Showing posts with label மோசடி. Show all posts
Showing posts with label மோசடி. Show all posts

Saturday, 8 March 2014

மோடிக்கு 20 கேள்விகள் - - நரேன் ராஜகோபாலன்

மோடிக்கு என்னுடைய 20 கேள்விகள் ....................
 
 அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு கட்சி இருக்கிறது. அரசியல் பிரயாசைகள் இருக்கிறது. முன்னாள் முதல்வர். பாஜகவின் எதிரி. அதனால் அவர் கேள்வி கேட்டால், அவரை காவியாளர்கள் நக்கலடிப்பதும், பரிகசிப்பதும் இயல்பு.

எனக்கு கட்சியோ, கொடியோ, அரசியல் அபிலாஷைகளோ, MP, MLA, Ward Counselor அளவுக்கு போட்டியிடும் கனவுகள் எதுவும் இப்போதைக்கு கிடையாது. I am just a stupid common man. இந்த நாட்டின் குடிமகனாய், ஒழுங்காய் வரிகட்டும் சராசரி மனிதனாய் எனக்கு சில கேள்விகள் இருக்கிறது.

பதில் சொல்வாரா மோடி ?

1) குஜராத் வளர்ச்சி உச்சத்தில் இருக்கிறதென்பது உண்மையானால் ஏன் உங்களால் வெறுமனே 3 தொகுதிகள் மட்டுமே அதிகமாக 2013-இல் வென்று ஆட்சி அமைக்க முடிந்தது. (117 Vs. 120) நியாயமாய் பார்த்தால் 182 தொகுதிகளில் குறைந்த பட்சம் 150க்கும் மேற்பட்ட தொகுதிகள் நீங்கள் வென்றிருக்க வேண்டுமே ?

2) வெப்ரைண்ட் குஜராத் சப்மிட்டில் ஏன் திடீரென்று நீங்கள் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களின் எண்ணிக்கையோ, முதலீடு ஒப்புதல்களையோ 2013-லிருந்து வெளியே சொல்ல மறுக்கிறீர்கள் ? அதற்கு முன்பு நடந்த இரண்டு சப்மிட்களின் conversion ratio ஏன் அதல பாதாளத்திற்கு போயிருக்கிறது ?

3) நாட்டிலேயே முதன்மையான முதலீட்டு ஆதரவாக இருக்கும் மாநிலம் என்று பறைசாற்றும் நீங்கள், ஏன் ஒட்டுமொத்த அன்னிய முதலீட்டில் ஆறாவது இடத்தில் இருக்கிறீர்கள் ?

4) இஸ்லாமியர்கள் என்னுடைய நண்பர்கள் என்று இன்றைக்கு தோள் கொடுக்க தயாராக இருக்கும் நீங்கள் ஏன் கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் ஒரு இஸ்லாமியரை கூட குஜராத் பாஜக சார்பாக போட்டியிடக் கூட தேர்ந்தெடுக்கவில்லை ? மாநகராட்சி தேர்தல்களில் இடம் தந்தோம் என்று சொல்லாதீர்கள். மாநகராட்சி, பஞ்சாயத்து தேர்தல்கள் எப்படி நடக்குமென்று ஊருக்கேத் தெரியும்.

5) இஸ்லாமியர்களுக்கு ஆட்சியமைப்பில் ஆள தகுதியில்லை. அவர்கள் இன்னும் வளர வேண்டும் என்று நீங்கள் சொல்வதை கூட ஒரு வாதத்துக்கு ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அரசாங்க பணிகளில் ஏன் மிகக் குறைந்த இஸ்லாமியர்களே குஜராத் அரசில் பணியாற்றுகிறார்கள் ?

6) இந்தியாவே பார்க்காத அளவிற்கு குஜராத் முன்னேறுகிறது என்று முன்வைக்கப்படுகின்ற மாநிலம் ஏன் இந்திய அளவில் மொத்த மாநில கொள்முதல் உற்பத்தியில் (GSDP) ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது ?

7) ஒரு வேளை, இந்த புள்ளிவிவரங்கள் எல்லாமே உங்களை நிராகரிக்க, காங்கிரஸ் அரசாலும், எதிர்ப்பாளர்களாலும் செய்யப்படுகிறது என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம். ஒரு மாநிலம் முன்னேறியிருந்தால், அதனுடைய தனிநபர் வருமானமும் அத்தோடு சேர்ந்து மேலெழுந்திருக்க வேண்டுமே. ஏன் குஜராத்திகளின் சராசரி தனி நபர் வருமானம், நீங்கள் பறை சாற்றும் அளவிற்கு உயரவில்லை ?

8) குஜராத்தின் கல்வி சூழல் பற்றி அர்விந்த் கேட்டிருக்கிறார். அதிலும் இரண்டு கேள்விகள் இருக்கிறது.

8a) ஏன் பள்ளி admission களில் நகரங்களிலும், கிராமங்களிலும் இஸ்லாமிய குழந்தைகள் குறைவாக இருக்கிறார்கள் ?

8b) அப்படி குறைவாக இருக்கும் குழந்தைகளே கூட, ஏன் பத்தாவது தாண்டி குஜராத்தில் படிக்க மாட்டேன் என்கிறார்கள் ? உள்ளடக்கிய வளர்ச்சி என்று தானே நீங்கள் முன்வைக்கிறீர்கள். உள்ளடங்கிய வளர்ச்சியில் இவை அத்தனையும் வருமே. ஏன் இந்த தளர்ச்சி ?

9) நவ்ஸ்ரஜன் அறிக்கையின்படி (1600 கிராமங்கள்) பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித்துக்களின் நிலை கிராமங்களில் மிக மோசமாக இருக்கிறது. தீண்டாமை சர்வ சாதாரணமாகவும், ‘இரட்டை குவளை’ முறை பரவலாகவும் இருந்து வருகிறது. ஐந்தில் ஒரு தலித் குழந்தை போலியோ சொட்டு மருந்து தரப்படாமல் தீண்டாமை கொடுமையால் நிராகரிக்கப்படுகிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா சொல்லுகிறது. meritocracy முதல்வரான உங்கள் 12 ஆண்டுகால ஆட்சியில் இந்த அவலம் ஏன் இன்னும் தொடர்கிறது ?

10) 2002-க்கு பின் மதக்கலவரமே நடக்கவில்லை என்று நீங்களும், உங்களுடைய ஆதரவாளர்களும் மார் தட்டுகிறார்கள். (2006 வதோதரா கலவரங்களை ஒரு வாதத்துக்கு கணக்கிலெடுக்காமல் போனாலுமே கூட..) சமத்துவமான பயமில்லாத ஆட்சி நடக்கிறது என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் ஏன் ghettoisation விரைவாக கடந்த பத்தாண்டுகளில் வளர்ந்திருக்கிறது ? ஏன் உங்கள் அரசு அகமாதபாத், பரோடா, வதோதரா சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களை சென்சிடிவ் இடங்களாக கணித்து அங்கே இந்து முஸ்லீமுக்கோ, முஸ்லீம் இந்துவுக்கோ வீடுகளை விற்கமுடியாத சூழலை உருவாக்கி கண்காணித்துக் கொண்டிருக்கிறது ?

11) Less Government. More Governance என்பதை தாரக மந்திரமாக வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் ஏன் கிட்டத்திட்ட பத்தாண்டு காலமாக லோக் ஆயுக்தாவை குஜராத்தில் உள்ளே நுழைய விடாமல் செய்தீர்கள் ?

12) 2002 கலவரத்தில் இறந்த இஸ்லாமியர்கள், காருக்கு அடியில் மாட்டி இறந்த நாய்கள் போன்றவர்கள் என்றாலுமே கூட, அவர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தீர்கள். கே.பி. கில்லின் புத்தகம் உங்களை நியாயவாதியாக சித்தரிக்கிறது. ஒரு வாதத்துக்கு நீங்கள் நேர்மையானவர் என்று ஒத்துக் கொள்கிறேன். அப்படியிருக்கும் பட்சத்தில், நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை திருமதி. மாயா கொத்தானியை உங்கள் அமைச்சரவையிலேயெ வைத்திருக்க வேண்டிய அவசியமென்ன ? உங்களுடைய நியாய தராசு, படுகொலைகளை முன்னின்று நடத்திய ஒரு அமைச்சருக்காக ஒரு பக்கம் ஏன் வளைந்தது ?

13) டாடா நேனோ வின் தொழிற்சாலையை ஒரு எஸ்.எம்.எஸ்ஸில் வங்காளத்திலிருந்து குஜராத்திற்கு இடம் மாற்றினீர்கள் என்று உங்களுடைய பெருமையை ஊரே மெச்சுகிறது. உங்கள் அரசு ஆவணங்களின் படி, சனானந்தில் 1100 ஏக்கர் நிலம் டாடா மோட்டார்ஸுக்கு சதுரமீட்டர் ரூ.900 என்கிற அளவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனுடைய சந்தை விலை ரூ.10000/சதுர மீட்டர். இதனால் குஜராத் அரசுக்கு 33,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று எல்லா தகவல்களும் உறுதிப்படுத்துகின்றன. 2,000 கோடி ரூபாய் ப்ராஜெக்ட்டிற்கு 30,000 கோடி ரூபாயை இழப்பதற்கு பெயர் நிர்வாக சாதுர்யமா ?

13 A) ஒரு வேளை இந்த 30,000 கோடி ரூபாய் என்பது notional loss தான் revenue loss என்று நீங்கள் சமாளித்தால், இதே அளவுகோலில் அல்லவா 2ஜியின் யூக பேர notional இழப்பையும் பார்க்க வேண்டும். அது ஊழல் என்றால், இது என்ன ?

14) 2003-இல் திட்டமிடப்பட்ட சுஜலாம் சுபலாம் யோஜனா நீர் வரத்து திட்டம் 2012 வரை முடியவேயில்லை. 2005-இல் முடிந்திருக்க வேண்டிய திட்டமிது. ஆட்சி மாற்றத்தால் முடிக்காமல் போனது என்று கதை விட முடியாது. மூன்று முறை நீங்கள் தான் ஆட்சி செய்திருக்கிறீர்கள். ரூ. 6,237 கோடி ரூபாய் திட்டத்தில் 500 கோடி ரூபாய்கள் வரை ஊழல் நடந்திருக்கிறது என்று பப்ளிக் அக்கவுண்ட்ஸ் கமிட்டி எழுதிய அறிக்கையே ஏன் நீங்கள் சட்டசபையில் தாக்கல் செய்யவிடவில்லை ?

15) 2002-இல் வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ.கூ அரசு சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டினை அனுமதிக்கலாம் என்று சொல்லியிருந்தது. 2004-இல் ஐ.மு.கூ அரசு வந்தவுடன் பாஜகவின் நிலை மாறியது. அன்றையிலிருந்து நீங்கள் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக பேசுகிறீர்கள். ஆனால் உங்களுடைய பொருளாதார பார்வையில் அன்னிய முதலீட்டினை ஆதரிப்போம் என்று சொல்கிறீர்கள். ஏன் இந்த பல்டியடித்தல் ? காங்கிரஸ் அரசு அனுமதித்தால் அது உள்நாட்டு பொருளாதாரத்தை சீரழிக்கும், நீங்கள் அனுமதித்தால் வளம் கொழிக்கும் என்பது என்ன லாஜிக் ?

16) திட்ட கமிஷன் அறிக்கை, சராசரி இந்தியர் கிராமத்தில் ரூ.33 ஒரு நாளைக்கு சம்பாதித்தால் வறுமைக்கோட்டு வெளியே இருக்கிறார் என்று முன் வைத்தப்போது அதை முழுமையாக நிராகரித்த கட்சி உங்களுடையது. உங்கள் அரசின் அறிக்கை சராசரி குஜராத்தி கிராமத்தில் ரூ 10.80 ஒரு நாளைக்கு சம்பாதித்தால் வறுமைக்கோட்டுக்கு வெளியே இருக்கிறார் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லுகிறது. இது தான் நீங்கள் குஜராத்தில் வறுமையை புள்ளிவிவரத்தில் ஒழித்த முறையா ? இதை தான் வளர்ச்சி என்று முன்வைக்கிறீர்களா ?

17) உங்களுடைய வலதுகரமான அமித் ஷா ஒரு பெண்ணை போலிஸ் உதவியுடன் மாநிலங்கள் தாண்டி பின் தொடர்ந்திருக்கிறார். அந்த பெண்ணின் அப்பா தானே முன்வந்து உங்களிடம் உதவி கேட்டதாகவும், அதற்காக நீங்கள் செய்ததாகவும் சொல்கிறார். இதில் ஏதாவது நம்பும்படியாக இருக்கிறதா ? இது உதவியென்று வைத்துக் கொண்டால், இதை மாநில காவல்துறை அல்லவா கண்காணிக்க வேண்டும். ஏன் ஒரு வலதுகரம், உங்களுக்கு அப்டேட், போலிஸ் கமிஷ்னர் கெஞ்சல் என்று விரிகிறது ?

18) குஜராத் 2002 கலவரங்களை 72 மணி நேரத்தில் அடக்கி அமைதி காத்தேன் என்று போகிற இடங்களிலெல்லாம் பறை சாற்றுகிறீர்கள். அதற்கு பின்பு குஜராத்தில் மதகலவரங்களே நடக்கவில்லை என்று சத்தியம் செய்கிறார்கள் உங்களுடைய ஆதரவாளர்கள். இவையிரண்டும் உண்மையாக இருக்கும்பட்சத்தில் பிப். 27, பிப் 28, மார்ச் 1, 2002-இல் மட்டும் தான் படுகொலைகள் நடந்திருக்கவேண்டும். அதற்கு பின் குஜராத்தில் பூரண அமைதி நிலவியிருக்க வேண்டும். 2002 ஆன்லைன் நாளிதழான ரீடிப்பில் வந்திருக்கின்ற செய்திகள்

Apr 16,2002: Three Killed, nine hurt in Ahmedabad violence
Apr 17, 2002: Four killed in fresh violence in Gujarat
Apr 22, 2002: Six killed in fresh violence in Ahmedabad
Apr 23, 2002: Toll in renewed violence rises to 29 - PTI
Apr 26, 2002: Two killed as violence rocks: Ahemadabad: PTI
Apr 27, 2002: 1 killed, 8 hurt in Baroda violence: PTI

இவற்றை எந்த கணக்கில் கொண்டு வருவது ? மதக்கலவரமா இல்லை வாய்க்கால் வரப்பு தகராறா ?

19) மதம் மற்றும் இறைநம்பிக்கை சார்புகள் என்பவை தனிநபர் சார்ந்தவை. அரசியல் சாசன ஆர்டிக்கிள் 25 இந்த சுதந்திரத்தை தனிநபர்களுக்கு வழங்குகிறது. ஆனால் குஜராத்தில் மட்டும் ஏன் Gujarat Freedom of Religion Act இதை தடை செய்கிறது. மதம் மாற வேண்டுமானால் எதற்காக அரசாங்கத்தின் அனுமதியைப் பெற வேண்டும் ?

20) ஒரு அப்பாவி தந்தை கேட்டதற்காக அவருடைய மகளை உங்களின் வலது கரமான அமித் ஷாவை வைத்து ‘கண்காணித்து’ அந்த குடும்பத்தின் மானத்தை காத்தீர்கள். ஆனால், ஏன் குஜராத் புள்ளிவிவரங்கள் பெண்களுக்கு எதிராக இருக்கின்றன. 2012-13 தகவல் சொல்வது: 49.22% வன்புணர்வுகள், 30% பாலியல் அத்துமீறல்கள், 21.83% குடும்ப வன்முறை, 74.49% வரதட்சணை இறப்புகள் மற்றும் ஒட்டுமொத்தமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 39% அதிகரித்து இருக்கின்றன. நீங்கள் உங்களுக்கு ஒத்து ஊதும் தகப்பன்களின் பெண்களை மட்டும் தான் கண்காணித்து காப்பீர்களா ? மற்ற பெண்கள் எல்லாம் கிருஷ்ண பரமாத்மாவை தான் நம்ப வேண்டுமா ?

கேள்விகள் இன்னும் வரும்....
 

Thursday, 30 January 2014

மாநில மொத்த உற்பத்தியும் (GSDP) மோடியாரின் வளர்ச்சி பலூன் வெடிப்பும்

மோடியின் புளுகு மூட்டைகளை தோழர் நரேன் ராஜகோபாலன் ஆதாரத்தோடு நிரூபித்து தொடர்ந்தது எழுதி வருகிறார்...மோடி குறித்தான ஊடகங்களின் பம்மாத்துகளுக்கும் (Paid News), சம்பளத்துக்கு ஆள் வைத்து, இணையத்தில் பரப்பப்படும் பொய்யான செய்திகளுக்கும் இது போன்ற ஆதாரபூர்வமான கட்டுரைகள் சரியான சாட்டையடி.....நண்பர்கள் இதுபோன்ற கட்டுரைகளை முழுதும் படித்து, தங்களால் இயன்றளவு பரப்பவேண்டும்....
-------------------------------------------------------------------------------------------------
மாநில மொத்த உற்பத்தியும் (GSDP)
மோடியாரின் வளர்ச்சி பலூன் வெடிப்பும்
(Long Read)
- Narain Rajagopalan

ஒரு நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியினை (பொருட்கள் மற்றும் சேவைகளை )(Gross Domestic Product - GDP) வைத்து தான் அந்த நாடு முன்னேறியிருக்கிறதா. தேங்குகிறதா. அல்லது பின்னேறுகிறதா என்பதை சொல்ல முடியும். இதையே ஒரு மாநிலத்துக்காக சுருக்கினால் அது தான் GSDP - Gross State Domestic Product. ஒரு மாநிலத்துக்குள் ஒரு வருடத்தில் உருவாகும் பொருட்கள் & சேவைகளின் மொத்த பயன்பாட்டை பணமாக அளவீடுவது தான் இது.

உ.தா போன வருடம் GSDP ரூ.100 என்று வைத்துக் கொண்டால், இந்த வருடத்தில் GSDP ரூ.110 ஆக மாறியிருந்தால், மாநிலம் வளர்ந்துக் கொண்டிருக்கிறது. பொருட்களும், சேவைகளும் பெருகுகிறதென்று பொருள். மாறாக இந்த வருடம் ரூ.90 என்றால் தேக்கமோ, மந்தமோ, தொய்வோ ஏற்பட்டிருக்கிறது. 10% குறைவான பொருட்கள் + சேவைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். இந்த அடிப்படைத் தெரிந்தால் போதும். இந்தியாவில் ப்ளானிங் கமிஷன் இதை அளவிட ஆறு காரணிகளை முன்வைக்கிறது.

விவசாயம் மற்றும் அதற்கிணையான தொழில்கள் (Agriculture and Allied)
நேரடி விவசாயம் (Agriculture)
தொழில்துறை (Industry)
சுரங்கம் மற்றும் குவாரிகள் (Mining and Quarrying)
உற்பத்தித் துறை (Manufacturing)
சேவைகள் (Services)

இந்த ஆறு காரணிகளின் வருடாந்திர உயர்வு / தாழ்வில் தான் ஒரு மாநிலத்தின் ஏற்றமும் / இறக்கமும் இருக்கிறது.

இந்தியாவின் அதிகமான வருடாந்திர வளர்ச்சிப் பெற்ற மாநிலம் - குஜராத்
இந்தியாவின் வேகமான தொழில்துறை மாநிலம் - குஜராத்
சிறு சிறு கால்வாய்களை இணைத்ததன் மூலம் விவசாயத்திற்கு அதிகமான பங்களிப்பை அளித்துள்ள மாநிலம் - குஜராத்
24 x 7 மின்சாரமிருப்பதால், அதிகமான உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்கள் மையம் கொள்ளும் மாநிலம் - குஜராத்

மேற்சொன்னவை அத்தனையுமே குஜராத் அரசாலும், வெவ்வேறு ஊடகங்களாலும் முன் வைக்கப்படும் செய்திகள். இதில் எவ்வளவு தூரம் உண்மைகள் இருக்கிறது ?

நான் ப்ளானிங் கமிஷனின் ஒரு டேட்டா டேபிளை முன்வைக்கிறேன். இது 2004-05 விலைவாசியை அடிப்படையாகக் கொண்டு 2012-13 வரைஇந்த ஆறு காரணிகளுக்கான வளர்ச்சியை மாநிலம் தோறும் கணித்திருக்கிறது. மாண்டேக் சிங் அலுவாலியா வேண்டுமென்றே குஜராத்துக்கு குறைவான மதிப்பீடுகள் போடுவார் என்று நினைத்து இதைப் படித்தால், சாரி இப்போதை கிளம்பிவிடுங்கள். உங்களோடு பேச முடியாது. நேரடியாக மத்திய அரசின் கீழ் வந்தாலும், ப்ளானிங் கமிஷன் சி ஏ ஜி, ரிசர்வ் வங்கி, செபி மாதிரி தனியான ஒரு அமைப்பு. இதனுடைய டேட்டாவினை அடிப்படையாக வைத்து தான் பேச முடியும்.

இப்போதைக்கு குஜராத், ராஜஸ்தான், பீகார், ஆந்திரா, தமிழகம் இந்த ஐந்து மாநிலங்களையும் ஓப்பீட்டுக்கு எடுத்துக் கொள்வோம். (குஜராத்தினுடைய 2012-13 டேட்டா ப்ளானிங் கமிஷனிலேயே இல்லை. ஆகவே நாம் 2011-12 வரைக்குமான வளர்ச்சி / தேய்வு ஒப்பிட்டினை மட்டும் செய்வோம்)

பார்க்க Datasheet 1

மஞ்சள் பட்டை - குஜராத்
நீலப் பட்டை - பீகார்

2004-05 விலைவாசியில் குஜராத் ஆரம்பிப்பது 203,373 கோடிகள்; பீகார் ஆரம்பிப்பது 77,781 கோடிகள்.

2011-12 முடிவில் 2004-05 விலைவாசியில் குஜராத் 398,884 கோடிகள்; அதாவது எட்டு வருடத்தில் ஆரம்பித்ததிலிருந்து சற்றேறக் குறைய இரண்டு மடங்கு (406,000 கோடிகள் தேவை. சல்தா ஹே!)

ஆனால் பீகார் இதே காலகட்டத்தில் செய்திருப்பது 246,995 கோடிகள்; எட்டு வருடத்தில் மூன்று மடங்கிற்கும் மேலான வளர்ச்சி.

இந்த எட்டு வருடங்களில் பீகார் வெறும் 77,000 கோடிகளில் ஆரம்பிக்கிறது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்வோம். குஜராத் ஆரம்பிப்பது அதைப் போல இரண்டு மடங்கிற்கும் மேலே. ஆனால் எட்டு வருடங்கள் கழித்து வளர்ச்சி விகிதத்தை சராசரியாய்ப் பார்த்தால் வருவது இது தான்

குஜராத் - 10.13%
பீகார் - 18.84 %

அந்த ஃக்ராப்பினைப் பார்த்தால் 2005-06-இல் மட்டும் தான் பீகாரின் வளர்ச்சி விகிதம் (6.05%) குஜராத்தை (14.75%) விட பின் தங்கியிருக்கிறது. அங்கிருந்து எடுக்கிறது வேகம். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒரு முறையும் பீகார் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்திற்கு குறையவே இல்லை. இதில் நான்கு வருடங்களில் வளர்ச்சி விகிதம் (போன வருடத்தோடு ஒப்பிடுகையில்) 20%+ ஆனால், குஜராத் ஒற்றை இலக்க வளர்ச்சியோடு மூன்று வருடங்களையும், 2010-11-இல் முட்டி மோதி ஜஸ்ட் பாஸ் நிலையில் இரட்டை இலக்க வளர்ச்சியோடு நிற்கிறது. ஆக எட்டாண்டுகள் மோடியின் ஆட்சியின் கீழ், இந்திய சராசரியை விட குஜராத் அதிகமாக வளர்ந்திருக்கலாம். ஆனால், பீமாரு என்று நக்கலடிக்கப்பட்ட மாநிலங்களில் முதல் மாநிலமான பீகாரின் வளர்ச்சியை தொடக் கூட முடியவில்லை.

இது தான் குஜராத் வளர்ச்சி மாடல். இந்த மாடலை தான் அவர் இந்தியா முழுமைக்கும் முன் வைக்கிறார். There is absolutely no reasoning for why we should go for this model, when statistically it is very clear that the model has its limitations & issues. It is vividly clear about governance deficit & administrative inability to take the State to growth trajectory sustain-ably.

இந்த க்ராபிலேயே உங்களால் ராஜஸ்தான், ஆந்திரா, தமிழக விவரங்களையும் பார்க்க முடியும். தமிழகத்தில் இந்த எட்டாண்டுகளில் மூன்று ஆட்சிகள் (2005-06 அதிமுக / 2006 - 11 திமுக / 2011 - 12 அதிமுக மீண்டும்) மாறியிருக்கின்றன. வழமையாய் ஆட்சி மாறினால் திட்டங்கள் தொய்வுறும். அப்ரூவல்கள் நிற்கும். முந்தின ஆட்சி முன்வைத்த திட்டங்களை ஆளும் கட்சி எடுத்து நடத்த யோசிக்கும். இதெல்லாம் நிஜத்தில் நடப்பவை. நடந்தவை. ஆனால் இத்தனையும் தாண்டி, தமிழகம் புலிப்பாய்ச்சலில் முன்னேறியிருக்கிறது. தமிழகத்தின் சராசரி எட்டாண்டு கால வளர்ச்சி (ஒப்பீட்டளவில்) குஜராத்தை விட அதிகம் (10.30% சராசரி). ஆக இனிமேல் தமிழகத்தையும், குஜராத்தையும் ஒப்பிடத் தேவையில்லை. ஏனென்றால் தமிழகத்தின் ஆரம்ப 2004 -05 அடிப்படையே 219,003 கோடிகள், குஜராத்தை விட 16,000 கோடிகள் அதிகமாய் ஆரம்பிக்கிறது. TN has entered into the Developed State league in alignment with Maharastra & Delhi.

ஆக கடந்த எட்டாண்டுகளில், டெக்னிகலாக இந்தியாவின் வேகமாக வளர்ந்த மாநிலம் - பீகார்.

குஜராத்தில் வளர்ச்சி பரவலாக நடக்கவில்லை. மேலும் கீழுமாக தான் போயிருக்கிறதேயொழிய சீரான வளர்ச்சி இல்லை. ஆகவே குஜராத் இந்தியாவின் நம்பர் 1 வளர்ச்சி பெற்ற மாநிலம் என்று இனிமேல் சொல்லாதீர்கள். They have done an okay job for growth, not spectacular sustainable growth traction. ஆக அதிகமான வருடாந்திர வளர்ச்சிப் பெற்ற மாநிலம் என்கிற claim இத்தோடு முடிந்தது.

முதலும் முக்கியமுமான விக்கெட் காலி.

ஒப்பீட்டளவில் இந்த இரண்டு மாற்றுக் கருத்துக்கள், மாற்று வளர்ச்சி மாடல்கள் கொண்ட மாநிலங்களை (குஜராத் / பீகார்) எடுத்துக் கொண்டு ஒவ்வொரு காரணியாக அலசுவோம்.

பீகாரில் மின்சாரம் 60% இருந்தால் பெரிய விஷயம். சரியான தரவுகள் இல்லை. குஜராத் பீற்றிக் கொள்வது near 100% மின்சாரம். இதை ஏற்கனவே நாம் உடைத்து விட்டோம். ஆனாலும் ஒரு வாதத்துக்கு இப்போதைக்கு குஜராத் சொல்வதையை அடிப்படையாகக் கொள்வோம்.

பார்க்க Datasheet 2

நீலப்பட்டை - விவசாயம் + சார்புகள்
ஆரஞ்சுப் பட்டை - நேரடி விவசாயம்
பிங்க் பட்டை - தொழில்துறை
பச்சைப் பட்டை - உற்பத்தித் துறை

முதலில் பீகாரை எடுத்துக் கொள்வோம். அவர்கள் தானே பரிதாபமான நிலையில் இருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன. விவசாயம் + சார்புகளிலும், நேரடி விவசாயத்திலும் கிட்டத்திட்ட மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறார்கள் (24,530 Vs 65,102 / 20,673 Vs 58,113) எட்டாண்டுகளில் ஆட்சியமைப்பும், அரசாங்கமும், அரசும் ஒழுங்காக இல்லாமல் இது சாத்தியமேயில்லை. இந்த எட்டாண்டுகளில் 2007-08 / 2009 -10 காலக்கட்டங்களில் மட்டுமே முந்தைய ஆண்டை விட கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு ஈடாக வெறித்தனமாக முன் / பின் ஆண்டுகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு ஈடான காலக்கட்டத்தில் குஜராத்தில் என்ன நடந்திருக்கிறது ?

விவசாயம் + சார்புகள் விஷயத்தில் 60% முன்னேறியிருக்கிறார்கள் (32,706 Vs 51,525) இதிலேயே மூன்று வருடங்களில் நடுவில் சுணக்கமிருக்கிறது.

நேரடி விவசாயத்தில் சரி அடி வாங்கியிருக்கிறார்கள். ஜான் ஏறினால் கி.மீ சறுக்கியிருக்கிறது. எட்டாண்டுகளின் வளர்ச்சி 70% மட்டுமே. மூன்றாண்டுகள் இங்கேயும் மரண அடி. இந்த காலகட்டங்களில் குஜராத் அரசு இந்த வருடங்களை (2006 - 07 / 2008 - 09 / 2009 -10) Drought ஆக அறிவித்திருக்கிறதா என்று கெஜட்டில் பார்க்க வேண்டும். ஆனால் வளர்ச்சி சீராக இல்லை என்பதை டேட்டா சொல்கிறது.

தொழில் துறை: குஜராத் அரசு போகிற இடங்களெல்லாம் பறை சாற்றும் கோஷம். Fastest growing Industrialized State in India.
2004 - 05 - 89,321
2011 - 12 - 163,826

அட்டகாசம், எட்டாண்டுகளில் கிட்டத்திட்ட இரண்டு மடங்கு (90% வளர்ச்சி) மின்சாரம் செய்திருக்கும் வேலையாகக் கூட இருக்கலாம். மின்சாரமே இல்லாத டூபாக்கூர் ஊரான பீகார் எப்படி தொழில்துறையில் பயணித்திருக்கிறது ?

2004 - 05 - 10,706
2011 - 12 - 48,212

இந்த டேட்டாவினை முதல்முறையாகப் பார்த்தப் போது மிரண்டு போய் ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை. எட்டாண்டுகளில் 400% வளர்ச்சி. நிதிஷ் குமார் இதை ஒரு தனியார் நிறுவனத்தில் செய்திருந்தால் இந்நேரம் நிறுவனம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடி தள்ளியிருக்கும்.

இத்தனைக்கும் ஊரிலிருக்கக் கூடிய எல்லா disadvantage-களும் இருக்கக்கூடிய மாநிலம் பீகார். கரெண்ட் கிடையாது. முழுமையான சாலைகள் கிடையாது. திறன் வாய்ந்த பணியாளர்கள் கிடையாது. இதையெல்லாம் வைத்துக் கொண்டே இந்த மனிதர் இதை செய்திருக்கிறார் என்றால் ஒரளவுக்கு நல்ல கட்டமைப்பும், வசதிகளும் இருந்தால் பீகார் முன்னணி மாநிலமாக ஏன் மாறாது ?

கட்-ஆப்ல 95% வாங்கினவன் பாஸ் பண்றது பெரிய விஷயமே இல்லை. 40% பார்ட்டர் பாஸ் பண்ணவன் பர்ஸ்ட் கிளாஸ் எடுக்கிறது தான் சாதனை. அந்த வகையில் பீகாரில் எட்டாண்டுகளில் நடந்திருப்பது அசாத்தியமான administrative சாதனை. எல்லாத் தளங்களிலும் நிர்வாகமும், தெளிவும் இருந்தாலேயொழிய அந்த மாதிரியான ஒரு மாநிலத்தை இப்படி தலைகீழாகப் புரட்டிப் போடவே முடியாது.

இறுதியாய் மோடி அடிக்கடி சொல்லும் தொழிற்சாலைகள் அடங்கிய உற்பத்தித் துறை.

குஜராத்துக்கும் பீகாருக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. குஜராத்தின் ஆரம்பத்தில் பத்தில் ஒரு பங்கு கூட பீகாரில்லை (G: 55,443; B: 4,379)

எட்டாண்டுகளில் குஜராத் மேலேறி சாதித்திருப்பது 112,521 அதாவது கிட்டத்திட்ட இரண்டு மடங்கு. மறுக்க முடியாத சாதனைதான்.

ஆனால் ஒன்றுமேயில்லாத, கரண்ட்டில்லாத ஒரு மாநிலம் அதே காலக்கட்டத்தில் நான்கு மடங்கு தாண்டியிருக்கிறது (12,705)

இவை வெறும் எண்கள் அல்ல. இதற்கு பின் இரண்டு மாநில தலைமைகளின் ஆளுமையும், நிர்வாகத் திறமையும், பங்களிப்பும் இருக்கிறது.

உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். இத்தனைக்கு பிறகும், மோடி முன்வைக்கும் புகழாரங்களுக்கு அவர் தகுதியானவர் தானா ? தகுதியானவர்கள் எல்லாம் சத்தமேப் போடாமல் சாதித்துக் கொண்டிருக்கும்போது, இந்திய ஒப்பீட்டளவில் பெரியதாய் leap frogging எதுவுமே செய்யாத ஒருவரை எப்படி ஏற்றுக் கொள்ள சொல்கிறீர்கள் ?

//இந்தியாவின் வேகமான தொழில்துறை மாநிலம் - குஜராத்
சிறு சிறு கால்வாய்களை இணைத்ததன் மூலம் விவசாயத்திற்கு அதிகமான பங்களிப்பை அளித்துள்ள மாநிலம் - குஜராத்
24 x 7 மின்சாரமிருப்பதால், அதிகமான உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்கள் மையம் கொள்ளும் மாநிலம் - குஜராத்//

இனி நீங்கள் முடிவு செய்துக் கொள்ளுங்கள். இந்த வாசகங்களில் உண்மை இருக்கிறதா அல்லது தன்னை பட்டவர்த்தனமாக முன்னிறுத்திக் கொள்ளும் ஒரு அதிகாரவெறி பிடித்த ஆளுமையின் குரல் இருக்கிறதா என்பதை!

Sunday, 10 November 2013

குஜராத் 'உண்மை' - சராசரி ஆயுள் காலம் !

'Truth' about Life Expectancy in Gujarat :





















Life Expectancy / சராசரி ஆயுள் காலம் :
UK  - 81
Canada  - 81
USA  - 79
UAE  - 77
Saudi  - 75
Singapore -82

1) Kerala 74.2
     ....
5) Tamil Nadu 68.9
   .
   ..
   ....
   .....
   ......
8) Gujarat 66.8



Evidence / ஆதாரம் :
http://data.worldbank.org/indicator/SP.DYN.LE00.IN
http://data.gov.in/dataset/selected-indicators-human-development-major-states
http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_life_expectancy
http://www.viduthalai.in/headline/68941-2013-10-16-10-42-23.html

குஜராத் 'உண்மை' - வறுமைக் கோடு !

'Truth' about Poverty Line in Gujarat:




















Poverty Ratio / வறுமை விகிதம் :
USA - N/A
UK - N/A
Canada - N/A
UAE - N/A

1) Andaman & Nicobar - 0.4 %
2) Puducherry - 1.2 %
3) Lakshwadeep - 6.8 %
    .....
    ........
6) Jammu & Kashmir - 9.4%
7) Himachal Pradesh - 9.5%
8) Kerala - 12%
11) Punjab - 15.9%
13) TamilNadu - 17.1%
      .
      ...
      .....
      .......
      .........
      ............
20) Gujarat - 23% - 136 Lakhs - 1.36 Crores


குஜராத் 'உண்மை' - கல்வி நிலை !

'Truth' about Education in Gujarat:

























Literacy Rate / எழுத்தறிவு விகிதம்:
United States - 99%
United Kingdom - 99%
Canada - 99%

1) Kerala - 93.91%
3) Mizoram - 91.58%
4) Tripura - 
    ....
    ........
    ............
    ...............
    ...................
18) Gujarat - 79.31%



Evidence / ஆதாரம் :
http://censusindia.gov.in/2011census/censusinfodashboard/index.html

http://populationcommission.nic.in/content/933_1_LiteracyRate.aspx

குஜராத் 'உண்மை' - குழந்தைகள் இறப்பு விகிதம் !

'Truth' about Gujarat - Infant Mortality Rate























Infant Mortality Rate / குழந்தைகள் இறப்பு விகிதம் :
Singapore - 2
UK - 4
USA - 6
Qatar - 6
UAE - 7
Kuwait - 10

Kerala - 12

Tamil Nadu - 22
Gujarat - 41


Evidence / ஆதாரம் : 
http://data.worldbank.org/indicator/SP.DYN.IMRT.IN

http://data.gov.in/dataset/state-wise-infant-mortality-rate


http://www.viduthalai.in/headline/68941-2013-10-16-10-42-23.html 


குஜராத் 'உண்மை' - சராசரி தனி நபர் வருமானம் :

'Truth' about Gujarat Per Capita Income :



Per Capita Income / சராசரி தனி நபர் வருமானம் :
Canada - 52,219 $ = 31.9 Lakhs Rs.
Singapore - 51,709 $ = 31.5 Lakhs Rs.
USA - 49,965 $ = 30.5 Lakhs Rs.
UK - 38,514 $ = 23.5 Lakhs Rs.
UAE - 39,058 $ = 23.8 Lakhs Rs.
Saudi - 25,136 $ = 15.2 Lakhs Rs.

1) Delhi - 1.73 Lakh ( Now : 2.01 Lakhs  Rupees)
2) Goa - 1.67 Lakh
3) Chandigarh - 1.42 Lakh
4) Sikkim - 1.24 Lakh
5) Haryana - 1.08 Lakh
6) Puducherry - 1.02 Lakh
7) Maharashtra - 95,339 Rs.
8) Gujarat - 89,668 Rs.
9) TamilNadu - 88,697 Rs. ( Now : 98,550 Rupees )


Evidence / ஆதாரம் :

குஜராத் 'உண்மை' - மொத்த உள்நாட்டு உற்பத்தி !

'Truth' about Gujarat Gross Domestic Product ( GDP ) : 

Gross Domestic Product ( GDP ) / மொத்த உள்நாட்டு உற்பத்தி :
Saudi Arabia -  5.1 %
UAE           -  4.4 %
India           -  3.2 %
USA             -  2.2 %
Canada         -  1.7 %
Singapore     -  1.3 %
UK             -  0.3 %

Gross State Domestic Product ( GDP ) / மொத்த மாநில உற்பத்தி :
1) Bihar - 13.26 %
2) Madhya Pradesh - 11.81 %
3) Delhi - 11.34%
4) Arunachal Pradesh - 10.84%
5) Mizoram - 10.09%
6) Goa - 9.39%
7) Jharkhand - 8.92%
8) Gujarat - 8.53%


Evidence / ஆதாரம் :
http://data.worldbank.org/indicator/NY.GDP.MKTP.KD.ZG/countries ( Year : 2012 )

http://planningcommission.nic.in/data/datatable/0205/databook_comp0205.pdf ( Year : 2011-2012 , Page No : 133 )

http://pbplanning.gov.in/pdf/Statewise%20GSDP%20PCI%20and%20G.R.pdf

Monday, 4 November 2013

படேலுக்கு இணையாக மோடியை முன்னிறுத்துவது மோசடியானது : மகாத்மா காந்தியின் பேரன் கடும் விமர்சனம்


புதுதில்லி, நவ. 4 - சர்தார் வல்லபாய் படேல் தற்போது உயிரோடு இருந்திருந்தால், முஸ்லிம்களுக்கு எதிராக நரேந்திர மோடி விஷம் கக்கி வருவதைப் பார்த்து மிகவும் வேதனையடைந்திருப்பார் என்று நரேந்திரமோடியின் மதவெறி குறித்து மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் நரேந்திரமோடியை ஒரு போதும் தனது தத்துவார்த்த வாரிசாக சர்தார் வல்லபாய் படேல் ஏற்றுக்கொண்டிருக்கவே மாட்டார் என்றும் ராஜ்மோகன் காந்தி கூறினார். மகாத்மா காந்தியின் பேரனான ராஜ்மோகன் காந்தி, நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும் இந்திய விடுதலைக்காக போராடியவருமான சர்தார் வல்லபாய் படேலின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎன்என் ஐபிஎன் தொலைக் காட்சியில் கரண் தாப்பர் நடத்தும் `டெவில்ஸ் அட்வகேட்’ எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜ்மோகன் காந்தி, வல்லபாய் படேலுக்கு இணையாக - அவரது வாரிசாக தன்னைத்தானே மோடி புகழ்ந்துகொள்வதும், அவரது பாஜக ஆதரவாளர்கள் கொண்டாடுவதும் எந்தவிதத்திலும் பொருத்தமற்றது; இது முற்றிலும் படேலை அவமரியாதை செய்வதும் ஆகும் என்று கூறினார்.

2002ம் ஆண்டு குஜராத்தில் மிகப்பெருமளவில் மதவெறிப் படுகொலைகள் நடந்தபோது, மோடி தனது `ராஜதர்மத்தை’ நிறைவேற்றிவிட்டார் என்று கூறி அப்போதைய பிரதமர் வாஜ்பாய், மோடியை புகழ்ந்தார். அப்போது அவர்கள் படேலைப் பற்றி எண்ணிக்கூடப் பார்க்கவில்லை என்று ராஜ்மோகன் காந்தி சாடினார். “ஒரு வேளை படேல் தற்போது உயிரோடு இருந்தால் மிகவும் வருத்தமடைந்திருப்பார். வேதனையும் கவலையும் அடைந்திருப்பார்.

இந்தியாவின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவராக மட்டுமல்ல; குஜராத்திலிருந்து வந்தவர் என்ற முறையிலும் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த தாக்குதலைத் தடுக்க முடியாமல் போய்விட்டதே என்று கவலைப்பட்டிருப்பார் என்றே நினைக்கிறேன்“ என்றும் ராஜ்மோகன் காந்தி மேற்கண்ட நிகழ்ச்சியில் கூறினார்.“படேலுக்கு இணையாக மோடியை முன்வைப்பது முற்றிலும் மோசடியானது. வேண்டுமானால் ஒரே ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக மட்டும் அப்படி ஒப்பிட்டுக் கொள்ளலாம்.

சர்தார் வல்லபாய் படேல் என்பவர் மகாத்மா காந்தியின் சீடராக இருந்தவர்; மகாத்மா காந்தி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற மாபெரும் குடைகளின் கீழ் வளர்ந்தவர். மோடி என்பவர் ஆர்எஸ்எஸ் என்ற குடையின் கீழ் வளர்ந்தவர். இப்படி வேண்டுமானால் ஒப்பிட்டுப் பேசலாம்”என்றும் ராஜ்மோகன் காந்தி கூறினார்.“மற்றொரு அம்சத்தையும் இருவருக்கும் இடையில் ஒப்பிடலாம். அது என்னவென்றால் படேல் என்ற தனி மனிதர் எப்போதுமே ஒரு குழுவை இயக்குபவராக, கூட்டு உணர்வை ஏற்படுத்துபவராக இருந்தார்; அவரது வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் தன்னை முன்னிறுத்தியதில்லை; எப்போதுமே இதர மக்களுக்காகவே பாடுபட்டவர்.

மோடியைப் பொறுத்தவரை குழு உணர்வை ஏற்படுத்துகிறார்; அது முழுக்க முழுக்க தன்னை மட்டுமே முன்னிறுத்துவதாக அமைந்திருக்கிறது” என்றும் ராஜ்மோகன் காந்தி கூறினார்.மோடியை கடுமையாக விமர்சித்த ராஜ்மோகன் காந்தி காங்கிரசையும் கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் என்ற இயக்கம் சர்தார் வல்லபாய் படேலை மறந்து வெகுகாலமாகிவிட்டது என்றும், அவர் மறைந்து 63 ஆண்டு காலம் ஆகியுள்ள நிலையில், அவரது பணிகளை சிறு அளவிற்கு கூட நினைவுகூர தயாராக இல்லாத கட்சியாக மாறிவிட்டது என்றும் கூறினார்.நேருவைத் தொடர்ந்து இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ்காந்தி, சோனியா காந்தி, தற்போது ராகுல்காந்தி என அவரது குடும்ப வாரிசுகள் அரசு அதிகாரத்தின் மூலமாக பலன்பெற்றார்கள்; ஆனால் படேலின் குடும்பத்திலிருந்து அப்படி யாரையும் சொல்ல முடியாது என்றும் ராஜ்மோகன் காந்தி கூறினார்.

நாட்டின் பிரதமராக ஜவஹர்லால் நேருவை மகாத்மா காந்தி முன்வைத்தபோது, நேருவை விட 16 ஆண்டுகள் மூத்தவராக இருந்த போதிலும் வல்லபாய் படேல் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார். ஏனென்றால் காங்கிரஸ்காரராக இருப்பதையும் காந்தியின் சீடராக இருப்பதை மட்டுமே அவர் பெருமிதமாக நினைத்தார் எனக்குறிப்பிட்ட ராஜ்மோகன் காந்தி, நேருவே பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்றும் சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்டவர் அவரே என்றும் ஏற்றுக்கொண்டவர் படேல் எனவும் குறிப்பிட்டார்.(பிடிஐ)