Sunday, 10 November 2013

குஜராத் 'உண்மை' - சராசரி தனி நபர் வருமானம் :

'Truth' about Gujarat Per Capita Income :



Per Capita Income / சராசரி தனி நபர் வருமானம் :
Canada - 52,219 $ = 31.9 Lakhs Rs.
Singapore - 51,709 $ = 31.5 Lakhs Rs.
USA - 49,965 $ = 30.5 Lakhs Rs.
UK - 38,514 $ = 23.5 Lakhs Rs.
UAE - 39,058 $ = 23.8 Lakhs Rs.
Saudi - 25,136 $ = 15.2 Lakhs Rs.

1) Delhi - 1.73 Lakh ( Now : 2.01 Lakhs  Rupees)
2) Goa - 1.67 Lakh
3) Chandigarh - 1.42 Lakh
4) Sikkim - 1.24 Lakh
5) Haryana - 1.08 Lakh
6) Puducherry - 1.02 Lakh
7) Maharashtra - 95,339 Rs.
8) Gujarat - 89,668 Rs.
9) TamilNadu - 88,697 Rs. ( Now : 98,550 Rupees )


Evidence / ஆதாரம் :

குஜராத் 'உண்மை' - மொத்த உள்நாட்டு உற்பத்தி !

'Truth' about Gujarat Gross Domestic Product ( GDP ) : 

Gross Domestic Product ( GDP ) / மொத்த உள்நாட்டு உற்பத்தி :
Saudi Arabia -  5.1 %
UAE           -  4.4 %
India           -  3.2 %
USA             -  2.2 %
Canada         -  1.7 %
Singapore     -  1.3 %
UK             -  0.3 %

Gross State Domestic Product ( GDP ) / மொத்த மாநில உற்பத்தி :
1) Bihar - 13.26 %
2) Madhya Pradesh - 11.81 %
3) Delhi - 11.34%
4) Arunachal Pradesh - 10.84%
5) Mizoram - 10.09%
6) Goa - 9.39%
7) Jharkhand - 8.92%
8) Gujarat - 8.53%


Evidence / ஆதாரம் :
http://data.worldbank.org/indicator/NY.GDP.MKTP.KD.ZG/countries ( Year : 2012 )

http://planningcommission.nic.in/data/datatable/0205/databook_comp0205.pdf ( Year : 2011-2012 , Page No : 133 )

http://pbplanning.gov.in/pdf/Statewise%20GSDP%20PCI%20and%20G.R.pdf

Friday, 8 November 2013

90 சதவீத இந்தியர்கள் மோடியை எதிர்க்கின்றனர்: பாலிவுட் பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர்

 
மும்பை: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியை 90 சதவீத இந்தியர்கள் எதிர்ப்பதாக பிரபல இந்தி பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர் தெரிவித்துள்ளார். 
 
பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடி குறித்து பிரபல இந்தி பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
 
 இது குறித்த அவரது ட்வீட், 
 
மோடியை எதிர்ப்பது தேச விரோத செயல் என்று சில முட்டாள்கள் தெரிவித்து வருகின்றனர். அப்படி என்றால் 90 சதவீத இந்தியர்கள் தேச விரோதிகள் என்று அவர்கள் கூற வருகிறார்களா? என்று கேட்டுள்ளார். முன்னதாக அவர் கடந்த மாதம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, டீசன்ட் இல்லாமல், தரக்குறைவான மெசேஜ்களை மோடி பிரியர்கள் எனக்கு அனுப்புகிறார்கள். அதில் இருந்தே அவரின் ஆதரவாளர்களின் தரம் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார். மோடி ஒரு நல்ல பிரதமராக இருக்க முடியாது என்று ஜாவித் அக்தர் கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, 7 November 2013

மோடி- ஒரு தமாஷ்!


நரேந்திர தாமோதர தாஸ் மோடி இந்திய நாட்டை ரட்சிக்க வந்த தேவதூதன், பாரத நாட் டைப் பாவிக்க வந்த மகா விஷ்ணுவின் அடுத்த கட்ட அவதாரம்போல இந்த நாட்டு ஊடகங்கள் காற்றடித்து வானில் பறக்க விடுகின்றனவே- அந்தச் சூட்சமத்தின் பின்ப(பு)லம் என்ன தெரி யுமா?

இந்தியாவில் ஊடகங் களில் பிரம்மாவின் நெற் றியிலே பிறந்த ஜாதியி னர் 71 சதவிகிதம். புதுடில்லியில் 300 இந்தி, ஆங்கில ஏடுகளில் மூத்த பத்திரிகையாளர்களில் தாழ்த்தப்பட்டவர் ஒருவ ரும் கிடையாது. எல்லாம் அவாள் மயமே!

மோடிபோல ஒரு தாழ்த்தப்பட்டவரோ பிற்படுத்தப்பட்டவரோ பேசி இருந்தால் எப்படி எப்படி யெல்லாம் கேலி பேசி, கிண்டல் அடித்து கூவத் தில் தூக்கி எறிந்திருப் பார்கள்.

வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் வ.உ.சி. தலைமையில் நடந்தது என்று சென்னையில் மோடி பேசவில்லையா? (ராஜாஜி தலைமையில் நடந்தது என்பதுதான் சரி!).

பாட்னாவில் என்ன பேசினார்? குப்தர் வம்ச பெருமையை நாம் நினைக் கும்போது சந்திரகுப் தரின் ராஜநீதி நினை விற்கு வருகிறது என் றாரே பார்க்கலாம். (சந் திரகுப்தர் மவுரிய வம்சம் என்பதே சரி!).

அடுத்த தமாஷ், அலக்சாண்டர் படை, உலகையே வென்றது. ஆனால், அந்தப் படை யைத் தோற்கடித்தவர்கள் பீகாரிகள் என்று பீகாரின் தலைநகரான பாட்னா வில் நீட்டி முழங்கினார்.

(உண்மை என்ன தெரி யுமா? அலக்சாண்டர் கங்கையைக் கடந்து இக்கரைக்கு வரவில்லை. தட்சசீலா என்று மோடி குறிப்பிடுவது பீகாரில் இல்லை, பாகிஸ்தானில் உள்ளது.

அலக்சாண்டர் சட்லஜ் நதிவரை மட்டுமே வந்தார் என்பது வரலாறு).

எப்படிப்பட்ட கோமா ளிக் கூத்துகள் இவை! மற்றவர்கள் இப்படியெல் லாம் உளறியிருந்தால், நம் ஊர் சோ ராமசாமி அய் யர்கள் எப்படியெல்லாம் நக்கல் அடித்திருப்பார் கள்!

- மயிலாடன்

Wednesday, 6 November 2013

முரட்டு இந்துத்துவாவாதியான மோடி செய்வாரா?

காதலியிடம் காதலன்:  உன்னைப் போன்ற அழ கான பெண்ணை முத்தமிட நான் 5000 ரூபாய் கூட கொடுப்பேன்.

காதலி: அய்யோ, நேற்று இரவு மகேஷ் எனக்கு முத்தம் கொடுத்தான். ஆனால் பணம் ஏதும் தரவில்லையே!

கணவனிடம் மனைவி: நேற்றிரவு ஷீலாவுடன் சந் தோஷமாக இருக்க எவ் வளவு பணம் கொடுத்தாய்?

கணவன்: நூறு ரூபாய் கொடுத்தேன்.

மனைவி: அவமானம்! அவளது காதலன் என்னி டம் வரும்போது, அய்ம்பது ரூபாய் மட்டுமே கொடுத் தான்.

சென்சஸ்அதிகாரி ஒருவர் ஓர் வீட்டின் பெண் மணியிடம்  கேட்கிறார்: உங்கள் கணவர் 9 ஆண்டுகளுக்கு முன் இறந்து போய்விட்ட போது, உங்களுக்கு எப்படி  5 வயதி லும் 3 வயதிலும் மகன்கள் உள்ளனர்?

நகைச்சுவைத் துணுக்குகள் என்ற கண்ணோட் டத்தில் பார்த்தாலும்கூட மேற்கண்டவை ரசிக்கத் தக்கவையல்ல - வெறுக்கத்தக்கவை. நகைச்சுவை என்ற மிக உயர்ந்த அம்சத்தைக் கொச்சைப்படுத் துவதாகும்.

எந்தப் பெண்ணும் இந்தத் தரங்கெட்ட வகையில் பேசவும் மாட்டார்; நடந்து கொள்ளவும் மாட்டார்.

இந்தநிலையில் பள்ளிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க எப்படித் தான் மனம் வந்ததோ?

சோ கூட்டம் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றதே - கொஞ்சுகின்றதே - அடுத்த பிரதமர் இவரை விட்டால் வேறு ஆள் யார்? என்று காற்றடித்து ஊதிப் பெருக்க வைக்கிறதே பார்ப்பன ஊடகங்கள் - அந்த மகத்தான குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரதாஸ் தாமோதரதாஸ் மோடியின் ஆட்சியில் தான் பள்ளிப் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.

இந்துத்துவாவாதிகளுக்கு இவைபற்றியெல்லாம் கவலை ஏது? இந்துத்துவா என்கிற போது அதன் மூலம் இந்து என்பதிலிருந்து தானே கிளைக்கிறது. அந்த இந்துவின் யோக்கியதைபற்றி அறிந்தவர் களுக்கு ஒரு பிஜேபி ஆட்சியில் இவ்வளவு ஆபாச மான  பாடத் திட்டங்கள் அமைவதில் ஆச்சரியம் இருக்கவே முடியாது.

அறிஞர் அண்ணா அவர்கள் முதல்  அமைச்சராக இருந்த நிலையில் சட்டப் பேரவையிலேயே சொன்னதைக் கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம். நினைத்தபின் கொஞ்சம் அசைப் போட்டும் பார்க்க வேண்டும். அப்படி சிந்திக்கும் பொழுது ஆசா பாசத்துக்கு   ஆட்படக் கூடாது; பக்தி என்னும் போதைக் கண்ணாடியையும் அணியக் கூடாது. அப்பொழுதுதான் எது ஒழுக்கம், எது ஒழுக்கக் கேடு என்பதும் புத்திக்கும் படும். இதோ அண்ணா பேசுகிறார். கண்ணன் தின்னும் பண்டம் எது? கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய் என்பதைக் கற்றுத் தர இப்படிப் போட்டிருக்கும். கைக்கெட்டாத பொருளை எவருக்கும் தெரியாமல் எப்படி எடுப்பது என்பதைச் சொல்லிக் கொடுக்கும் வகையில் இப்படம் இருக்கிறது. இப்படி நான் சொல்வதால் புராணம் கூடாது என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்தக் கருத்தை இங்கு சொல்லவில்லை. மாலை 6 மணிக்கு மேல் பொதுக் கூட்டத்தில் வைத்துக் கொள்கிறேன்.

பள்ளிக்கூடத்துக் கட்டடத்துக்குப் பக்கத்தில் உள்ள பிறர் வீட்டுத் தோட்டத்தில் காய்த்துத் தொங்குகிற மாங்கனியைப்பறிக்க சோனிப் பையன் ஒருவனைக் குனிய வைத்து மாங்காய் பறிக்கலாம் என்ற வழியை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதாக ஆகிறது. இந்தக் கருத்தை பகுத்தறிவு என்று எடுத்துக் கொண்டாலும் சரி, சுயமரியாதைக் கருத்து என்று எடுத்துக் கொண்டாலும் சரி, பயப்படாமல் உலக அறிவு என்று திருத்தி அமைத்தால் கல்வி அறிவும், தரமும் பெருகும்.

முதலமைச்சர் அண்ணா கல்வி மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளிக்கையில் 23.3.1967இல் பேசிய பேச்சின் ஒருபகுதி இது.

பகுத்தறிவுக் கண்ணோட்டம் முக்கியம் - பகுத்தறிவு என்பது வெறும் தகவலைச் சேகரிப்பது அல்ல - மனித நேயத்தையும், ஒழுக்கத்தையும் அளிப்பதாகும். அதனைத்தான் தந்தை பெரியார் போதித்தார்.

குஜராத்தில் பிஞ்சு உள்ளத்தில் ஆபாச நச்சு விதைகளைத் தூவுவதற்குக் காரணமானவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முரட்டு இந்துத்துவாவாதியான மோடி செய்வாரா? எங்கே பார்ப்போம்!

Tuesday, 5 November 2013

மோடியின் முகவரி

குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடி பார்ப்பனர்கள் கூட்டிய மாநாட்டில் பங்கு கொண்டு பின் வருமாறு பேசியுள்ளார்.

இந்தியக் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க பார்ப்பன சமூகம் உதவியது. நமது கலாச்சாரம் இன்னமும் அழியாமல் இருக்கிறதென்றால், அதற்குக் காரணம் பார்ப்பனர்கள்தான். பல நூற்றாண்டு காலமாக அவர்கள் ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அறிவைத் தொடர்ந்து அளித்து வந்துள்ளனர். இது சமூகத்துக்கு அவர்கள் செய்த மாபெரும் சேவையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியில் உள்ள பார்ப்பனர் அல்லாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான் இந்த மோடி. இவர் படித்தவராம்; விவரங்கள் அறிந்தவராம்; சிறந்த நிருவாகியாம் - ஊடகங்கள் அப்படித்தான் ஊதிப் பெருகச் செய்து தகவல்களைக் உலவ விடுகின்றன.

இவர் படிப்பின் தகுதி - சிந்தனை வளம் எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்குப் பார்ப்பனர் சங்க நிகழ்ச்சிக்குச் சென்று அவர் தெரிவித்துள்ள இந்தக் கருத்துக்களே போதுமானவை.

பார்ப்பனர்களிடத்தில் பக்தியோடு யார் கொழுத்த அடிமையாக இருப்பாரோ, அவரைத்தான் அவர்கள் தூக்கிப் பிடிப்பார்கள் என்பதை நாடு அறியும்.

(1) செல்வி உமா பாரதியும், உத்திரப் பிரதேச கல்யாண் சிங்கும் பார்ப்பனர் அல்லாதவர்களாக  பி.ஜே.பி.யில் இருந்ததால் என்ன பாடுபடுத்தப் பட்டார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பங்காரு லட்சமணரின் கதி என்ன?

உமா பாரதி மிக வெளிப்படையாகச் சொன்னாரே பி.ஜே.பி. என்பது பிராமின் பார்ட்டி (பார்ப்பனர் கட்சி) என்று அடித்துக் கூறவில்லையா?
மத்தியப் பிரதேசத்தில் முதல் அமைச்சராக அவர் ஏன் தொடர முடியவில்லை?

ஒரு வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டார் என்பதற் காக அறிவு நாணயமான முறையில் அரசியல் பண் பாட்டோடு முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

அந்த வழக்கில் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் இறுதியாகத் தீர்ப்பு அளித்துவிட்ட பிறகு, மரியாதை யாக அறிவு நாணயமாக முதல் அமைச்சர் பதவியை அவருக்கு அளித்திருக்க வேண்டுமா, வேண்டாமா?

பாபர் மசூதி இடிப்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எல்லாம் மத்திய அமைச்சர்களாக இருந்தார்களே!

ஏனிந்த இரட்டை அளவுகோல் என்பதை நரேந்திர மோடி சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

(2) இந்தியக் கலாச்சாரத்தைப் பார்ப்பனர்கள் கட்டிக் காத்தார்களாமே! எந்தக் கலாச்சாரத்தைக் காப்பாற்றிக் கொடுத்தார்கள்?

பிறப்பின் அடிப்படையிலேயே பேதம் - உயர் ஜாதி - கீழ் ஜாதி பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன் - பிரம்மாவின் காலில் பிறந்தவன் - என்கிற மனித உரிமைக்கும் நேயத்துக்கும், பண்பாட்டுக்கும், அறிவுக்கும் பொருத்தமில்லாத அந்தக் கயிறு திரிப்புகள்தானே இந்தப் பார்ப்பனப் பண்பாடு.

இது ஓர் அநாகரிக அமைப்பு முறையல்லவா? சூத்திரர்களும், பெண்களும் பாவயோனியில் பிறந்த வர்கள் என்று கூறும் கீதைதானே பார்ப்பனர்கள் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் பொக்கிஷம்?

இவற்றை ஏற்றுக் கொண்டால் இந்த நரேந்திர மோடியார்? பிரம்மாவின் காலில் பிறந்த நாலாவது ஜாதிதானே. சூத்திரர்தானே - வேசி மகன்தானே!
பதவி கிடைத்தால் போதுமா? மான உணர்ச்சி வேண்டாமா? பார்ப்பனர்கள் அறிவாளிகளா? அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மிக அழகாகச் சொன்னாரே - பார்ப்பனர்கள் படித்தவர்கள்தானே தவிர அறிவாளிகள் அல்லர் என்று ஆய்வு பூர்வமாகச் சொன்னாரே!

குழந்தைப் பேற்றுக்காக; உடல் பூராவும் நெய்யைத் தடவிக் கொண்டு யாருடனும் புணரலாம் என்பது தானே பார்ப்பனர்கள் கற்பித்த இந்துத்துவப் பண்பாட்டு முறை! சுத்த காட்டு விலங்காண்டிகள் ஆயிற்றே!

பதவித் துண்டு கிடைத்துவிட்டால் எவ்வளவு அடிமைத் தனத்துக்கும் அனுமார்கள் ஆட்படுவார்கள் என்பதற்கு மோடி ஒருவர் போதுமே! வெட்கம்! மகாமகாவெட்கம்!!

குஜராத் முதல் மாநிலமா?

தமிழ்நாட்டில் பி.ஜே.பி.க்கு, சங்பரிவார்களுக்கு அடிப்படை இல்லை என்பது தெரிந்து விட்டது. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பி.ஜே.பி. பெரும்பான்மையான இடங்களில் கட்டிய பணத்தைக் கூட (Deposit) திருப்பப் பெற முடியாத நிலை.

ஒவ்வொரு தேர்தலிலும்  திராவிட இயக்கக் கட்சிகளின் தோள்களில் ஓசியில் ஏறிக் கொண்டு பதவிப் பழம் ருசித்துக் கொண்டிருந்த இந்தக் கட்சியின் வண்டவாளம் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெட்கக் கேடான முறையில் அம்பலமாகி விட்டது.

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மக்கள் கொடுத்த மரண அடியின் காரணமாகத்தான் மத்திய ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை; இதனை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் எல்.கே. அத்வானி.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பி.ஜே.பி.க்கு எப்படியும் ஓர் அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற வெறியோடு பூணூலை முறுக்கிக் கொண்டு படாத பாடுபடுகிறார் திருவாளர் சோ. ராமசாமி.

நரேந்திர மோடியை தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதும், செல்வி ஜெயலலிதாவைச் சந்திக்க வைப்பதுமான அரசியல் புரோக்கர் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டு திரிகிறார்.

நரேந்திரமோடியை இந்திரன் சந்திரன் என்று புகழ் மாலைசூட்டி அர்ச்சனை செய்கிறார். இவ்வளவுக்கும் மோடி ஒன்றும் பார்ப்பனர் அல்லர்.

இருந்தும் ஏன் இந்த மோடிக்காக, மோடி மஸ்தான் வேலையில் இறங்குகிறது இந்தப் பூணூல்.

மோடி அளவுக்கு சிறுபான்மை மக்களை வேட்டையாடுபவர்கள் இந்துத்துவ வெறியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில்  எங்குத் தேடினாலும் கிடைக்க மாட்டார்களே! கோவில்களில் ஆட்டுக் கிடாவைப் பலியிடுவது போல, கோழிகளின் கழுத்தைத் திருகிப் போடுவதைப்போல அல்லவா இஸ்லாமிய மக்களை ஆயிரக்கணக்கில் குரூரமான முறையில் கொன்று குவித்து அவர்களின் ரத்த ஆற்றில் நீந்தித் திளைத்தார்.

இப்படி ஓர் ஆள் கிடைத்தால்  பார்ப்பனர்களுக்கு மிகப் பெரும் வாய்ப்புதானே! அதனால்தான் மோடிக்கு லாலி பாடிக் கொண்டிருக்கிறார். துக்ளக் இதழில் குஜராத் மாநிலத்தில் பாலாறும், தேனாறும் பாய்கிறது என்று தொடர் கட்டுரைகளை எழுதிடச் செய்துள்ளார்.

குஜராத் போல நல்லாட்சி இந்தியாவுக்குக் கிடைக்க வேண்டுமா? அப்படியானால் நரேந்திரமோடியை இந்தியாவின் பிரதமராக்குங்கள் என்ற முழக்கத்தைக் கொடுத்து வருகிறார்.

அப்படிப் பார்த்தாலும் அவர் கூறுவதாவது உண்மையா என்றால் அதுதான் இல்லை; எல்லாம் வெத்து  வேட்டு இட்டுக் கட்டிச் சொல்லப்படும் தகவல்கள்.

மனிதவள அடிப்படையில் இந்தியாவில் குஜராத்துக்கு உரிய இடம் - 20. வருமான அடிப்படையில் ஆறாவது இடம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4ஆவது இடம், தனிநபர் வருமான அடிப்படையில் 9ஆவது இடத்திலும், பாலின விகித அடிப்படையில் 22 ஆவது இடத்திலும், கல்வியில் 14ஆவது இடத்திலும், மின் உபயோகத்தில் 10ஆம் இடத்திலும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுச் செய்திகளை அறிவோர் விகித அடிப்படையில் ஆண்கள் 12ஆம் இடத்திலும்,  பெண்கள் 15ஆம் இடத்திலும், சரியான உடல் எடை விகிதத்தில் ஆண்கள் 11ஆம் இடத்திலும், பெண்கள் 12ஆம் இடத்திலும் உள்ளனர்.

தொலைக்காட்சியுடையோர் கணக்கிட்டால் 11ஆம் இடத்திலும், மொத்த சாலைகளின் நீளத்தில் 10ஆம் இடத்திலும், சாலைகளில் அடர்த்தி  விசயத்தில் 21ஆவது இடத்திலும், மின் நிலைய நிர்மாண இடத்தில் 2ஆவது இடத்திலும், மருத்துவமனையில் பிரசவம் நடக்கும் இடத்தில், 8ஆவது இடத்திலும் சராசரி வாழ்நாளில் ஆயுள் அளவில் 10ஆம் இடத்திலும் இருக்கிறது.

ஏராளமான சலுகைகளை அளித்து அந்நிய முதலீட்டைக் கவருவதில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் இந்த மாநிலம் உற்பத்தியில் நான்காம்  இடத்தில் இருப்பது ஏன்?

இந்த யோக்கியதையில் உள்ள ஒரு மாநிலம்தான், இந்தியாவில் நல்லாட்சி நடக்கும் மாநிலமாம், மக்கள் வளமாக வாழும் மாநிலமாம்.

சோ கூட்டம் புளுகுகிறது -  மயக்க மிட்டாய்க் கொடுக்கிறது - பொது மக்களே ஏமாறதீர்! கவனம்! கவனம்!!