Tuesday, 5 November 2013

குல்லா

குல்லா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு என்ற பாடல்தான் நரேந்திர மோடியை நினைத்தால் நினைவுக்கு வருகிறது.

தன்னைப்பற்றிப் புதிது புதிதாக அவிழ்த்து விட்டு, நாட்டு மக்கள் மத்தியில் தன்னை நிலை நிறுத்தும், ஜிகினா வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

காந்தியார் பிறந்த நாளில் (அக்டோபர் 2இல்) காந்தி குல்லா 25 சதவீதத் தள்ளுபடியில் விற்பனை  என்று விளம் பரம் செய்யப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஷாகாவின் போது அணி யும் குல்லாவைத்தான் காந்திக் குல்லாய் என்ற சொல்லி தள்ளுபடி விலை யில் விற்பனை செய்துள் ளனர். மோடி குல்லா என்று பெயர் சூட்டியுள் ளனர் - எத்தகு பித்த லாட்டம் இது!

காந்தியாருக்கும், இந்த மோடிக் கும்பலுக் கும் என்ன ஒட்டு உறவு?  காந்தியைக் கொன்ற கோட்சேயின் உறவுக்கா ரர்கள் என்கிற முறையில் ஓர் உறவு உண்டு என்று வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம்.

மோடி குர்தா என்று ஓர் சட்டையை விளம்பரப் படுத்தி வருகின்றனர். எப்படி உடை உடுத்துவது, எந்த வண்ணத்தில் உடுத் துவது என்பது வரை திட்டமிட்டு இளைஞர்கள் மத்தியில் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்துவதே உள் நோக்கம். பிபி சவுகான், ஜிதுபாய் சவுகான் சகோ தரர்கள் இவருக்கு உடை தைத்துக் கொடுப்பவர் களாம்.

மோடி அணியும் உடையை விளம்பரப் படுத்த ஆரம்பித்து விட்டனர். மோடி குர்தா என்று அதற்குப் பெயர். பருத்தி குர்தா ரூ.1895 (பேட்டா விலை மாதிரி) லினன் குர்தா ரூ.1900/-
முஸ்லீம்கள் அணி வது போன்ற தோற்றம் - அந்த வகையிலும் அம் மக்களைக் கவரலாம் அல்லவா! (மோடி கலந்து கொண்ட ஒரு கூட்டத் தில் போரா பிரிவைச் சேர்ந்த ஒருவர் அன்பால் கொடுத்த குல்லாவை அணிய மறுத்தவரும் இவர் தான் என்பதை மறக்க வேண்டாம்!) நமோ தேநீர் கடைகள் (நரேந்திர மோடிக்குத்தான் நமோ என்று குறுக்கம்) நமோ இனிப்புக் கடைகளாம்.

இப்படி எல்லாம் விளம்பரம் செய்வதற் கென்றே  ஒரு பன்னாட்டு விளம்பர நிறுவனத்தோடு (Apcoworld in India) ஒப் பந்தம செய்துள்ளனர். அதற்காகப் பல்லாயிரம் கோடி ரூபாய் வாரி இறைக்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் தேடுதல் வரிசையில், ஒபாமாவைத் தாண்டி விட்டார் என்று அவிழ்த்து விடுவதெல் லாம் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

கெட்டிக்காரன் புளுகே எட்டு நாளைக் குத்தான்; மோடிப் புளுகு எத்தனை நாளைக்கு?       

 - மயிலாடன்

மோடி பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா?


 
ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக அய்.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர். குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன் காவல்துறையும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை விலகல் செய்துவிட்டார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.


பயங்கரமும் படுகொலையும் தாண் டவமாடிய குஜராத்திலிருந்து வருகி றேன். வெறுப்பாலும் அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன். என் இதயம் நோயுற்று ஆன்மா நைந்து விட் டது. குற்றவுணர்வையும் அவமானத் தையும் சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள் வலிக்கின்றன.

அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக் கூரைகளின் கீழே ஒண்டிக் கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள். அவர்களது முகத்தில் ததும்பும் துயரம் இப்படியொரு துக் கத்தை நான் இதுவரை கண்டதில்லை. வறண்டு போன கண்கள்; நிவாரணப் பொருட்களை இறுகப் பற்றிய அவர் களது கைகள்; இனி இந்த உலகத்தில் இது மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும் உடைமை.

அச்சம் படர்ந்த தணிந்த குரலில் சிலர் பேசிக் கொள்கிறார்கள்; சமையல் வேலை, பிள்ளைகளுக்குப்பால், காயம் பட்டவர்களுக்கு மருந்து என்று ஆக வேண்டிய வேலைகளைக் கவனிக் கிறார்கள் மற்றவர்கள்.

ஆனால் ஏதாவது ஒரு முகாமில் நீங்கள் உட்கார்ந்தால் உடனே அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள். புரையோடிய புண்ணிலிருந்து பீய்ச்சி யடிக்கும் சீழ் போல, சொற்கள் நம் முகத்தில் பட்டுத் தெறிக்கின்றன. அந்தக் கோரங்களை எழுதவே என் பேனா தடுமாறுகிறது..

இருப்பினும், கண்டவை கேட்டவை களில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.

ஓர் எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக் கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெ டுத்து, அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றி ருக்கிறார்கள். இதற்கென்ன சொல் கிறீர்கள்?

உயர் அழுத்த மின்கம்பியால்...

19 பேர் கொண்ட ஒரு குடும்பம். அந்த வீட்டிற்குள் தண்ணீரைப் பீய்ச்சி யடித்து, பிறகு உயர் அழுத்த மின் கம்பியை உள்ளே தூக்கிப் போட்டு அத்தனை பேரையும் கொன்றிருக் கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்?

தன்னுடைய அம்மாவும், அக் காள்கள், அண்ணன்கள் ஆறு பேரும் தன் கண் முன்னால் அடித்தே கொல்லப்பட்டதை விவரிக்கிறான் ஜுகாபரா முகாமில் இருக்கும் ஒரு ஆறு வயதுச் சிறுவன். அடித்த அடியில் அந்தப் பையன் செத்துவிட்டதாக நினைத்து விட்டிருக்கிறார்கள்.

மிக மோசமாகத் தாக்கப்பட்ட நரோடா பாட்டியா பகுதியிலிருந்து ஒரு குடும்பம் தப்பி ஓடியிருக்கிறது. 3 மாதக் கைக்குழந்தையுடனிருந்த மகளால் ஓட முடியவில்லை. எந்தப் பக்கம் போனால் தப்பிக்கலாம் என்று அங்கிருந்த காவல்துறையினிடம் அவள் வழி கேட்டாள். அவன் காட்டிய திசையில் நம்பிக்கையோடு சென்றாள். அங்கே தயாராகக் காத்திருந்த கும்பல் அவளையும் குழந்தையையும் மண் ணெண்ணெய் ஊற்றிக் கொளுத் தியது. பெண்களின் மீதான பாலியல் வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும் இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை. குடும்ப உறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின் கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக் பாலியல் வன்முறை செய்திருக்கிறார்கள். பாலியல் வன்முறை முடிந்தவுடன் அந்தப் பெண்களை எரித்துக் கொன்றிருக் கிறார்கள்; சுத்தியலால் மண்டையில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்; ஒரு இடத்தில் ஸ்குரூ டிரைவரால் குத்தியே கொன்றிருக்கிறார்கள்.

அமன் சவுக் முகாமிலிருந்த பெண்கள் கூறியவற்றைக் கேட்கவே குலை நடுங்குகிறது. திடீரென வீடு புகுந்த கும்பல், பெண்களின் முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைந்து விட்டு கையில் பயங்கரமான ஆயுதங் களுடன் அம்மணமாக நின்று பெண்களை நடுங்கச் செய்து பணிய வைத்திருக்கிறது.

அகமதாபாத்தில் நான் சந்தித்த பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர் பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும் கூறுவது இதுதான். குஜராத்தில் நடந்தது கலவரமல்ல; ஒரு பயங்கரவாதத் தாக் குதல், திட்டமிட்ட இனப் படுகொலை. ஒரு இராணுவத் தாக்குதலைப் போல எல் லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.

வெறியூட்டும்படியான முழக்கங்களை ஒலிபரப்பியபடியே முதலில் ஒரு லாரி வரும். பின்னாலேயே வரிசை வரிசையாக வரும் லாரிகள் காக்கி டவுசரும், நெற் றியில் காவித்துணியும் கட்டிய ஆட் களைக் கும்பல் கும்பலாக இறக்கிவிடும். வெடி பொருட்கள், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களுடன் களைப்பைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில் களையும் அவர்கள் கையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் செல்போன். உத்திரவுகள் போனில் வந்து கொண்டிருந்தன. கைகளில் முசுலீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள் இந்து  முசுலீம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார், அவர்களில் யாரைத் தாக்க வேண்டும் என்பது வரை துல்லியமான விவரங்கள் அவர்கள் கையில் இருந்தன. இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை.

வசதியான முசுலீம்களின் வீடுகள் கடைகள் முதலில் சூறையாடப்பட்டன. பிறகு லாரிகளில் கொண்டு வந்த எரிவாயு சிலிண்டர்களை கட்டடத்திற்குள் வைத் துத் திறந்து விடுவார்கள். பிறகு பயிற்சி பெற்ற ஒரு நபர் நெருப்பைக் கொளுத்திப் போடுவான். கட்டடம் தீப்பிடித்து எரியும்.

மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட் டுள்ளன. அகமதாபாத் நகரின் சாலை சந்திப்புகளில் இருந்த சில பிரபலமான தர்காக்கள் ஒரே இரவில் இடிக்கப்பட்டு அதன்மீது சாலையும் போடப்பட்டு விட்டது. இதற்கு முன் அந்த இடத்தில் ஒரு தர்கா இருந்ததே இல்லை என்பது போல அந்தப் புதிய சாலை மீது இப்போது வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

காவல்துறை மற்றும் அரசு எந்திரத் தின் பழிக்கு அஞ்சாத அலட்சியத்தையும், நேரடியான கூட்டுக் களவாணித்தனத் தையும் எல்லோரும் குற்றம் சாட்டு கிறார்கள். பெண்கள் குழந்தைகளின் கதறலுக்குக் கூட அவர்கள் மனமிரங்க வில்லை.கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைக்குத்தான் அவர்கள் பாது காப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

யார் கலவரக் கும்பலின் தாக்குதலுக் குப் பலியானார்களோ அந்த முசுலீம் மக்கள் மீதுதான் காவல்துறையும் துப்பாக் கிச் சூடு நடத்தியிருக்கிறது. பல செய்தி கள் இதைத்தான் கூறுகின்றன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையின ரும் முசுலீம்கள்தான்.

இருபது ஆண்டுகளாக அய்.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டி ருப்பவன் என்ற முறையில் என்னுடைய சகாக்களான அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் கடமைக்கு இழைத்த துரோகத்தை எண்ணி நான் வெட்கப் படுகிறேன். அரசியல்வாதிகளின் உத்தர வுக்குக் காத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் அவர்களைக் கட்டுப் படுத்தவில்லை. சுயேச்சையாகவும், நடு நிலையாகவும், அச்சமின்றியும் செயல் பட வேண்டுமென்றுதான் சட்டம் அவர் களைக் கோருகிறது.

அகமதாபாத்தில் ஒரே ஒரு அதிகாரி யாவது நேர்மையாக நடத்து கொண்டி ருந்தால் இராணுவத்தை அழைத்து வன்முறையை நிறுத்தியிருக்க முடியும். உள்ளூர் காவல்துறை மற்றும் அதிகாரி களின் உதவியில்லாமல் எந்த ஒரு கலவரமும் சில மணி நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது.

கொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தம் குஜராத் அதிகாரிகளின் கையில் படிந்திருக்கிறது. அவர்கள் மட்டுமல்ல, இதைக் கண்டும் காணாதது போல சதிகாரத்தனமாக மவுனம் சாதிக்கும் இந்த நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவருமே இந்தப் படுகொலையின் குற்றவாளிகள்தான்.

இனப்படுகொலை உச்சத்தில் இருந்த போது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சபர்மதி ஆசிரமத்தின் வாயிற்கதவுகள் மூடப்பட்டிருந்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. அந்த ஆசிரமமல்லவா மக்களுக்கு முதல் புகலிடமாக இருந்திருக்க வேண்டும்! கொலைக் கும்பல்களைத் தடுத்து நிறுத்த எந்தக் காந்தியவாதி தன் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் நின்றார்?

இதோ இன்னொரு பெருத்த அவமானம்!

இந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் ஏற்கெனவே நாம் பல அவமானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறோம். இதோ இன்னொரு பெருத்த அவமானம்! பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்காக அகமதாபாத் நகரில் நடத்தப்படும் அகதி முகாம்களெல்லாம் இசுலாமிய அமைப்புகளால்தான் நடத்தப்படு கின்றன. முசுலீம் மக்கள் அனுபவித்த துன்பம், இழப்புகள், துரோகம், அநீதி ஆகியவை பற்றியெல்லாம் சக முசுலீம் கள் தான் கவலைப்பட வேண்டும்; அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் அவர்களுடைய வாழ்க்கையை புனர மைத்துத் தரவும் நமக்கு எவ்விதப் பொறுப்புமில்லைஎன்று சொல்வது போல இருக்கிறது இந்த அணுகுமுறை.
குஜராத்தின் கொலைகாரக்கும்பல் எதையெல்லாமோ என்னிடமிருந்து திருடிச்சென்றுவிட்டது. அவற்றில் ஒன்று இந்தப் பாடல். நான் பெரு மிதத்துடனும் நம்பிக்கையுடனும் பாடி வந்த பாடல். அந்தப் பாடலின் சொற்கள் இவை:

சாரே ஜஹா ஸே அச்சா
இந்துஸ்தான் ஹமாரா

இந்தப் பாடலை இனி ஒரு போதும் என்னால் பாட முடியாது.

குஜாரத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து 11 ஆண்டுகள் முடிந்துவிட்டன.கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, பாலியல் வன்முறை செய்த இந்து மதவெறி யர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப் படவில்லை. இந்தியா ஒரு மதச்சார் பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்துவ நாடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப் படவேண்டும், வேதனைப் படவேண்டும்.

இந்த இனப்படுகொலையின் நாயக னான நரேந்திர மோடி வரும் பாராளு மன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமராக நிற்பதற்கு கடும் பிரய த்தனம் செய்து வருகிறார். குஜராத் மாநிலத்தை ஆஹா .ஓஹோ ..என்று வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளார் என்ற வெறும் மாயக் கருத்தை மட்டும் வைத்துக்கொண்டு இவர் தகுதியானவர் என்று சிலர் கூவிக்கொண்டு திரிகிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் நாட்டிலேயே அதிகமாக வறுமையில் வாடுபவர்கள் குஜராத் மாநிலத்தில் வசிக்கிறார்கள் என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று தெளிவுபடுத்தியது. குஜராத்தில் நர்மதா பள்ளத்தாக்கில் இருந்த 2 இலட்சம் நபர்கள் அரசால் வெளியேற்றப்பட்டதால் இன்று மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் பிச்சை எடுத்து கொண்டு பிளாட்பாரங்களில் தூங்கி கொண்டுள்ளனர். இவரை போன்றவர்கள் நாட்டை ஆண்டால் என்னவாகும்! நாட்டின் பிரதமர் பதவிக்கு இவர் தகுதியானவரா என் பதை மக்களே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஆகவே வருங் கால பிரதமர் போட்டிக்குரியவரின் கடந்த கால தகுதிகளை சீர்தூக்கி பார்ப்பது அவசியம்.

சீனாவில் உள்ள பேருந்து நிலையத்தை அகமதாபாத்தில் மோடி உருவாக்கியதாகக் காட்டும்

மோடியின் பித்தலாட்டத்தைத் தோலுரித்துக் காட்டினார் பேராசிரியர் சுப.வீ.

சென்னை, அக். 24- சீனாவில் ஷாங்காங்கில் நவீன முறையில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை மோடி, குஜராத் மாநிலம், அகமதா பாத்தில் கட்டியிருப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்வதை தோலுரித்துக் காட்டினார் பேராசிரியர் சுப.வீர பாண்டியன்.

சென்னை பெரியார் திடலில் 22.10.2013 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:-

ஊரில் எல்லோரும் சட்டசபைத் தேர்தலைப் பற்றிப் பேசிக் கொண் டிருக்கும் இந்த நேரத்தில் சென்னை - பெரியார் திடலில் திராவிடர் கழகத் தின் சார்பில் ஜாதிய சக்திகள், மதவாத சக்திகளைப் பற்றிப் பேசிக் கொண் டிருக்கிறோம்.
தாழ்த்தப்பட்டவர்களை எதிர்ப் பது, காதல் திருமணத்தை எதிர்ப்பது என்பது ஜாதிய கட்சிக் கூட்டணி யின் கருத்து.

மதவாத கட்சியின் நோக்கம்

மதவாதக் கூட்டணிகளுக்கு இரு கொள்கைகள். ஒன்று சிறுபான்மை யினர் எதிர்ப்பு - இன்னொன்று மதச் சார்பின்மை எதிர்ப்பு!

நாடகக் காதல் என்ற புதுவார்த் தைகளை அறிமுகப்படுத்தியுள்ளார் கள். இளைஞர்கள் இருக்கும் வரை காதலும் இருக்கும். காதலை எதிர்க்க முடியாது. காதலை எதிர்க்கும் சினிமா கூட தமிழ்நாட்டில் ஓடுவதில்லை - திரைக்கு வந்த வேகத்தில் காணாமல் போய்விடுகிறது.

ஜப்பான் நாட்டில் காதலுக்காகவே 17 இதழ்கள் வெளிவருகின்றன.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்

அடுத்து வன்கொடுமை தடுப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற ஒன்றை ஜாதி கூட்டணிக்காரர்கள் முன் வைத்துள்ளனர்.

இந்தச் சட்டத்தை மேலும் வலு உள்ளதாக ஆக்க வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை. இந்தச் சட்டத் தின்மூலம் வெறும் 2 சதவிகிதம் பேர் தான் தண்டிக்கப்படுகின்றனர். அந்த ஓட்டை சரி செய்யப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்.

இந்தச் சட்டத்தைத் திருத்துவதோ, மாற்றுவதோ மாநில அரசின் கையில் இல்லை. மத்திய அரசுதான் அதனைச் செய்யவேண்டும். திராவிட இயக்க எதிர்ப்பை முன் வைக்கிறார்கள். திராவிடர் என்றால் - தமிழ் நாட்டில் பார்ப்பனர் எதிர்ப்பு என்பதன் குறியீடு!

யாரை ஆதரிப்பது - யாரை எதிர்ப்பது!

யார் ஆதிக்கம் செலுத்துகிறார் களோ அவர்களை எதிர்ப்பது - யார் ஒடுக்கப்பட்டு இருக்கிறார்களோ, அவர்களை ஆதரிப்பது என்பது நமது கொள்கை. முதலில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மோடி திருச்சி வந்தார். எந்தக் கொள்கையைப் பிரகடனம் செய்தார்? தி.மு.க. - அஇஅதிமுக மீது ஏன் எந்த வித விமர்சனத்தையும் அவர் வைக்க வில்லை?

மொழிவாரி மாநிலமே கூடாதாம்!

அங்கு என்னதான் பேசினார்? மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்தது தவறு என்கிறார். இந்தியா ஒரே நாடு, ஒரே பண்பாடு என்கிறார். கேரளாவிலும் வங்காளத்திலும் ஒரே பண்பாடு தான் நிலவுகிறதா?

நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், தான் எழுதிய நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. அந்தத் தன்மை, சிறப்பு அழிக்கப் பட்டால், இந்தியா முழுமையும் கல வரங்கள் நடக்கும் என்று குறிப் பிட்டுள்ளாரே!

1926இல் வங்காளத்தில் முஸ்லீம் கள் வாங்கு சத்தம் கூடாது என்று தடை போட்டதால் பெரும் கலவரம் ஏற்படவில்லையா?

மோடியை பற்றி மிகப் பெரிய அளவில் விளம்பரம் செய்யகிறார்கள். கோயபெல்ஸ் பிரச்சாரம்.

மோடி பெரிய சாதனையாளர் என்று ஒரு படத்தை வெளியிடுகிறார்கள்.

பார்ப்பதற்கு ஆச்சரியப்படும் அள வுக்கு உருவாக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் - அகமதாபாத்தில் மோடி உருவாக்கியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

முகநூலில் நமது தம்பிகள் தேடி - அது சீனாவில். ஷாங்காங் நகரில் உள்ள பேருந்து நிலையம் என்று கண்டுபிடித்து வெளியிட்டு விட்டனர். மோடி என்றாலே மோசடி - மோடி மஸ்தான் பேர்வழி என்பதை உணர வேண்டும். இணைய தளங்களில் நம் இளை ஞர்கள் இப்பொழுதுதான் நுழைய ஆரம்பித்துள்ளன.ர் பெரியார் வலை தளம் ஒரு துவக்கத்தைக் கொடுத்தது 40 ஆயிரம் இளைஞர்கள் இப்பொழுது திமுக இணைய தளத்தில் இணைந்து உள்ளனர் என்பது நல்ல செய்தி.

பொய்யைப் பரப்பியே ஆட்சி யைப் பிடித்து விடலாம் என்று மனப் பால் குடிக்கிறார்கள்.

காவிகளின் ஜம்பம் கருஞ்சட்டைகளிடம் பலிக்காது

காவிகளின் ஜம்பம் தமிழ்நாட்டில் எடுபடாது. அவர்களைச் சந்திக்கும் சக்தி கருஞ்சட்டைப் பட்டாளத்துக் குத்தான் உண்டு.

தேநீர்க் கடையில் வேலை பார்த்து, அதற்குப் பின் சைக்கிள் கடையில் வேலை பார்த்த ஆசாமி ஒருவர். குறுக்கு வழியில் பணம் சேர்க்க பெரிய மனுசனாக ஒரு வழி சாமியார் ஆவது தான், ஆசிரமம் அமைப்பதுதான் என்று முடிவு செய்து மத்தியப் பிரதே சத்தில் ஆசிரமம் ஒன்றை ஆரம் பித்தார் ஆசாராம்.

இன்றைக்கு அவருக்கு இருக்கும் சொத்து 5000 கோடி ரூபாய்; இந்தியா முழுமையும் 426 ஆசிரமங்கள் 1400 யோகா நிலையங்கள்.

புலால் உண்டால், காமக் கிளர்ச்சி ஏற்படும் என்று கீதோபதேசம் செய் கிறார். அப்படி சொன்னவர்தான், ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறை செய்த வழக்கில் சிறைக்குள் இருக் கிறார்.

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தேவை!

மும்பையிலே நரேந்திர தபோல்கர் சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட் டுக் கொண்டிருந்தார். இரு இந்துத் துவாவாதிகள் அவரைச் சுட்டுக் கொன்று இருக்கின்றனர். அதற்குப் பின் அங்கு ஒரு சட்டம், மூடநம் பிக்கை ஒழிப்புச் சட்டம் இயற்றப் பட்டுள்ளது. 2005இல் முன்மொழியப்பட்டது.

2013இல்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுவும் ஒரு சமூக சீர்திருத்தவாதியின் உயிரை இந்துத்துவாவாதிகள் குடித்த பிறகு தான் இது நிறைவேற்றப்படு வது. இதுபோன்ற ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். எது எதற்கெல் லாமோ அவசரச் சட்டம் கொண்டு வருபவர்கள், இந்த அவசிய மான அவசரமான தேவைக்கு ஓர் அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறினார்.

போலிக் கண்ணீர் மோடி

பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி, அக்டோபர் 27ஆம் தேதி பாட்னாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார். அப்பொழுது நிகழ்த்தப் பட்ட குண்டுவெடிப்பில் ஆறு பேர் பலியா னார்கள், 83 பேர் காயம் அடைந்தார்கள்.

அந்த வன்முறை கண்டிக்கத்தக்கதே;  காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் அதனைக் கண்டிக்கவே செய்தன.

அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, அந்தச் சம்பவம் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை; கண்டனம் தெரிவிக்கவில்லை; பலியானவர்களுக்கு அனுதாபம் தெரிவித்துக் கூடப் பேசவில்லை.

இப்பொழுது அவருக்கு மனதில் ஆறாத் துயரம் வெடித்துக் கிளம்பி, அதிலிருந்து விடு படவே முடியாத ஆற்றாமையால், பீகார் மாநிலத் திற்கு ஓடோடிச் சென்று, இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

பொதுவாகப் பார்ப்பவர்களுக்கு - நல்ல அணுகுமுறைதானே - மனிதத் தன்மை என்பது இதுதானே என்று தோன்றக் கூடும்.

அதே நேரத்தில் மோடியைப் பற்றிய முழு வடிவத்தைத் தெரிந்தவர்களுக்கு, இது சுத்த நடிப்பு - அரசியல் பாசாங்குதனம் - பொது மக் களை ஏமாற்ற வடிக்கும் கிளிசரின் கண்ணீர் என்பதை, எளிதிற் புரிந்து கொள்ளலாம்!

குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்ட தற்கு மூலகாரணமாக இருந்தவர் முதலமைச்சர் மோடி என்பது உலகத்துக்கே தெரிந்த உண்மை.

மூன்று நாட்கள் காவல் துறைக்கும், அரசு அதிகாரிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலுக்கும் முழு உரிமை கொடுத்து, சிறுபான்மையினரை வேட்டையாடி முடியுங்கள் -  காவல்துறை உங்களைக் கண்டு கொள்ளாது என்று உத்தரவிட்ட புண்ணிய வான் இந்த மோடியல்லவா!

கருவுற்ற பெண்களைக்கூட குத்திக் குடலைக் கிழித்து சிசுவை நெருப்பில் தூக்கிப் போட்டு கும்மாளம் போட்ட காட்டு விலங் காண்டிகளை இதற்கு முன் உலகம் கண்ட துண்டா? இந்த அருவருப்பான சாதனை மோடி அரசில்தான் நிகழ்த்தப்பட்டது.

அதனால்தான் உச்சநீதிமன்ற நீதிபதி, மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டார் என்பதை மறந்து விடக் கூடாது.

குஜராத்தில் நடைபெற்ற இனப்படு கொலைக்கு, நியாயமாக பொறுப்பேற்று முதல் அமைச்சர் மோடி பதவி விலகி இருக்க வேண்டாமா?

குறைந்தபட்சம், வருத்தமாவது தெரிவித் திருக்க வேண்டாமா? மாறாக என்ன சொல்லு கிறார்? காரில் பயணம் செய்யும் போது நாய்க் குட்டி அடிபடும் பொழுது ஏற்படும் அளவுக்கு வருத்தப்படுவதாகச் சொல்லுகிறார் என்றால், அவரைப் பற்றிய மதிப்பீட்டைப் புரிந்து கொள்ளலாம்.

சொந்த வீடுகளை இழந்து அகதிகள் முகாம்களில் முடங்கிக் கிடந்த சிறுபான்மை மக்கள் இனவிருத்தி வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர் என்று பேசிய மிகப் பெரிய நாகரிகத்துக்குச் சொந்தக்காரர் இவர்.

தனக்குப் பிடிக்காதவர், சொந்த கட்சியில் இருந்தாலும், போட்டுத் தள்ளக் கூடியவர்; (எடுத்துக்காட்டு அமைச்சர் ஹரேன் பாண் டியா)

தன்னை நம்பி இருந்த அதிகாரிகளைக்கூட தன்மீது பழி வரக் கூடாது என்பதற்காகக், காட்டிக் கொடுத்த கண்ணியவான் இந்த மோடி.

இப்படிப்பட்ட ஒருவர், குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்காக, நேரில் சென்றார்; கண்ணீர் மல்கினார் என்ற செய்தியைப் படிக்கும் பொழுது, சிரிப்புதான் வருகிறது.

தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றிடவும், கடந்த காலத்தில் அவர்மீதுவிழுந்த மரண வியாபாரி என்ற முத்திரை சாயத்தைக் கழுவிக் கொள்ளவும், இப்படியெல்லாம் நாடகம் ஆடு கிறார் என்பதைப் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Monday, 4 November 2013

படேலுக்கு இணையாக மோடியை முன்னிறுத்துவது மோசடியானது : மகாத்மா காந்தியின் பேரன் கடும் விமர்சனம்


புதுதில்லி, நவ. 4 - சர்தார் வல்லபாய் படேல் தற்போது உயிரோடு இருந்திருந்தால், முஸ்லிம்களுக்கு எதிராக நரேந்திர மோடி விஷம் கக்கி வருவதைப் பார்த்து மிகவும் வேதனையடைந்திருப்பார் என்று நரேந்திரமோடியின் மதவெறி குறித்து மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் நரேந்திரமோடியை ஒரு போதும் தனது தத்துவார்த்த வாரிசாக சர்தார் வல்லபாய் படேல் ஏற்றுக்கொண்டிருக்கவே மாட்டார் என்றும் ராஜ்மோகன் காந்தி கூறினார். மகாத்மா காந்தியின் பேரனான ராஜ்மோகன் காந்தி, நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும் இந்திய விடுதலைக்காக போராடியவருமான சர்தார் வல்லபாய் படேலின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎன்என் ஐபிஎன் தொலைக் காட்சியில் கரண் தாப்பர் நடத்தும் `டெவில்ஸ் அட்வகேட்’ எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜ்மோகன் காந்தி, வல்லபாய் படேலுக்கு இணையாக - அவரது வாரிசாக தன்னைத்தானே மோடி புகழ்ந்துகொள்வதும், அவரது பாஜக ஆதரவாளர்கள் கொண்டாடுவதும் எந்தவிதத்திலும் பொருத்தமற்றது; இது முற்றிலும் படேலை அவமரியாதை செய்வதும் ஆகும் என்று கூறினார்.

2002ம் ஆண்டு குஜராத்தில் மிகப்பெருமளவில் மதவெறிப் படுகொலைகள் நடந்தபோது, மோடி தனது `ராஜதர்மத்தை’ நிறைவேற்றிவிட்டார் என்று கூறி அப்போதைய பிரதமர் வாஜ்பாய், மோடியை புகழ்ந்தார். அப்போது அவர்கள் படேலைப் பற்றி எண்ணிக்கூடப் பார்க்கவில்லை என்று ராஜ்மோகன் காந்தி சாடினார். “ஒரு வேளை படேல் தற்போது உயிரோடு இருந்தால் மிகவும் வருத்தமடைந்திருப்பார். வேதனையும் கவலையும் அடைந்திருப்பார்.

இந்தியாவின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவராக மட்டுமல்ல; குஜராத்திலிருந்து வந்தவர் என்ற முறையிலும் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த தாக்குதலைத் தடுக்க முடியாமல் போய்விட்டதே என்று கவலைப்பட்டிருப்பார் என்றே நினைக்கிறேன்“ என்றும் ராஜ்மோகன் காந்தி மேற்கண்ட நிகழ்ச்சியில் கூறினார்.“படேலுக்கு இணையாக மோடியை முன்வைப்பது முற்றிலும் மோசடியானது. வேண்டுமானால் ஒரே ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக மட்டும் அப்படி ஒப்பிட்டுக் கொள்ளலாம்.

சர்தார் வல்லபாய் படேல் என்பவர் மகாத்மா காந்தியின் சீடராக இருந்தவர்; மகாத்மா காந்தி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற மாபெரும் குடைகளின் கீழ் வளர்ந்தவர். மோடி என்பவர் ஆர்எஸ்எஸ் என்ற குடையின் கீழ் வளர்ந்தவர். இப்படி வேண்டுமானால் ஒப்பிட்டுப் பேசலாம்”என்றும் ராஜ்மோகன் காந்தி கூறினார்.“மற்றொரு அம்சத்தையும் இருவருக்கும் இடையில் ஒப்பிடலாம். அது என்னவென்றால் படேல் என்ற தனி மனிதர் எப்போதுமே ஒரு குழுவை இயக்குபவராக, கூட்டு உணர்வை ஏற்படுத்துபவராக இருந்தார்; அவரது வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் தன்னை முன்னிறுத்தியதில்லை; எப்போதுமே இதர மக்களுக்காகவே பாடுபட்டவர்.

மோடியைப் பொறுத்தவரை குழு உணர்வை ஏற்படுத்துகிறார்; அது முழுக்க முழுக்க தன்னை மட்டுமே முன்னிறுத்துவதாக அமைந்திருக்கிறது” என்றும் ராஜ்மோகன் காந்தி கூறினார்.மோடியை கடுமையாக விமர்சித்த ராஜ்மோகன் காந்தி காங்கிரசையும் கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் என்ற இயக்கம் சர்தார் வல்லபாய் படேலை மறந்து வெகுகாலமாகிவிட்டது என்றும், அவர் மறைந்து 63 ஆண்டு காலம் ஆகியுள்ள நிலையில், அவரது பணிகளை சிறு அளவிற்கு கூட நினைவுகூர தயாராக இல்லாத கட்சியாக மாறிவிட்டது என்றும் கூறினார்.நேருவைத் தொடர்ந்து இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ்காந்தி, சோனியா காந்தி, தற்போது ராகுல்காந்தி என அவரது குடும்ப வாரிசுகள் அரசு அதிகாரத்தின் மூலமாக பலன்பெற்றார்கள்; ஆனால் படேலின் குடும்பத்திலிருந்து அப்படி யாரையும் சொல்ல முடியாது என்றும் ராஜ்மோகன் காந்தி கூறினார்.

நாட்டின் பிரதமராக ஜவஹர்லால் நேருவை மகாத்மா காந்தி முன்வைத்தபோது, நேருவை விட 16 ஆண்டுகள் மூத்தவராக இருந்த போதிலும் வல்லபாய் படேல் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார். ஏனென்றால் காங்கிரஸ்காரராக இருப்பதையும் காந்தியின் சீடராக இருப்பதை மட்டுமே அவர் பெருமிதமாக நினைத்தார் எனக்குறிப்பிட்ட ராஜ்மோகன் காந்தி, நேருவே பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்றும் சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்டவர் அவரே என்றும் ஏற்றுக்கொண்டவர் படேல் எனவும் குறிப்பிட்டார்.(பிடிஐ)

போலிக் கண்ணீர் மோடி



பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி, அக்டோபர் 27ஆம் தேதி பாட்னாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார். அப்பொழுது நிகழ்த்தப் பட்ட குண்டுவெடிப்பில் ஆறு பேர் பலியா னார்கள், 83 பேர் காயம் அடைந்தார்கள்.
அந்த வன்முறை கண்டிக்கத்தக்கதே;  காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் அதனைக் கண்டிக்கவே செய்தன.
அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, அந்தச் சம்பவம் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை; கண்டனம் தெரிவிக்கவில்லை; பலியானவர்களுக்கு அனுதாபம் தெரிவித்துக் கூடப் பேசவில்லை.
இப்பொழுது அவருக்கு மனதில் ஆறாத் துயரம் வெடித்துக் கிளம்பி, அதிலிருந்து விடு படவே முடியாத ஆற்றாமையால், பீகார் மாநிலத் திற்கு ஓடோடிச் சென்று, இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பொதுவாகப் பார்ப்பவர்களுக்கு - நல்ல அணுகுமுறைதானே - மனிதத் தன்மை என்பது இதுதானே என்று தோன்றக் கூடும்.
அதே நேரத்தில் மோடியைப் பற்றிய முழு வடிவத்தைத் தெரிந்தவர்களுக்கு, இது சுத்த நடிப்பு - அரசியல் பாசாங்குதனம் - பொது மக் களை ஏமாற்ற வடிக்கும் கிளிசரின் கண்ணீர் என்பதை, எளிதிற் புரிந்து கொள்ளலாம்!
குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்ட தற்கு மூலகாரணமாக இருந்தவர் முதலமைச்சர் மோடி என்பது உலகத்துக்கே தெரிந்த உண்மை.
மூன்று நாட்கள் காவல் துறைக்கும், அரசு அதிகாரிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலுக்கும் முழு உரிமை கொடுத்து, சிறுபான்மையினரை வேட்டையாடி முடியுங்கள் -  காவல்துறை உங்களைக் கண்டு கொள்ளாது என்று உத்தரவிட்ட புண்ணிய வான் இந்த மோடியல்லவா!
கருவுற்ற பெண்களைக்கூட குத்திக் குடலைக் கிழித்து சிசுவை நெருப்பில் தூக்கிப் போட்டு கும்மாளம் போட்ட காட்டு விலங் காண்டிகளை இதற்கு முன் உலகம் கண்ட துண்டா? இந்த அருவருப்பான சாதனை மோடி அரசில்தான் நிகழ்த்தப்பட்டது.
அதனால்தான் உச்சநீதிமன்ற நீதிபதி, மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டார் என்பதை மறந்து விடக் கூடாது.
குஜராத்தில் நடைபெற்ற இனப்படு கொலைக்கு, நியாயமாக பொறுப்பேற்று முதல் அமைச்சர் மோடி பதவி விலகி இருக்க வேண்டாமா?
குறைந்தபட்சம், வருத்தமாவது தெரிவித் திருக்க வேண்டாமா? மாறாக என்ன சொல்லு கிறார்? காரில் பயணம் செய்யும் போது நாய்க் குட்டி அடிபடும் பொழுது ஏற்படும் அளவுக்கு வருத்தப்படுவதாகச் சொல்லுகிறார் என்றால், அவரைப் பற்றிய மதிப்பீட்டைப் புரிந்து கொள்ளலாம்.
சொந்த வீடுகளை இழந்து அகதிகள் முகாம்களில் முடங்கிக் கிடந்த சிறுபான்மை மக்கள் இனவிருத்தி வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர் என்று பேசிய மிகப் பெரிய நாகரிகத்துக்குச் சொந்தக்காரர் இவர்.
தனக்குப் பிடிக்காதவர், சொந்த கட்சியில் இருந்தாலும், போட்டுத் தள்ளக் கூடியவர்; (எடுத்துக்காட்டு அமைச்சர் ஹரேன் பாண் டியா)
தன்னை நம்பி இருந்த அதிகாரிகளைக்கூட தன்மீது பழி வரக் கூடாது என்பதற்காகக், காட்டிக் கொடுத்த கண்ணியவான் இந்த மோடி.
இப்படிப்பட்ட ஒருவர், குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்காக, நேரில் சென்றார்; கண்ணீர் மல்கினார் என்ற செய்தியைப் படிக்கும் பொழுது, சிரிப்புதான் வருகிறது.
தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றிடவும், கடந்த காலத்தில் அவர்மீதுவிழுந்த மரண வியாபாரி என்ற முத்திரை சாயத்தைக் கழுவிக் கொள்ளவும், இப்படியெல்லாம் நாடகம் ஆடு கிறார் என்பதைப் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Sunday, 3 November 2013

மோடி-டெண்டுல்கர் மற்றும் விநாயகர்: இவை எல்லாம் பார்ப்பனீயம் நம்மை வீழ்த்த வைத்திருக்கும் ஆயுதங்கள்


சமீபத்தில் ஒரு நண்பர் கேட்டார், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மோடியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துவதை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்றார்.
பிற்படுத்தப்பட்டவர் என்பதால் கொலைகாரன், கொள்ளைக்காரன், முடிச்சவிழ்க்கி, பிக்பாக்கெட், காமக் கொடூரன், சாமியார்கள் இவர்களை யெல்லாம் கண்மூடித்தனமாக ஆத ரித்துவிடமுடியுமா? அதே நேரத்தில், இதே தவறுகளை செய்த பார்ப் பானுக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதி என்று பாகுபாடு பார்த்தால் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் வெகுண்டெழுவோம்.
காஞ்சி சங்கரனிலிருந்து சவுண் டிப் பார்ப்பான்வரை குற்றம் செய்து விட்டு ஒன்றும் தெரியாத மாதிரி பவனி வரும்பொழுது, பிற்படுத்தப்பட்ட சமு தாயத்தைச் சேர்ந்த லாலுவை (குற்றம் நிரூபிக்கப்பட்ட பொழுதும்) உள்ளே தள்ளியது மனசை நெருடுகிறது; என்ன செய்வது! பார்ப்பானுக்கு நீதி அஞ்சலில் வருகிறது என்றால் (பெரும் பான்மையான நேரத்தில் விலாசம் எழுதப்படாத அஞ்சல் மாதிரி அலைக் கழிக்கப்படுவதும் உண்டு), மற்றவற்கு ஈமெயிலில் அல்லவா வருகிறது.
மோடி பிற்படுத்தப்பட்டவர் என் றாலும் கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ். காரர். அக்மார்க் இந்துத்துவா வெறி யர். ஆயிரக்கணக்கான இசுலாமியர் களை வெட்டிச் சாய்க்க துணை நின்றவர். வரலாற்றில், ஹிட்லருக்குப் பிறகு ஒரு அரசாங்கமே தனது குடி மக்களை கொன்று குவிப்பதைக் கண்டு ரசித்தவர். (ராஜபக்சே அதை யும் விஞ்சி விட்டார் என்பது வேறு விஷயம்). துப்புரவுத் தொழிலாளியை நீ செய்யும் வேலை கடவுளுக்கு செய்யும் காரியம். கடவுளின் அன்பும், ஆதரவும் உனக்கு கிடைக்கும். துப்புரவு செய் பவர்கள், வால்மீகிக்கு ஒப்பானவர்கள் என்று எழுதியது, மோடி யார், எப்படிப் பட்டவர் என்பதை பட்டவர்த்தனமாக அல்லவா சொல்கிறது. அவர் சார்ந்த ஆர்.எஸ்.எஸ்-இன் இந்து கர்மா கருத்தினை நிறுவும் செயல்தானே அது?
பார்ப்பானுக்கு நேரடியாக பருப்பு வேகாது என்றால் மோடி போன்ற குறி யீடுகள் மூலம் நம்மை ஒடுக்க முயற்சிப் பான். அக்குறியீடுகளை சந்திரன், இந் திரன் என்றும் புகழ்வான். அவர்களுக்கு எல்லா நல்ல குணங்களையும் ஏற்றுவான். (கல்லுக்கே மந்திரத்தை ஏற்றி கடவுள் ஆக்கியவனுக்கு இது எம்மாத்திரம்?) அக்குறியீடுகளை அங்ஙனம் புனிதப் படுத்தி, அவர்களை யாரும் எதுவும் விமர் சிக்க முடியாத இடத்தில் வைப்பான். நம்மவர்களும் வாய்பிளந்து கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். அப்படிப்பட்ட புனிதர்களை ஜோடித்து ஊர் ஊராய் உற்சவம் நடத்துவார்கள். ஊரிலே இருக் கும் எல்லா பார்ப்பானும் வழக்கத்துக்கு மாறாக புது சொக்காய் போட்டுக்கிட்டு கிளம்பிடுவான்.
மோடியின் சமீப சென்னை விஜயத் தின் பொழுது விட்டல் மாமாவிலிருந்து பழைய கிரிகெட் வீரர் சிறீகாந்த் அத்திம் பேர் வரை முண்டியடிச்சுக்கிட்டுப் போறாங்கனா ஒரு வேளை மோடி பிரதமர் ஆக வந்துட்டாருன்னா அவாளும் பூணூ லில் கொஞ்சம் முதுகை சொரிஞ்சிக் கிலாம் பாருங்க.
அக்ரகாரத்து அம்பிங்க துள்ளி குதிக் கிறாங்கன்னாலே அதற்கு அர்த்தமே வேற. மோடி வந்தவுடன் எப்படியாவது, இட ஒதுக்கீட்டுக்கு சாவு மணி அடிச் சிடலாம்; இந்து, தருமம், வருணாசிரமம் என்ற இத்துப் போன பாத்திரத்திற்கு எல்லாம் புது முலாம் பூசி, பவனி விடலாம். மீண்டும் பேஷா எங்கும் அவா, எதிலும் அவாஎன்று ஆக்கிடலாம். நன்னா வயிறு முட்ட பருப்பும், நெய்யும் கலந்த சோற்றை சாப்பிட்டு விட்டு, வாய் மணக்க கும்ப கோணம் வெற்றிலையும் (வெத்தல்ல செல்லம்) சீவலையும் போட்டுக்கிட்டு இந்த சூத்திரப் பசங்களையும், சேரிப்பசங் களையும் மோத விட்டு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் மாதிரி ரசித்துப் பார்ப்பான் (அதான் பார்ப்பான் ஆச்சே). அதனாலேதான் கன்னியாகுமரி பார்ப்பான் வரை நெரிக் கட்டின மாதிரி துடிக்கிறான். எப்படியாவது மோடியை, பிரதமர் ஆக்கிட. குஜராத், நாட்டிலேயே வளர்ச்சியில் முதல் மாநிலம்ன்னு சொன்ன கதை இப்ப சாயம் வெளுத் துடிச்சி. நேர்மை, லஞ்ச லாவண்யம் இல்லாத அரசு பாஜக தரும்னு சொன்னா அவங்க கட்சிக்காரனே நம்ப மாட்டான். நிலையான ஆட்சி கொடுப்பாங்க ளான்னா. பழைய வாஜ்பேயி ஆட்சி வேற நினைவுக்கு வந்து பயமுறுத்துது. அப்ப மோடி முட்டி மோதிப் பார்த்தாலும் அமெரிக்காக்காரன் விசா கொடுக்க மாட்டேன்கிறான். வாஜ்பேயி, பிரதமர் என்று சொன்ன பொழுதாவது கூட ரெண்டுக் கட்சி வந்து சேர்ந்தது. மோடி மாமா பேரைக் கேட்டவுடனே இருந்த இரண்டு கட்சியும் ஓடிப்போயிடிச்சி. அத் வானி தாத்தாவும் முடுக்கிக் கிட்டு நிக்க றாரு. அப்படி மோடி என்னதான் கிழிப் பாரு?
பார்ப்பான்களுக்கு எல்லா கதவுகளை யும் திறந்து விடுவது மட்டுமின்றி, எதிர்ப் புக் குரல்களை மெல்ல நசுக்கி, ஹிட்லர் போல பாசிச ஆட்சி நடத்துவார். சாமான்ய மக்களுக்கு பல வருடங் களாகவே அரசு நிர்வாகத்தின் மீது கோபம் உண்டு. காரணம், லஞ்சம், வேலையில் அலட்சியம், அதிகார போதை இந்தக் காரணங்களால் மக்களுக்கு அரசாங்க நிருவாகத்தின் மீது எப்பொழுதும் ஒரு வெறுப்பு உண்டு. (முன்பு ஒரு முறை ஜெ அரசாங்கம், அரசு அதிகாரிகளையும், ஊழியர்களையும் ஒட்டு மொத்தமாக சிறையில் அடைத்த பொழுது சாமா னிய மனிதன் அதைக் கண்டு ரசித் தான். பாராட்டினான்.) அதனால் மோடி ஆட்சியில் நிருவாகத்தில் சீர் திருத்தம். கண்டிப்பு என்கிற பெயரில் இந்துத்துவ எதிர்ப்பாளர்களும், சிறு பான்மையினரும் பழி வாங்கப்படலாம். மக்கள் அதை உணராமல் தவறு களைத்தானே களை எடுக்கிறார்கள் என்று பாராட்டுவார்கள். எதிர்த்து எழுதுபவர்களும் கேள்விக் கேட்பவர் களும், திடீரென காணாமல் போய் விடு வார்கள்; என்கவுன்ட்டர்கள் சாதார ணமாக நடக்கும். அதை நியாப்படுத்தி பத்திரிகைகள்