Sunday 3 November 2013

மோடி-டெண்டுல்கர் மற்றும் விநாயகர்: இவை எல்லாம் பார்ப்பனீயம் நம்மை வீழ்த்த வைத்திருக்கும் ஆயுதங்கள்


சமீபத்தில் ஒரு நண்பர் கேட்டார், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மோடியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துவதை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்றார்.
பிற்படுத்தப்பட்டவர் என்பதால் கொலைகாரன், கொள்ளைக்காரன், முடிச்சவிழ்க்கி, பிக்பாக்கெட், காமக் கொடூரன், சாமியார்கள் இவர்களை யெல்லாம் கண்மூடித்தனமாக ஆத ரித்துவிடமுடியுமா? அதே நேரத்தில், இதே தவறுகளை செய்த பார்ப் பானுக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதி என்று பாகுபாடு பார்த்தால் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் வெகுண்டெழுவோம்.
காஞ்சி சங்கரனிலிருந்து சவுண் டிப் பார்ப்பான்வரை குற்றம் செய்து விட்டு ஒன்றும் தெரியாத மாதிரி பவனி வரும்பொழுது, பிற்படுத்தப்பட்ட சமு தாயத்தைச் சேர்ந்த லாலுவை (குற்றம் நிரூபிக்கப்பட்ட பொழுதும்) உள்ளே தள்ளியது மனசை நெருடுகிறது; என்ன செய்வது! பார்ப்பானுக்கு நீதி அஞ்சலில் வருகிறது என்றால் (பெரும் பான்மையான நேரத்தில் விலாசம் எழுதப்படாத அஞ்சல் மாதிரி அலைக் கழிக்கப்படுவதும் உண்டு), மற்றவற்கு ஈமெயிலில் அல்லவா வருகிறது.
மோடி பிற்படுத்தப்பட்டவர் என் றாலும் கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ். காரர். அக்மார்க் இந்துத்துவா வெறி யர். ஆயிரக்கணக்கான இசுலாமியர் களை வெட்டிச் சாய்க்க துணை நின்றவர். வரலாற்றில், ஹிட்லருக்குப் பிறகு ஒரு அரசாங்கமே தனது குடி மக்களை கொன்று குவிப்பதைக் கண்டு ரசித்தவர். (ராஜபக்சே அதை யும் விஞ்சி விட்டார் என்பது வேறு விஷயம்). துப்புரவுத் தொழிலாளியை நீ செய்யும் வேலை கடவுளுக்கு செய்யும் காரியம். கடவுளின் அன்பும், ஆதரவும் உனக்கு கிடைக்கும். துப்புரவு செய் பவர்கள், வால்மீகிக்கு ஒப்பானவர்கள் என்று எழுதியது, மோடி யார், எப்படிப் பட்டவர் என்பதை பட்டவர்த்தனமாக அல்லவா சொல்கிறது. அவர் சார்ந்த ஆர்.எஸ்.எஸ்-இன் இந்து கர்மா கருத்தினை நிறுவும் செயல்தானே அது?
பார்ப்பானுக்கு நேரடியாக பருப்பு வேகாது என்றால் மோடி போன்ற குறி யீடுகள் மூலம் நம்மை ஒடுக்க முயற்சிப் பான். அக்குறியீடுகளை சந்திரன், இந் திரன் என்றும் புகழ்வான். அவர்களுக்கு எல்லா நல்ல குணங்களையும் ஏற்றுவான். (கல்லுக்கே மந்திரத்தை ஏற்றி கடவுள் ஆக்கியவனுக்கு இது எம்மாத்திரம்?) அக்குறியீடுகளை அங்ஙனம் புனிதப் படுத்தி, அவர்களை யாரும் எதுவும் விமர் சிக்க முடியாத இடத்தில் வைப்பான். நம்மவர்களும் வாய்பிளந்து கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். அப்படிப்பட்ட புனிதர்களை ஜோடித்து ஊர் ஊராய் உற்சவம் நடத்துவார்கள். ஊரிலே இருக் கும் எல்லா பார்ப்பானும் வழக்கத்துக்கு மாறாக புது சொக்காய் போட்டுக்கிட்டு கிளம்பிடுவான்.
மோடியின் சமீப சென்னை விஜயத் தின் பொழுது விட்டல் மாமாவிலிருந்து பழைய கிரிகெட் வீரர் சிறீகாந்த் அத்திம் பேர் வரை முண்டியடிச்சுக்கிட்டுப் போறாங்கனா ஒரு வேளை மோடி பிரதமர் ஆக வந்துட்டாருன்னா அவாளும் பூணூ லில் கொஞ்சம் முதுகை சொரிஞ்சிக் கிலாம் பாருங்க.
அக்ரகாரத்து அம்பிங்க துள்ளி குதிக் கிறாங்கன்னாலே அதற்கு அர்த்தமே வேற. மோடி வந்தவுடன் எப்படியாவது, இட ஒதுக்கீட்டுக்கு சாவு மணி அடிச் சிடலாம்; இந்து, தருமம், வருணாசிரமம் என்ற இத்துப் போன பாத்திரத்திற்கு எல்லாம் புது முலாம் பூசி, பவனி விடலாம். மீண்டும் பேஷா எங்கும் அவா, எதிலும் அவாஎன்று ஆக்கிடலாம். நன்னா வயிறு முட்ட பருப்பும், நெய்யும் கலந்த சோற்றை சாப்பிட்டு விட்டு, வாய் மணக்க கும்ப கோணம் வெற்றிலையும் (வெத்தல்ல செல்லம்) சீவலையும் போட்டுக்கிட்டு இந்த சூத்திரப் பசங்களையும், சேரிப்பசங் களையும் மோத விட்டு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் மாதிரி ரசித்துப் பார்ப்பான் (அதான் பார்ப்பான் ஆச்சே). அதனாலேதான் கன்னியாகுமரி பார்ப்பான் வரை நெரிக் கட்டின மாதிரி துடிக்கிறான். எப்படியாவது மோடியை, பிரதமர் ஆக்கிட. குஜராத், நாட்டிலேயே வளர்ச்சியில் முதல் மாநிலம்ன்னு சொன்ன கதை இப்ப சாயம் வெளுத் துடிச்சி. நேர்மை, லஞ்ச லாவண்யம் இல்லாத அரசு பாஜக தரும்னு சொன்னா அவங்க கட்சிக்காரனே நம்ப மாட்டான். நிலையான ஆட்சி கொடுப்பாங்க ளான்னா. பழைய வாஜ்பேயி ஆட்சி வேற நினைவுக்கு வந்து பயமுறுத்துது. அப்ப மோடி முட்டி மோதிப் பார்த்தாலும் அமெரிக்காக்காரன் விசா கொடுக்க மாட்டேன்கிறான். வாஜ்பேயி, பிரதமர் என்று சொன்ன பொழுதாவது கூட ரெண்டுக் கட்சி வந்து சேர்ந்தது. மோடி மாமா பேரைக் கேட்டவுடனே இருந்த இரண்டு கட்சியும் ஓடிப்போயிடிச்சி. அத் வானி தாத்தாவும் முடுக்கிக் கிட்டு நிக்க றாரு. அப்படி மோடி என்னதான் கிழிப் பாரு?
பார்ப்பான்களுக்கு எல்லா கதவுகளை யும் திறந்து விடுவது மட்டுமின்றி, எதிர்ப் புக் குரல்களை மெல்ல நசுக்கி, ஹிட்லர் போல பாசிச ஆட்சி நடத்துவார். சாமான்ய மக்களுக்கு பல வருடங் களாகவே அரசு நிர்வாகத்தின் மீது கோபம் உண்டு. காரணம், லஞ்சம், வேலையில் அலட்சியம், அதிகார போதை இந்தக் காரணங்களால் மக்களுக்கு அரசாங்க நிருவாகத்தின் மீது எப்பொழுதும் ஒரு வெறுப்பு உண்டு. (முன்பு ஒரு முறை ஜெ அரசாங்கம், அரசு அதிகாரிகளையும், ஊழியர்களையும் ஒட்டு மொத்தமாக சிறையில் அடைத்த பொழுது சாமா னிய மனிதன் அதைக் கண்டு ரசித் தான். பாராட்டினான்.) அதனால் மோடி ஆட்சியில் நிருவாகத்தில் சீர் திருத்தம். கண்டிப்பு என்கிற பெயரில் இந்துத்துவ எதிர்ப்பாளர்களும், சிறு பான்மையினரும் பழி வாங்கப்படலாம். மக்கள் அதை உணராமல் தவறு களைத்தானே களை எடுக்கிறார்கள் என்று பாராட்டுவார்கள். எதிர்த்து எழுதுபவர்களும் கேள்விக் கேட்பவர் களும், திடீரென காணாமல் போய் விடு வார்கள்; என்கவுன்ட்டர்கள் சாதார ணமாக நடக்கும். அதை நியாப்படுத்தி பத்திரிகைகள்

No comments:

Post a Comment