்றி அறிந்து கொள்ள அவரது உடல் அசை வுகள்,  அவரது மனநிலை ஆகியவை பற்றிய இவர்களின் கருத்துகளை நாம் நம்பத்தேவையில்லை; கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவரைப் பற்றி அறிந்து கொள்ள அவரது கடந்த கால நடத்தை பற்றிய பதிவுகளைப் பார்த்தாலே போதுமானதாகும்.

குஜராத் கலவரம் மாநில அரசினால் தூண்டிவிடப்பட்டது, மிகுந்த மதி நுட்பத் துடன் உயர்ந்த ஒரு நிலையில் திட்டமிடப் பட்டதாகும் என்று தெரிவிக்கும்,  மிகவும் நுணுக்கமாக  ஆவணப்படுத்தப்பட்டுள்ள  அறிக்கைகள் 45க்கு மேல் உள்ளன. பெரிய அளவிலான இந்த கலவரம் காவல்துறை மற்றும் உயர் அதிகார வர்க்கத்தினரால் கருத்துருவாக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டு, ரத்ததாகம் கொண்ட கலவரக் கும்பலாலும், பெண் களை வன்புணர்ச்சி செய்யும்  சங் பரிவார கும்பலாலும், மோடியின் அமைச்சர்களா லும், இந்துத்துவ தலைவர்களாலும் கள அளவில் செயல்படுத்தப் பட்டது.  இந்த ஆவணங்களில் தேசிய மனித உரிமைக் கழகத்தின் அறிக்கையும்,  புகழ் பெற்ற முன்னாள் நீதிபதிகள் அடங்கிய மக்கள் தீர்ப்பாயத்தின் பல தொகுப்புகள் கொண்ட அறிக்கைகளும் அடங்கும். மாநில அரசினால் திட்டமிட்டு தூண்டி விடப்பட்ட கலவரங்களில் பாதிக்கப்பட்ட  பில்குஸ் பானு, ஜாகிய ஜாஃப்ரி போன்ற பெண்கள் உள்ளிட்ட, எண்ணற்ற கலவர நிகழ்ச்சிகளை நேரில் கண்ட சாட்சியங் களும் உள்ளன.

ஜாகிய ஜஃப்ரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும், அவர் அளித்த சாட்சியங்களும், முன் வைத்த வாதங்களும் குஜராத் அரசுக்கும், கலவரக்காரர்களுக்கும் இடையே இருந்த நெருங்கிய தொடர்பினையும், வன்முறைச் சம்பவங்கள் துல்லியமாக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை என்பதை யும்  சுட்டிக் காட்டுகின்றன. மோடியையே கலவரத்துக்குக் காரண கர்த்தாவாகச் சுட்டிக் காட்டும் ஆதாரங்கள் பல உள் ளன. மாநில அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் நடைபெறுவ தற்கு முந்தைய நாள் அரசு உயர் அதி காரிகளின் கூட்டம் முதல்வர் மோடி வீட்டிலேயே நடத்தப்பட்டது ஒரு முக்கிய மான சான்றாகும். திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலை பற்றியும் அதன் பிறகு பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகள் முகாம்களில் மனித நேயமற்ற சூழலில் பட்ட துன்பங்கள் பற்றியும் இதர ஆவணங்கள் விரிவாகக் கூறுகின்றன. கத்திகள் கொண்டு பெண்கள் வயிறுகள் கிழிக்கப்பட்டுள்ளன. பெரும் அளவிலான பெண்கள் கும்பல் கும்பலாக வன்முறையாளர்களால் வன் புணர்ச்சி செய்யப்பட்டனர்.  மண்ணெண் ணெய் நிரப்பப்பட்ட தீப்பெட்டிகள் குழந் தைகளின் வாய்களில் திணிக்கப்பட்டன.  பெண்களும், குழந்தைகளும் உயிருடன் எரிக்கப்பட்டனர். இவை அனைத்தும் பத்திரிகையாளர்கள், சமூகத் தொண் டர்கள், வழக்கறிஞர்கள், கண்ணால் கண்ட சாட்சிகள், அதிகாரிகள், திரைப் படத் தயாரிப்பாளர்கள் மற்றும் பலராலும்  முறையாகயும், விரிவாகவும் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன.

முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரியான ஹர்ஷ் மந்தர் 2002 மார்ச் 19 அன்று அவுட்லுக் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட் டுள்ளார்:

அவர்களிடமிருந்து  கேட்ட செய் திகள் மற்றும்  நேரில் கண்ட நிகழ்ச்சி களில் ஒரு சிலவற்றையாவது கட்டாயமாக எழுதவேண்டும் என்று எனக்கு நானே தீர்மானித்துக் கொண்டேன்.  இவற்றைப் பற்றியெல்லாம் நாமெல்லோரும் அறிந்து கொள்வது முக்கியம் என்பதே இதன் கார ணம்.  அத்துடன், எனது மனச் சுமையை இதன் மூலம் நான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இயலக்கூடும்.

தன்னைக் கொல்லாமல் விட்டு விடும் படி 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருத்தி  மன்றாடியதைப் பற்றியும், ஆனால் அவளைத் தாக்கியவர்கள், அவளது வயிற்றினைக் கிழித்து சிசுவை வெளியில் எடுத்து, அவளது கண் முன்னாலேயே அதனை வெட்டிக் கொன்றதைப் பற்றியும் உங்களால் என்ன கூற இயலும்? 19 பேர் வாழ்ந்து வந்த ஒரு வீட்டிற்குள் தண்ணீரை நிரப்பி,  அதில் மின்சாரம் பாய்ச்சி அவர் களைக் கொன்றதைப் பற்றி உங்களால் என்ன கூற இயலும்?

தனது தாயையும், தனது 6 சகோதர சகோதரிகளையும் தன் கண் முன்னாலேயே வெட்டிக் கொலை செய்ததைப் பற்றி ஜூஹாபுரா முகாமில் இருந்த ஆறு வயது சிறுவன் ஒருவன் கூறியதைப் பற்றி உங் களால் என்ன கூற இயலும்? அவன் தாக்கப்பட்டபோது மயங்கி விழுந்துவிட்டதால், அவன் இறந்து விட்டான் என்று நம்பி கலவரக் காரர்கள் விட்டு விட்டுச் சென்றதால் அச்சிறுவன் உயிர் தப்பினான். கலவரத்தால் மிகமிக மோசமாக பாதிக்கப்பட்ட அஹமதாபாதின் நரோடா-பாடியா குடியிருப்பில் இருந்து தப்பி ஓடிய ஒரு குடும்பத்தினர், எவ்வாறு ஒரு இளம்பெண்ணும் அவளது மூன்று மாதக் குழந்தையும் உயிரிழந்தனர் என்று கூறியுள்ளனர். அவளை ஒரு காவலர் பாதுகாப்பான இடம் என்று கூறி அனுப்பி வைத்த இடத்தில் ஒரு கலவரக் கும்பலால் அவளும் அவளது குழந்தையும் மண்ணெண்ணெய் ஊற்றி எவ்வாறு எரிக்கப்பட்டனர் என்பதை அவர்கள் கூறியுள்ளனர்.

குஜராத்தில் ஒட்டு மொத்தமாக நடந்தேறிய காட்டாண்டி செயல்களில், பெண்களின் மீதான பாலியல் வன் கொடுமையை  ஒரு வன்முறைக் கருவி யாகவே  பரவலாக பயன்படுத்தியதைப் போன்று, இதற்கு முன் நடந்தேறிய எந்த  ஒரு கலவரத்திலும் நடந்ததாக  இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை.

இளம்பெண்களும், முதிர்பெண் களும் கூட்டங் கூட்டமாக பாலியல் வன்முறை செய்யப்பட்டது பற்றிய அறிக்கைகள் எல்லா இடங்களில் இருந்தும் வந்து கொண் டேயிருந்தன. இப்பெண்கள் எல்லாம் அவர்களது குடும்பத்து ஆண்களின் கண் முன் னாலேயே பாலியல் வன்முறை செய்து பின்னர்  மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தோ அல்லது சம்மட்டியால் அடித்தோ கொல்லப்பட்டுள்ளனர்; ஓரிடத்தில் ஒரு ஸ்க்ரூ டிரைவராலேயே ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளார்.

அச்சத்தினால் பீதியடைந்திருந்த பெண்களை மேலும்  அச்சுறுத்துவதற் காகவே,   அவர்களின் கண் முன்னா லேயே, ஆயுதம் ஏந்திய கலவரக்கார ஆண்கள் தங்களை நிர்வாணப்படுத் திக் கொண்டனர் என்ற செய்தியை ஆமன் சவுக் முகாமில் இருந்த பெண் கள் கூறினர்.

அஹமதாபாத்தில் நான் சந்தித்த - சமூகப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், கலவரத்தில் இருந்து உயிர் தப்பியவர்கள் - ஆகிய மக்களில் பெரும்பாலோர், குஜராத்தில் நடந்தது கலவரமே அல்ல என்பதையும், நன்கு திட்டமிடப்பட்ட ஒரு தீவிரவாத இனப் படுகொலையே அது என்பதையும் ஒப்புக் கொண்டனர்.  ஒரு வெளிநாட்டு எதிரியின் படை மீது நடத்தப்படும் ராணுவத் தாக்குதல் போன்று நன்கு திட்டமிடப்பட்டு நடத் தப்பட்ட படுகொலை, கொள்ளையைப் பற்றியே ஒவ்வொருவரும் பேசிக் கொண்டனர்.



- (நன்றி: கின்டில் ஆகஸ்ட் 15, 2013)

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

(தொடரும்)

Read more: http://www.viduthalai.in/page-2/72516-modi.html#ixzz2oeWiyeAs

மோடிக்குப் புதுப் பதவி: எச்சரிக்கை! (2)

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து, அதனை சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிட்ட மாபாதகத்தைச் செய்தவர் குஜராத் முதல் அமைச்சராக இருந்த நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடி;  அவசர அவசரமாக அதிகாரிகளை அழைத்து - சிறுபான்மை யினருக்கு எதிரான வன்முறைகளைத் தூண்ட உத்தரவு பிறப்பித்தார் என்று காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்ல, மோடியின் அமைச்சர வையில் முக்கிய அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியாவும் கூறினார். அவர் சாட்சியாக மாறி விடுவார் என்று அஞ்சி அந்த அமைச்சரே படுகொலை செய்யப்பட்டார் மோடி ஆட்சியில். என் மகன் படுகொலைக்குக் காரணம் மோடிதான் என்று ஹரேன் பாண்டியாவின் தந்தை பகிங்கரமாகவே நானாவதி ஆணையத்தின்முன் சொல்லவில்லையா?

குஜராத் கலவர வழக்குகள் 4252; அவற்றில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், உச்சநீதிமன் றத்தின் ஆணையின்படி அல்லவா  அவை மீண்டும் உயிர் பெற்றன.

மோடியின் காவல்துறையினர் முதல் குற்றப் பத்திரிகையில் எப்படி வழக்கைப் பதிவு செய்தனர்? நரோடா பாட்டியாவில் நடைபெற்ற படுகொலை தொடர்பான வழக்கில் கீழ்க்கண்ட வாசகங்கள் இடம் பெறுகின்றன.

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்கிற வன் முறைக்குப் பதில் தரும் வகையில் இந்த வன்முறை நடந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் இதன் பொருள் என்ன? குற்றப் பத்திரிகையிலேயே தீர்ப்பை எழுதி விட்டனர் என்பதுதானே!

நரோடா பாட்டியா என்னும் ஒரே இடத்தில் மட்டும் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்களின் குடலைக் கிழித்துக் கருவைத் தீயில் தூக்கி எறிந்து - அந்தக் காட்சியைக் கண்டு குதூகலித்தனர். இந்தக் காட்டுமிராண்டித்தன படுகொலைகளுக் குத் தலைமை வகித்தவர் மோடி அரசின் முக்கிய அமைச்சராக இருந்த 55 வயது நிறைந்த ஒரு பெண்மணி - மாயாகோட்னானி - இவ்வளவுக்கும் இவர் ஒரு மகப்பேறு மருத்துவர் என்பது வெட்கக் கேடு!

இந்த வழக்கு ஒன்றும் இல்லாமல் குப்பைத் தொட்டிக்குப் போயிருக்கும். உச்சநீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழு (Special Investigation) வை அமைத்ததால் தான் குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டனர்.

மோடி அரசின் பெண் அமைச்சர் மாயாகோட் னானிக்கு 28 ஆண்டுகள் தண்டனை; பஜ்ரங்தள் என்ற அமைப்பின் குஜராத் மாநிலத் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வாழ்நாள் முழுவதும்; 8 பேருக்கு 31 ஆண்டுகள் தண்டனை. மேலும் 22 பேர்களுக்கு 24 ஆண்டுத் தண்டனை; இந்தத் தண்டனையை வழங்கிய நீதிபதி ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் பெயர் ஜோத் சனாயாக்னிக்.

தீர்ப்பில் அந்த நீதிபதி சொன்ன வாசகங்கள் மிக மிக முக்கியமானவை; குஜராத் வன்முறை இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். நரோடாபாட்டியா படுகொலைகளுக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு நியாயமாக தூக்குத் தண்டனை யைத்தான் வழங்கிட வேண்டும். உலகெங்கும் தூக்குத் தண்டனைக்கு எதிரான குரல் கிளம்பு வதால் ஆயுள் தண்டனையைக் கொடுக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாரே.

இன்னொரு அதிர்ச்சியான தகவல், நீதிபதி நானாவதி ஆணையத்தின்முன்  குஜராத் - மோடி அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது என்ன தெரியுமா? 2007ஆம் ஆண்டிலேயே ஆதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டன என்பதுதான்.

இவையெல்லாம் ஜனநாயக நாடு என்னும் இந்தியாவின் ஒரு மாநிலத்தில் நடந்ததுதான். மற்றொரு மானம் கப்பலேறும் தகவல், நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய் - குஜராத் கலவரம் தொடர்பாக பொது நல வழக்கினைத் தொடர்ந்த வழக்குரைஞரான அவர் கூறுகிறார்.

நான் ஏற்பாடு செய்திருந்த வழக்குரைஞர் களுக்கு மோடி காவல்துறையினர் மூலம்  பணம் கொடுத்துச் சரி கட்ட முயற்சித்தார் என்று கூறியுள்ளார்  - மோடியின் சீழ் பிடித்த புத்திக்கு இது ஓர்  எடுத்துக்காட்டாகும்.

குஜராத் மாநிலத்தில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் 287; அதில் 286 பேர் முஸ்லிம்கள், மற்றொருவர் சீக்கியர்.

எப்படி இருக்கிறது நியாயம்? படுகொலைக்கு ஆளான மக்களைச் சேர்ந்தவர்களைக் கைது செய்வதும், படுகொலைக்குக் காரணமானவர் களுக்கு மாப்பிள்ளை ஊர்வலம் நடத்துவதும்தான் மோடியின் தனிப் பாணி; இவர்தான் இந்தியாவின் பிரதமருக்கான வேட்பாளராம்; சொல்லுகிறது பிஜேபி - இந்துத்துவா கும்பல். வெகு மக்களே, எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://www.viduthalai.in/page1/62059.html#ixzz2oeUtJwft

Wednesday 13 November 2013

மோடியை விட்டு 2002 ஏன் விலகாது? -என். ராம்

குஜராத்தில் 2002-ல் நடந்த சிறுபான்மையினர் படுகொலை பா.ஜ.க-வைப் பொருத்தவரை மிகவும் தர்மசங்கடமானது. மோடி பிரதமரானால் மதச்சார்பற்ற, ஜனநாயக நாடான இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும் என்பதை 2002-லிருந்து இன்றுவரை ஆறாமலிருக்கும் வடு தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.
மோடி இப்போது எங்கு சென்றாலும் ஒரே ஓசை மயம். இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற அவருடைய பிரச்சாரம் இப்போது வேகம் எடுத்திருக்கிறது. தன்னம்பிக்கை மிளிரும் அவருடைய பீடு நடையில் மிளிரும் உண்மை அதுதான்: பிரச்சாரத்தில் நன்றாகப் பேசுகிறார்; ஆனால், வாஜ்பாயின் பேச்சுக்கலைக்கு ஒப்பாகாது மோடியின் பேச்சு. அனாயாசமானதும், பல தசாப்தங்களின் பயிற்சியாலும் வந்த கலை வாஜ்பாயினுடையது. மோடிக்கென்று தனிப்பட்ட ஈர்ப்பும் இருக்கிறது, நகர்ப்புறங்களில் வாழும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் இளைஞர்களையும் அவர் கவர்ந்திருக்கிறார்.
நாட்டின் மிக உயர்ந்த ஒரு பதவிக்கு வேட்பாளராக மோடியை அறிவித்துவிட்டதால், அரசியல் சந்தையில் பாரதிய ஜனதாவின் சரக்குக்கு முறுக்கேறி இருக்கிறது. சுமார் பத்தாண்டுகளாகப் பதவியிலிருந்து காயலான்கடை கடைச்சரக்குபோல் ஆகிவிட்ட காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் களத்தில் நின்றால், எந்தக் கட்சிக்கு அதிக இடங்கள் - வாக்குகள் கிடைக்கும் என்று அறிய கருத்துக்கணிப்பே தேவை இல்லை. சமூக பொருளாதாரத் திட்டங்களைக் கொண்டுவருவதில் காட்டிய வறட்சி, ஈடு இணையில்லாமல் எல்லா மட்டங்களிலும் அது நிகழ்த்தியுள்ள ஊழல்கள் விளைவாக காங்கிரஸ் இப்போதே கடைநிலைக்கு வந்துவிட்டது.
எல்லா அரசியல் கருத்துக்கணிப்புகளுமே மோடியும் அவருடைய கட்சியும் முன்னிலை வகிப்பதாகக் கூறுகின்றன. ஒன்றிரண்டு அவர்களுடைய தேசிய ஜனநாயகக் கூட்டணியும் முன்னிலை வகிக்கும் என்று கூறுகின்றன. பாரதிய ஜனதா தவிர சிரோமணி அகாலிதளம், சிவசேனை ஆகியவை மட்டும்தான் இந்தக் கூட்டணியில் இப்போது எஞ்சியிருக்கின்றன. இந்தக் கூட்டணி 190-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற வேண்டும் என்றால், மக்களவையில் கூட்டணிக்கு 272 இடங்களுக்கு மேல் தேவை. கருத்துக் கணிப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோருவதில் அதிசயம் என்ன?
பரிவாரங்களின் ஆவேச எதிர்பார்ப்பு
இந்தி பேசும் மாநிலங்களிலும் சில மேற்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சிக்குப் பெருத்த தொண்டர் படையும் மக்களிடையே ஆதரவும் இருக்கிறது. அந்த மாநிலங்களில் வலதுசாரி இந்துத்துவச் சக்திகளான சங்கப் பரிவாரங்கள் மக்களவைப் பொதுத்தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே பிரச்சார இயந்திரங்களை முடுக்கிவிட்டுவிட்டன. பரிவாரங்கள் ஆவேச எதிர்பார்ப்புடன் இப்போதே முண்டாதட்ட ஆரம்பித்துவிட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இவர்கள்தான் அரசியல் சட்டத்துக்கு விரோதமான கொள்கைகளையும் இந்தியாவின் அடிப்படை பண்புக்கு முரணான இந்துத்துவக் கொள்கைகளையும் அமல்படுத்தும் சக்திகளாக இருப்பார்கள்.
கணக்கு எடுபடுமா?
இந்தியா என்பது பல்வேறு மதம், மொழி, கலாச்சாரங்களைக் கொண்ட பன்மைச் சமூகம்; இந்தோனேசியா, பாகிஸ்தானுக்குப் பிறகு உலகிலேயே முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் சுமார் 17 கோடி வாழ்கிற நாடு இது. கர்நாடகம் தவிர்த்த தென்னிந்திய மாநிலங்களிலும் கிழக்கு இந்திய மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவுக்கு அமைப்பு ரீதியான பலமோ ஆதரவோ இல்லை. அங்கிருப்பவர்கள், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக சங்கப் பரிவாரங்கள் முன்னிலைப்படுத்தும் ‘வளர்ச்சி நாயகன்’ எப்படிப்பட்டவர், குஜராத்தில் அவர் கொண்டுவந்த முன்னேற்றங்கள் என்ன என்பதை அறியும் ஆவலில் இருக்கின்றனர்.
சங்கப் பரிவாரங்கள் மட்டுமல்ல; இந்திய கார்பரேட் நிறுவனங்களும் படித்தவர்களில் ஒரு பகுதியினரும்கூட அவரை ‘வளர்ச்சியின் நாயகன்’ (விகாஸ் புருஷ்) என்றே அழைக்கின்றனர்; ஆதரிக்கின்றனர். ‘வளர்ச்சியின் நாயகன்’, வருங்கால இந்தியாவின் தவிர்க்க முடியாத முன்மாதிரியாக ‘துடிப்பு மிக்க குஜராத்’தை உருவாக்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
கணிப்புகள் நம்பகமானவையா?
2014 மக்களவைப் பொதுத் தேர்தல் தொடர்பாக வரும் கருத்துக் கணிப்புகளைப் பார்க்கும்போது, இந்தக் கணிப்புகள் உண்மையானவையா, நம்பத் தகுந்தவையா என்ற சந்தேகங்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்தக் கணிப்புகளுக்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை. அப்படியிருந்தும் வாக்காளர்கள் என்ன மனநிலையில் இருக்கின்றனர், எந்தக் கட்சி அல்லது கூட்டணிக்கு அவர்கள் வாக்களிப்பார்கள் என்று கேள்விப் பட்டியல் மூலம் ‘எப்படியோ’ கண்டுபிடித்துவிடுகிறார்கள் கணிப்பாளர்கள். கட்சிகளுக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்றுகூட கணக்குபோட்டுவிடுகிறார்கள்!
16-வது மக்களவைப் பொதுத்தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கோ, பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கோ போதுமான அளவு இடங்கள் கிடைக்காது என்று சொல்கிறது ஒரு கணிப்பு. மோடி முகாமுக்கு இந்தக் கணிப்பு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
மோடி முகாமுக்கு என்ன பயம்?
மக்களவைப் பொதுத்தேர்தலுக்குப் பிறகு, மாநிலக் கட்சிகள் இணைந்து வலுவான ஓரளவுக்கு நிலைத்தன்மையுள்ள கூட்டணியைத் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்டு ஆட்சிக்கு வரும்; இடதுசாரிக் கட்சிகளும் காங்கிரஸும் அதற்கு ஆதரவு தரும் என்ற அந்தக் கணிப்பின் விளைவுகள் குறித்துதான் மோடி முகாம் கவலை அடைந்திருக்கிறது. “இந்தத் தேர்தல் களத்தில் நாம் முன்கூட்டியே உச்சக்கட்டத்துக்குச் சென்று விட்டோமோ?” என்ற சந்தேகம்கூட சில பாரதிய ஜனதா தளகர்த்தர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
குஜராத் முதல்வரால் பிரதமராக முடியாது என்ற இந்த நிலைக்குக் காரணம் அரசியல் விழிப்புணர்வு பெற்ற இந்திய வாக்காளர்கள்தான். ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளாலும் சித்தாந்தங்க ளாலும் வழிநடத்தப்படும் மோடியைப் பற்றி ஜனநாயக சக்திகளும் மதச்சார்பற்ற சக்திகளும் இடைவிடாமல் மேற்கொண்ட பிரச்சாரங்கள், போராட்டங்களின் விளைவே இந்த விழிப்புணர்வு.
‘வளர்ச்சியின் நாயகர்’ பின்கதை என்ன?
2002 பிப்ரவரி மார்ச் மாதங்களில் குஜராத்தில் நடந்த படுகொலைகள் தொடர்பாக புதுப்புது தகவல்கள், சான்றுகள் முளைத்தவண்ணம் உள்ளன. மூத்த போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் சாட்சியம் அளிக்கத் தொடங்கியுள்ளனர்.
இலங்கையில் 1983-ல் நடைபெற்ற தமிழர் இனப் படுகொலைகளுக்கு இணையானது குஜராத் படுகொலைகள் என்று கருத இடம் உண்டு. கோத்ரா ரயில் எரிப்பில் இறந்தவர்களின் உடல்கள் திட்டமிட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன; போகிற வழியில் வகுப்புக் கலவரங்கள் தூண்டப்பட்டன; செயல்படாமலிருக்குமாறு காவல் துறைக்கு மாநிலத்தின் உயர் தலைமையிலிருந்தே வாய்மொழி ஆணைகள் சென்றன என்றெல்லாம் கூறுகின்றன வந்துகொண்டிருக்கும் சான்றுகள்.
முஸ்லிம்களுக்குப் ‘பாடம் கற்பிக்க’ கொலை, பாலியல் வன்முறை, சித்திரவதை, சூறையாடலில் ஈடுபட வன்முறைக் கும்பல்களுக்கு பாதுகாப்பும் உதவிகளும் அளிக்கப்பட்டதுடன் அவர்கள் பிடிபடாமல் தப்பிக்கவும் வழி செய்யப்பட்டன என்ற தகவல்களும் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. ‘வளர்ச்சியின் நாயகன்’ என்று புகழப்படுபவர் எப்படிப்பட்ட செயல்களுக்கு உடந்தையாக இருந்தார் என்று ஜனநாயகப் பாரம்பரியத்தில் வந்த நமது பத்திரிகைகள் உண்மைகளை வெளிப்படுத்தி அவருடைய உண்மை உருவை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன.
ஆதரவாளர்கள் ஆயிரம் சொன்னாலும் மோடியும் அவருடைய அரசும் 2002-ல் என்ன செய்தார்கள் என்பதுடன் அவர் பிரிவினையாளர் என்பதையும் கோடிக் கணக்கான மக்களுக்கு அவை தொடர்ந்து நினைவூட்டிவருகின்றன.
பத்திரிகைகளும் மக்கள் இயக்கங்களும் தொடர்ந்து மேற்கொண்டுவரும் முயற்சிகளால், பத்தாண்டுகளுக்கு முன்னால் இந்தியச் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆழமான காயம் இன்னமும் ஆறவில்லை என்பதை ஜனநாயக இந்தியாவும் உலகமும் மறக்கவில்லை.
குஜராத் மக்கள்தொகையில் 9% ஆக இருக்கும் முஸ்லிம்கள் இன்னமும் சேரிகள் போன்ற சுகாதாரக் கேடான பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்களும் வந்துகொண்டிருக்கின்றன.
2002 சம்பவங்களுக்கு யார் முழுப் பொறுப்பு என்பதை அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள் தெரிந்துவைத்துள்ளனர். கடந்த 25ஆண்டுகளில் நடந்த மிக மோசமான வகுப்புக் கலவரத்தில் முதல்வரும் அவருடைய அரசும் ஆற்றிய பங்கும் அதற்குப் பிறகு நீதி கிடைத்துவிடாமல் தடுக்க அவர்கள் எடுத்த நடவடிக்கைகளும், உச்ச நீதிமன்றம் தலையிட்டு அரசியல் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட உறுதியான நடவடிக்கை எடுத்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களையும் அவர்கள் அறிவார்கள்.
காரில் அடிபட்ட நாய்க்குட்டிகளா முஸ்லிம்கள்?
கலவரங்கள் குறித்து ‘வளர்ச்சியின் நாயகன்’ கவலைப்படவில்லை என்பதும் கலவரங்களைத் தடுக்கத் தவறியதற்காக ‘வளர்ச்சியின் நாயகன்’ இன்னமும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரவில்லை என்பதையும் அரசியல் விழிப்புணர்வுள்ளவர்கள் அறிவார்கள். “காரை ஒருவர் ஓட்டிச்செல்லும்போது பாதையில் ஒரு நாய்க்குட்டி காரில் சிக்கி அடிபட்டால், அந்த காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருப்பவருக்கு மனவருத்தம் இருக்காதா என்ன? - மன வருத்தம் இருக்கத்தான் இருக்கும்” என்று தன் நிலைகுறித்து விளக்கம் அளித்தார் ‘வளர்ச்சியின் நாயகன்’.
சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தார்மிகரீதியாகவும் 2002 வகுப்புக் கலவரங்கள் எதிர்காலத்திலும் எளிதில் மறைந்துவிடாது. மோடி பிரதமரானால் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இந்தப் பிரச்சினை முற்றி மேலும் சிக்கலாகவே மாறும். காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், சில மாநிலக் கட்சிகள் மட்டும் மோடியை எதிர்க்கவில்லை; பாரதிய ஜனதாவின் தோழமைக் கட்சியாகவே பிகார் ஆட்சியில் இருந்த நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் இந்த ஒரு காரணத்துக்காகவே கூட்டணியை விட்டு விலகியது. மோடி பிரதமராவதை ஏற்கவே முடியாது என்றது.
“மோடி என்ற தனிநபர் மீது வெறுப்போ கோபமோ இல்லை; அவர் அமல்படுத்த விரும்பும் கொள்கைகள், அவருடைய கண்ணோட்டம் ஆகியவற்றை ஏற்க முடியாமல்தான் எதிர்க்கிறோம்” என்றுதான் எதிர்ப்பவர்கள் எல்லோரும் சொல்கிறார்கள்.
இந்தியாவில் அவருக்கு எதிரான அரசியல் எதிர்ப்புக்கு மேலும் வலுசேர்க்கிறது சர்வதேச அரங்கில் அவருக்கிருக்கும் மற்றவர் பொறாமைப்பட முடியாத ‘வேண்டப்படாதவர்’ அந்தஸ்து.
பன்னாட்டு நிறுவனங்கள் தன்னுடைய மாநிலத்தில் முதலீடு செய்ய சிவப்புக்கம்பளம் விரிக்கும் முதலமைச்சர் என்ற சிறப்பு இருந்தபோதிலும் அவரைத் தங்கள் நாட்டுக்கு வர அனுமதிக்க விசா தர முடியாது என்று அமெரிக்கா 2005-ல் மறுத்துவிட்டது. மதச் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் அல்லது அதற்குக் காரணமானவர்கள் என்று கருதப்படுவோருக்கு விசா தருவதில்லை என்ற சட்டப்பிரிவின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1984-ம் 2002-ம்
1984-ல் தில்லியில் 8,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள்; 2002-ல் குஜராத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். இவ்விரு சம்பவங்களிலும் பத்திரிகைகளும் போலி மதச்சார்பின்மைவாத அரசியல்வாதிகளும் இரட்டை வேடம் போடுவதாக சங்கப் பரிவார பத்திரிகைத் தொடர்பாளர்கள் தொடர்ந்து பேசிவருகின்றனர். ஓர் இனப் படுகொலைக்கு இன்னோர் இனப் படுகொலை சமமாகிவிடும் என்று சொல்வதே குமட்டுகிறது. ஒரு வாதத்துக்காக இதை ஏற்றாலும்கூட சீக்கியர்கள் படுகொலைக்கு பிரதமர் மன்மோகன் சிங் அதற்கு அவர் பொறுப்பில்லை என்றாலும்- நாடாளுமன்றத்தில் 2005 ஆகஸ்ட் 12-ல் மன்னிப்பு கேட்டார் (மன்னிப்புதான் கேட்டார்; கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு முழுத் தண்டனை பெற்றுத்தரவில்லை, சமரச நடவடிக்கைகளும் போதாது என்பதெல்லாம் உண்மைதான். இருந்தாலும் அது தார்மிக ரீதியான ஒரு செயல், அரசியல் ரீதியான ஒரு சமிக்ஞை). ஆனால், மோடி என்ன செய்தார்? 2002 கலவரம் தொடர்பாக அவர் இதுவரை நேரடியாக நாட்டு மக்களிடம் வருத்தமும் தெரிவிக்கவில்லை, கலவரத்தைத் தடுக்கத் தவறியதற்காக மன்னிப்பும் கோரவில்லை.
இதில்தான் அவருடைய சித்தாந்தரீதியான அரசியல் உத்தி அடங்கி இருக்கிறது. சங்கப் பரிவாரங்களின் வகுப்புவாதச் சித்தாந்தத்துக்கு இரைபோடும் உத்தி. பத்தாண்டுகளாகப் பரிவாரங்களுக்குள் ஏற்பட்ட சித்தாந்தக் குழப்பம், அரசியல் குழப்பம் ஆகியவற்றுக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் தீர்க்கமான முடிவுக்கு வந்திருக்கிறது. நாட்டை ஆளவும் மக்களை ஒன்றுதிரட்டவும் இந்துத்துவக் கொள்கைகளே இனி மையமாக இருக்க வேண்டும் என்பதே அது.
கண்ணை நம்பாதீர்
இந்தியப் பெருநிறுவனங்களின் கண்ணை ‘வளர்ச்சி நாயகன்’ கோஷம் மறைத்துவிட்டது. காங்கிரஸின் கொள்கைகளால் வெறுத்துப்போன வாக்காளர்களுக்கும் இந்த கோஷம் கவர்ச்சிகரமாக இருக்கிறது. ஆனால், சங்கப் பரிவாரங்களின் கொள்கைகள் என்னவோ விட்டுத்தர முடியாத இந்துத்துவா, நாட்டு மக்களைப் பிளவாடும் செயல்திட்டங்கள், அடையாளங்கள், பிரச்சாரங்கள் ராம ஜன்மபூமியும் அதில் ஒன்று ஆகியவை இணைந்த அடிப்படைவாதம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
எங்கே, மக்கள் எவரும் எவரை விடவும் தாழ்ந்தவர் இல்லை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியமான அடிப்படையாக இருப்பதுடன், கொள்கை அளவில் மட்டும் அல்லாமல், நடைமுறையிலும் அது கடைப் பிடிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்படுகிறதோ, அந்த மதச்சார்பற்ற, ஜனநாயக நாடான இந்தியாவுக்கு, மோடி பிரதமராவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும் என்பதை 2002-லிருந்து இன்றுவரை ஆறாமலிருக்கும் வடு தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.

நன்றி:  

Sunday 10 November 2013

குஜராத் 'உண்மை' - சராசரி ஆயுள் காலம் !

'Truth' about Life Expectancy in Gujarat :





















Life Expectancy / சராசரி ஆயுள் காலம் :
UK  - 81
Canada  - 81
USA  - 79
UAE  - 77
Saudi  - 75
Singapore -82

1) Kerala 74.2
     ....
5) Tamil Nadu 68.9
   .
   ..
   ....
   .....
   ......
8) Gujarat 66.8



Evidence / ஆதாரம் :
http://data.worldbank.org/indicator/SP.DYN.LE00.IN
http://data.gov.in/dataset/selected-indicators-human-development-major-states
http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_life_expectancy
http://www.viduthalai.in/headline/68941-2013-10-16-10-42-23.html

குஜராத் 'உண்மை' - வறுமைக் கோடு !

'Truth' about Poverty Line in Gujarat:




















Poverty Ratio / வறுமை விகிதம் :
USA - N/A
UK - N/A
Canada - N/A
UAE - N/A

1) Andaman & Nicobar - 0.4 %
2) Puducherry - 1.2 %
3) Lakshwadeep - 6.8 %
    .....
    ........
6) Jammu & Kashmir - 9.4%
7) Himachal Pradesh - 9.5%
8) Kerala - 12%
11) Punjab - 15.9%
13) TamilNadu - 17.1%
      .
      ...
      .....
      .......
      .........
      ............
20) Gujarat - 23% - 136 Lakhs - 1.36 Crores


குஜராத் 'உண்மை' - கல்வி நிலை !

'Truth' about Education in Gujarat:

























Literacy Rate / எழுத்தறிவு விகிதம்:
United States - 99%
United Kingdom - 99%
Canada - 99%

1) Kerala - 93.91%
3) Mizoram - 91.58%
4) Tripura - 
    ....
    ........
    ............
    ...............
    ...................
18) Gujarat - 79.31%



Evidence / ஆதாரம் :
http://censusindia.gov.in/2011census/censusinfodashboard/index.html

http://populationcommission.nic.in/content/933_1_LiteracyRate.aspx

குஜராத் 'உண்மை' - குழந்தைகள் இறப்பு விகிதம் !

'Truth' about Gujarat - Infant Mortality Rate























Infant Mortality Rate / குழந்தைகள் இறப்பு விகிதம் :
Singapore - 2
UK - 4
USA - 6
Qatar - 6
UAE - 7
Kuwait - 10

Kerala - 12

Tamil Nadu - 22
Gujarat - 41


Evidence / ஆதாரம் : 
http://data.worldbank.org/indicator/SP.DYN.IMRT.IN

http://data.gov.in/dataset/state-wise-infant-mortality-rate


http://www.viduthalai.in/headline/68941-2013-10-16-10-42-23.html 


குஜராத் 'உண்மை' - சராசரி தனி நபர் வருமானம் :

'Truth' about Gujarat Per Capita Income :



Per Capita Income / சராசரி தனி நபர் வருமானம் :
Canada - 52,219 $ = 31.9 Lakhs Rs.
Singapore - 51,709 $ = 31.5 Lakhs Rs.
USA - 49,965 $ = 30.5 Lakhs Rs.
UK - 38,514 $ = 23.5 Lakhs Rs.
UAE - 39,058 $ = 23.8 Lakhs Rs.
Saudi - 25,136 $ = 15.2 Lakhs Rs.

1) Delhi - 1.73 Lakh ( Now : 2.01 Lakhs  Rupees)
2) Goa - 1.67 Lakh
3) Chandigarh - 1.42 Lakh
4) Sikkim - 1.24 Lakh
5) Haryana - 1.08 Lakh
6) Puducherry - 1.02 Lakh
7) Maharashtra - 95,339 Rs.
8) Gujarat - 89,668 Rs.
9) TamilNadu - 88,697 Rs. ( Now : 98,550 Rupees )


Evidence / ஆதாரம் :

குஜராத் 'உண்மை' - மொத்த உள்நாட்டு உற்பத்தி !

'Truth' about Gujarat Gross Domestic Product ( GDP ) : 

Gross Domestic Product ( GDP ) / மொத்த உள்நாட்டு உற்பத்தி :
Saudi Arabia -  5.1 %
UAE           -  4.4 %
India           -  3.2 %
USA             -  2.2 %
Canada         -  1.7 %
Singapore     -  1.3 %
UK             -  0.3 %

Gross State Domestic Product ( GDP ) / மொத்த மாநில உற்பத்தி :
1) Bihar - 13.26 %
2) Madhya Pradesh - 11.81 %
3) Delhi - 11.34%
4) Arunachal Pradesh - 10.84%
5) Mizoram - 10.09%
6) Goa - 9.39%
7) Jharkhand - 8.92%
8) Gujarat - 8.53%


Evidence / ஆதாரம் :
http://data.worldbank.org/indicator/NY.GDP.MKTP.KD.ZG/countries ( Year : 2012 )

http://planningcommission.nic.in/data/datatable/0205/databook_comp0205.pdf ( Year : 2011-2012 , Page No : 133 )

http://pbplanning.gov.in/pdf/Statewise%20GSDP%20PCI%20and%20G.R.pdf

Friday 8 November 2013

90 சதவீத இந்தியர்கள் மோடியை எதிர்க்கின்றனர்: பாலிவுட் பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர்

 
மும்பை: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியை 90 சதவீத இந்தியர்கள் எதிர்ப்பதாக பிரபல இந்தி பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர் தெரிவித்துள்ளார். 
 
பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடி குறித்து பிரபல இந்தி பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
 
 இது குறித்த அவரது ட்வீட், 
 
மோடியை எதிர்ப்பது தேச விரோத செயல் என்று சில முட்டாள்கள் தெரிவித்து வருகின்றனர். அப்படி என்றால் 90 சதவீத இந்தியர்கள் தேச விரோதிகள் என்று அவர்கள் கூற வருகிறார்களா? என்று கேட்டுள்ளார். முன்னதாக அவர் கடந்த மாதம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, டீசன்ட் இல்லாமல், தரக்குறைவான மெசேஜ்களை மோடி பிரியர்கள் எனக்கு அனுப்புகிறார்கள். அதில் இருந்தே அவரின் ஆதரவாளர்களின் தரம் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார். மோடி ஒரு நல்ல பிரதமராக இருக்க முடியாது என்று ஜாவித் அக்தர் கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday 7 November 2013

மோடி- ஒரு தமாஷ்!


நரேந்திர தாமோதர தாஸ் மோடி இந்திய நாட்டை ரட்சிக்க வந்த தேவதூதன், பாரத நாட் டைப் பாவிக்க வந்த மகா விஷ்ணுவின் அடுத்த கட்ட அவதாரம்போல இந்த நாட்டு ஊடகங்கள் காற்றடித்து வானில் பறக்க விடுகின்றனவே- அந்தச் சூட்சமத்தின் பின்ப(பு)லம் என்ன தெரி யுமா?

இந்தியாவில் ஊடகங் களில் பிரம்மாவின் நெற் றியிலே பிறந்த ஜாதியி னர் 71 சதவிகிதம். புதுடில்லியில் 300 இந்தி, ஆங்கில ஏடுகளில் மூத்த பத்திரிகையாளர்களில் தாழ்த்தப்பட்டவர் ஒருவ ரும் கிடையாது. எல்லாம் அவாள் மயமே!

மோடிபோல ஒரு தாழ்த்தப்பட்டவரோ பிற்படுத்தப்பட்டவரோ பேசி இருந்தால் எப்படி எப்படி யெல்லாம் கேலி பேசி, கிண்டல் அடித்து கூவத் தில் தூக்கி எறிந்திருப் பார்கள்.

வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் வ.உ.சி. தலைமையில் நடந்தது என்று சென்னையில் மோடி பேசவில்லையா? (ராஜாஜி தலைமையில் நடந்தது என்பதுதான் சரி!).

பாட்னாவில் என்ன பேசினார்? குப்தர் வம்ச பெருமையை நாம் நினைக் கும்போது சந்திரகுப் தரின் ராஜநீதி நினை விற்கு வருகிறது என் றாரே பார்க்கலாம். (சந் திரகுப்தர் மவுரிய வம்சம் என்பதே சரி!).

அடுத்த தமாஷ், அலக்சாண்டர் படை, உலகையே வென்றது. ஆனால், அந்தப் படை யைத் தோற்கடித்தவர்கள் பீகாரிகள் என்று பீகாரின் தலைநகரான பாட்னா வில் நீட்டி முழங்கினார்.

(உண்மை என்ன தெரி யுமா? அலக்சாண்டர் கங்கையைக் கடந்து இக்கரைக்கு வரவில்லை. தட்சசீலா என்று மோடி குறிப்பிடுவது பீகாரில் இல்லை, பாகிஸ்தானில் உள்ளது.

அலக்சாண்டர் சட்லஜ் நதிவரை மட்டுமே வந்தார் என்பது வரலாறு).

எப்படிப்பட்ட கோமா ளிக் கூத்துகள் இவை! மற்றவர்கள் இப்படியெல் லாம் உளறியிருந்தால், நம் ஊர் சோ ராமசாமி அய் யர்கள் எப்படியெல்லாம் நக்கல் அடித்திருப்பார் கள்!

- மயிலாடன்

Wednesday 6 November 2013

முரட்டு இந்துத்துவாவாதியான மோடி செய்வாரா?

காதலியிடம் காதலன்:  உன்னைப் போன்ற அழ கான பெண்ணை முத்தமிட நான் 5000 ரூபாய் கூட கொடுப்பேன்.

காதலி: அய்யோ, நேற்று இரவு மகேஷ் எனக்கு முத்தம் கொடுத்தான். ஆனால் பணம் ஏதும் தரவில்லையே!

கணவனிடம் மனைவி: நேற்றிரவு ஷீலாவுடன் சந் தோஷமாக இருக்க எவ் வளவு பணம் கொடுத்தாய்?

கணவன்: நூறு ரூபாய் கொடுத்தேன்.

மனைவி: அவமானம்! அவளது காதலன் என்னி டம் வரும்போது, அய்ம்பது ரூபாய் மட்டுமே கொடுத் தான்.

சென்சஸ்அதிகாரி ஒருவர் ஓர் வீட்டின் பெண் மணியிடம்  கேட்கிறார்: உங்கள் கணவர் 9 ஆண்டுகளுக்கு முன் இறந்து போய்விட்ட போது, உங்களுக்கு எப்படி  5 வயதி லும் 3 வயதிலும் மகன்கள் உள்ளனர்?

நகைச்சுவைத் துணுக்குகள் என்ற கண்ணோட் டத்தில் பார்த்தாலும்கூட மேற்கண்டவை ரசிக்கத் தக்கவையல்ல - வெறுக்கத்தக்கவை. நகைச்சுவை என்ற மிக உயர்ந்த அம்சத்தைக் கொச்சைப்படுத் துவதாகும்.

எந்தப் பெண்ணும் இந்தத் தரங்கெட்ட வகையில் பேசவும் மாட்டார்; நடந்து கொள்ளவும் மாட்டார்.

இந்தநிலையில் பள்ளிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க எப்படித் தான் மனம் வந்ததோ?

சோ கூட்டம் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றதே - கொஞ்சுகின்றதே - அடுத்த பிரதமர் இவரை விட்டால் வேறு ஆள் யார்? என்று காற்றடித்து ஊதிப் பெருக்க வைக்கிறதே பார்ப்பன ஊடகங்கள் - அந்த மகத்தான குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரதாஸ் தாமோதரதாஸ் மோடியின் ஆட்சியில் தான் பள்ளிப் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.

இந்துத்துவாவாதிகளுக்கு இவைபற்றியெல்லாம் கவலை ஏது? இந்துத்துவா என்கிற போது அதன் மூலம் இந்து என்பதிலிருந்து தானே கிளைக்கிறது. அந்த இந்துவின் யோக்கியதைபற்றி அறிந்தவர் களுக்கு ஒரு பிஜேபி ஆட்சியில் இவ்வளவு ஆபாச மான  பாடத் திட்டங்கள் அமைவதில் ஆச்சரியம் இருக்கவே முடியாது.

அறிஞர் அண்ணா அவர்கள் முதல்  அமைச்சராக இருந்த நிலையில் சட்டப் பேரவையிலேயே சொன்னதைக் கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம். நினைத்தபின் கொஞ்சம் அசைப் போட்டும் பார்க்க வேண்டும். அப்படி சிந்திக்கும் பொழுது ஆசா பாசத்துக்கு   ஆட்படக் கூடாது; பக்தி என்னும் போதைக் கண்ணாடியையும் அணியக் கூடாது. அப்பொழுதுதான் எது ஒழுக்கம், எது ஒழுக்கக் கேடு என்பதும் புத்திக்கும் படும். இதோ அண்ணா பேசுகிறார். கண்ணன் தின்னும் பண்டம் எது? கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய் என்பதைக் கற்றுத் தர இப்படிப் போட்டிருக்கும். கைக்கெட்டாத பொருளை எவருக்கும் தெரியாமல் எப்படி எடுப்பது என்பதைச் சொல்லிக் கொடுக்கும் வகையில் இப்படம் இருக்கிறது. இப்படி நான் சொல்வதால் புராணம் கூடாது என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்தக் கருத்தை இங்கு சொல்லவில்லை. மாலை 6 மணிக்கு மேல் பொதுக் கூட்டத்தில் வைத்துக் கொள்கிறேன்.

பள்ளிக்கூடத்துக் கட்டடத்துக்குப் பக்கத்தில் உள்ள பிறர் வீட்டுத் தோட்டத்தில் காய்த்துத் தொங்குகிற மாங்கனியைப்பறிக்க சோனிப் பையன் ஒருவனைக் குனிய வைத்து மாங்காய் பறிக்கலாம் என்ற வழியை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதாக ஆகிறது. இந்தக் கருத்தை பகுத்தறிவு என்று எடுத்துக் கொண்டாலும் சரி, சுயமரியாதைக் கருத்து என்று எடுத்துக் கொண்டாலும் சரி, பயப்படாமல் உலக அறிவு என்று திருத்தி அமைத்தால் கல்வி அறிவும், தரமும் பெருகும்.

முதலமைச்சர் அண்ணா கல்வி மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளிக்கையில் 23.3.1967இல் பேசிய பேச்சின் ஒருபகுதி இது.

பகுத்தறிவுக் கண்ணோட்டம் முக்கியம் - பகுத்தறிவு என்பது வெறும் தகவலைச் சேகரிப்பது அல்ல - மனித நேயத்தையும், ஒழுக்கத்தையும் அளிப்பதாகும். அதனைத்தான் தந்தை பெரியார் போதித்தார்.

குஜராத்தில் பிஞ்சு உள்ளத்தில் ஆபாச நச்சு விதைகளைத் தூவுவதற்குக் காரணமானவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முரட்டு இந்துத்துவாவாதியான மோடி செய்வாரா? எங்கே பார்ப்போம்!

Tuesday 5 November 2013

மோடியின் முகவரி

குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடி பார்ப்பனர்கள் கூட்டிய மாநாட்டில் பங்கு கொண்டு பின் வருமாறு பேசியுள்ளார்.

இந்தியக் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க பார்ப்பன சமூகம் உதவியது. நமது கலாச்சாரம் இன்னமும் அழியாமல் இருக்கிறதென்றால், அதற்குக் காரணம் பார்ப்பனர்கள்தான். பல நூற்றாண்டு காலமாக அவர்கள் ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அறிவைத் தொடர்ந்து அளித்து வந்துள்ளனர். இது சமூகத்துக்கு அவர்கள் செய்த மாபெரும் சேவையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியில் உள்ள பார்ப்பனர் அல்லாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான் இந்த மோடி. இவர் படித்தவராம்; விவரங்கள் அறிந்தவராம்; சிறந்த நிருவாகியாம் - ஊடகங்கள் அப்படித்தான் ஊதிப் பெருகச் செய்து தகவல்களைக் உலவ விடுகின்றன.

இவர் படிப்பின் தகுதி - சிந்தனை வளம் எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்குப் பார்ப்பனர் சங்க நிகழ்ச்சிக்குச் சென்று அவர் தெரிவித்துள்ள இந்தக் கருத்துக்களே போதுமானவை.

பார்ப்பனர்களிடத்தில் பக்தியோடு யார் கொழுத்த அடிமையாக இருப்பாரோ, அவரைத்தான் அவர்கள் தூக்கிப் பிடிப்பார்கள் என்பதை நாடு அறியும்.

(1) செல்வி உமா பாரதியும், உத்திரப் பிரதேச கல்யாண் சிங்கும் பார்ப்பனர் அல்லாதவர்களாக  பி.ஜே.பி.யில் இருந்ததால் என்ன பாடுபடுத்தப் பட்டார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பங்காரு லட்சமணரின் கதி என்ன?

உமா பாரதி மிக வெளிப்படையாகச் சொன்னாரே பி.ஜே.பி. என்பது பிராமின் பார்ட்டி (பார்ப்பனர் கட்சி) என்று அடித்துக் கூறவில்லையா?
மத்தியப் பிரதேசத்தில் முதல் அமைச்சராக அவர் ஏன் தொடர முடியவில்லை?

ஒரு வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டார் என்பதற் காக அறிவு நாணயமான முறையில் அரசியல் பண் பாட்டோடு முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

அந்த வழக்கில் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் இறுதியாகத் தீர்ப்பு அளித்துவிட்ட பிறகு, மரியாதை யாக அறிவு நாணயமாக முதல் அமைச்சர் பதவியை அவருக்கு அளித்திருக்க வேண்டுமா, வேண்டாமா?

பாபர் மசூதி இடிப்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எல்லாம் மத்திய அமைச்சர்களாக இருந்தார்களே!

ஏனிந்த இரட்டை அளவுகோல் என்பதை நரேந்திர மோடி சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

(2) இந்தியக் கலாச்சாரத்தைப் பார்ப்பனர்கள் கட்டிக் காத்தார்களாமே! எந்தக் கலாச்சாரத்தைக் காப்பாற்றிக் கொடுத்தார்கள்?

பிறப்பின் அடிப்படையிலேயே பேதம் - உயர் ஜாதி - கீழ் ஜாதி பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன் - பிரம்மாவின் காலில் பிறந்தவன் - என்கிற மனித உரிமைக்கும் நேயத்துக்கும், பண்பாட்டுக்கும், அறிவுக்கும் பொருத்தமில்லாத அந்தக் கயிறு திரிப்புகள்தானே இந்தப் பார்ப்பனப் பண்பாடு.

இது ஓர் அநாகரிக அமைப்பு முறையல்லவா? சூத்திரர்களும், பெண்களும் பாவயோனியில் பிறந்த வர்கள் என்று கூறும் கீதைதானே பார்ப்பனர்கள் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் பொக்கிஷம்?

இவற்றை ஏற்றுக் கொண்டால் இந்த நரேந்திர மோடியார்? பிரம்மாவின் காலில் பிறந்த நாலாவது ஜாதிதானே. சூத்திரர்தானே - வேசி மகன்தானே!
பதவி கிடைத்தால் போதுமா? மான உணர்ச்சி வேண்டாமா? பார்ப்பனர்கள் அறிவாளிகளா? அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மிக அழகாகச் சொன்னாரே - பார்ப்பனர்கள் படித்தவர்கள்தானே தவிர அறிவாளிகள் அல்லர் என்று ஆய்வு பூர்வமாகச் சொன்னாரே!

குழந்தைப் பேற்றுக்காக; உடல் பூராவும் நெய்யைத் தடவிக் கொண்டு யாருடனும் புணரலாம் என்பது தானே பார்ப்பனர்கள் கற்பித்த இந்துத்துவப் பண்பாட்டு முறை! சுத்த காட்டு விலங்காண்டிகள் ஆயிற்றே!

பதவித் துண்டு கிடைத்துவிட்டால் எவ்வளவு அடிமைத் தனத்துக்கும் அனுமார்கள் ஆட்படுவார்கள் என்பதற்கு மோடி ஒருவர் போதுமே! வெட்கம்! மகாமகாவெட்கம்!!

குஜராத் முதல் மாநிலமா?

தமிழ்நாட்டில் பி.ஜே.பி.க்கு, சங்பரிவார்களுக்கு அடிப்படை இல்லை என்பது தெரிந்து விட்டது. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பி.ஜே.பி. பெரும்பான்மையான இடங்களில் கட்டிய பணத்தைக் கூட (Deposit) திருப்பப் பெற முடியாத நிலை.

ஒவ்வொரு தேர்தலிலும்  திராவிட இயக்கக் கட்சிகளின் தோள்களில் ஓசியில் ஏறிக் கொண்டு பதவிப் பழம் ருசித்துக் கொண்டிருந்த இந்தக் கட்சியின் வண்டவாளம் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெட்கக் கேடான முறையில் அம்பலமாகி விட்டது.

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மக்கள் கொடுத்த மரண அடியின் காரணமாகத்தான் மத்திய ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை; இதனை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் எல்.கே. அத்வானி.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பி.ஜே.பி.க்கு எப்படியும் ஓர் அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற வெறியோடு பூணூலை முறுக்கிக் கொண்டு படாத பாடுபடுகிறார் திருவாளர் சோ. ராமசாமி.

நரேந்திர மோடியை தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதும், செல்வி ஜெயலலிதாவைச் சந்திக்க வைப்பதுமான அரசியல் புரோக்கர் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டு திரிகிறார்.

நரேந்திரமோடியை இந்திரன் சந்திரன் என்று புகழ் மாலைசூட்டி அர்ச்சனை செய்கிறார். இவ்வளவுக்கும் மோடி ஒன்றும் பார்ப்பனர் அல்லர்.

இருந்தும் ஏன் இந்த மோடிக்காக, மோடி மஸ்தான் வேலையில் இறங்குகிறது இந்தப் பூணூல்.

மோடி அளவுக்கு சிறுபான்மை மக்களை வேட்டையாடுபவர்கள் இந்துத்துவ வெறியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில்  எங்குத் தேடினாலும் கிடைக்க மாட்டார்களே! கோவில்களில் ஆட்டுக் கிடாவைப் பலியிடுவது போல, கோழிகளின் கழுத்தைத் திருகிப் போடுவதைப்போல அல்லவா இஸ்லாமிய மக்களை ஆயிரக்கணக்கில் குரூரமான முறையில் கொன்று குவித்து அவர்களின் ரத்த ஆற்றில் நீந்தித் திளைத்தார்.

இப்படி ஓர் ஆள் கிடைத்தால்  பார்ப்பனர்களுக்கு மிகப் பெரும் வாய்ப்புதானே! அதனால்தான் மோடிக்கு லாலி பாடிக் கொண்டிருக்கிறார். துக்ளக் இதழில் குஜராத் மாநிலத்தில் பாலாறும், தேனாறும் பாய்கிறது என்று தொடர் கட்டுரைகளை எழுதிடச் செய்துள்ளார்.

குஜராத் போல நல்லாட்சி இந்தியாவுக்குக் கிடைக்க வேண்டுமா? அப்படியானால் நரேந்திரமோடியை இந்தியாவின் பிரதமராக்குங்கள் என்ற முழக்கத்தைக் கொடுத்து வருகிறார்.

அப்படிப் பார்த்தாலும் அவர் கூறுவதாவது உண்மையா என்றால் அதுதான் இல்லை; எல்லாம் வெத்து  வேட்டு இட்டுக் கட்டிச் சொல்லப்படும் தகவல்கள்.

மனிதவள அடிப்படையில் இந்தியாவில் குஜராத்துக்கு உரிய இடம் - 20. வருமான அடிப்படையில் ஆறாவது இடம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4ஆவது இடம், தனிநபர் வருமான அடிப்படையில் 9ஆவது இடத்திலும், பாலின விகித அடிப்படையில் 22 ஆவது இடத்திலும், கல்வியில் 14ஆவது இடத்திலும், மின் உபயோகத்தில் 10ஆம் இடத்திலும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுச் செய்திகளை அறிவோர் விகித அடிப்படையில் ஆண்கள் 12ஆம் இடத்திலும்,  பெண்கள் 15ஆம் இடத்திலும், சரியான உடல் எடை விகிதத்தில் ஆண்கள் 11ஆம் இடத்திலும், பெண்கள் 12ஆம் இடத்திலும் உள்ளனர்.

தொலைக்காட்சியுடையோர் கணக்கிட்டால் 11ஆம் இடத்திலும், மொத்த சாலைகளின் நீளத்தில் 10ஆம் இடத்திலும், சாலைகளில் அடர்த்தி  விசயத்தில் 21ஆவது இடத்திலும், மின் நிலைய நிர்மாண இடத்தில் 2ஆவது இடத்திலும், மருத்துவமனையில் பிரசவம் நடக்கும் இடத்தில், 8ஆவது இடத்திலும் சராசரி வாழ்நாளில் ஆயுள் அளவில் 10ஆம் இடத்திலும் இருக்கிறது.

ஏராளமான சலுகைகளை அளித்து அந்நிய முதலீட்டைக் கவருவதில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் இந்த மாநிலம் உற்பத்தியில் நான்காம்  இடத்தில் இருப்பது ஏன்?

இந்த யோக்கியதையில் உள்ள ஒரு மாநிலம்தான், இந்தியாவில் நல்லாட்சி நடக்கும் மாநிலமாம், மக்கள் வளமாக வாழும் மாநிலமாம்.

சோ கூட்டம் புளுகுகிறது -  மயக்க மிட்டாய்க் கொடுக்கிறது - பொது மக்களே ஏமாறதீர்! கவனம்! கவனம்!!