Thursday 7 November 2013

மோடி- ஒரு தமாஷ்!


நரேந்திர தாமோதர தாஸ் மோடி இந்திய நாட்டை ரட்சிக்க வந்த தேவதூதன், பாரத நாட் டைப் பாவிக்க வந்த மகா விஷ்ணுவின் அடுத்த கட்ட அவதாரம்போல இந்த நாட்டு ஊடகங்கள் காற்றடித்து வானில் பறக்க விடுகின்றனவே- அந்தச் சூட்சமத்தின் பின்ப(பு)லம் என்ன தெரி யுமா?

இந்தியாவில் ஊடகங் களில் பிரம்மாவின் நெற் றியிலே பிறந்த ஜாதியி னர் 71 சதவிகிதம். புதுடில்லியில் 300 இந்தி, ஆங்கில ஏடுகளில் மூத்த பத்திரிகையாளர்களில் தாழ்த்தப்பட்டவர் ஒருவ ரும் கிடையாது. எல்லாம் அவாள் மயமே!

மோடிபோல ஒரு தாழ்த்தப்பட்டவரோ பிற்படுத்தப்பட்டவரோ பேசி இருந்தால் எப்படி எப்படி யெல்லாம் கேலி பேசி, கிண்டல் அடித்து கூவத் தில் தூக்கி எறிந்திருப் பார்கள்.

வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் வ.உ.சி. தலைமையில் நடந்தது என்று சென்னையில் மோடி பேசவில்லையா? (ராஜாஜி தலைமையில் நடந்தது என்பதுதான் சரி!).

பாட்னாவில் என்ன பேசினார்? குப்தர் வம்ச பெருமையை நாம் நினைக் கும்போது சந்திரகுப் தரின் ராஜநீதி நினை விற்கு வருகிறது என் றாரே பார்க்கலாம். (சந் திரகுப்தர் மவுரிய வம்சம் என்பதே சரி!).

அடுத்த தமாஷ், அலக்சாண்டர் படை, உலகையே வென்றது. ஆனால், அந்தப் படை யைத் தோற்கடித்தவர்கள் பீகாரிகள் என்று பீகாரின் தலைநகரான பாட்னா வில் நீட்டி முழங்கினார்.

(உண்மை என்ன தெரி யுமா? அலக்சாண்டர் கங்கையைக் கடந்து இக்கரைக்கு வரவில்லை. தட்சசீலா என்று மோடி குறிப்பிடுவது பீகாரில் இல்லை, பாகிஸ்தானில் உள்ளது.

அலக்சாண்டர் சட்லஜ் நதிவரை மட்டுமே வந்தார் என்பது வரலாறு).

எப்படிப்பட்ட கோமா ளிக் கூத்துகள் இவை! மற்றவர்கள் இப்படியெல் லாம் உளறியிருந்தால், நம் ஊர் சோ ராமசாமி அய் யர்கள் எப்படியெல்லாம் நக்கல் அடித்திருப்பார் கள்!

- மயிலாடன்

No comments:

Post a Comment